வீரம் என்பதற்கான விளக்கமே கூட மாறுபடக் கூடிய காலம் இது. இந்தக் கால கட்டத்தில் மனிதன் விலங்குடன் சண்டை போட்டு வெற்றி பெறுவது வீரம் என்று நினைக்க முடியாது. ஜல்லிக்கட்டு என்று சொல்லி, மதுரை, சேலம் போன்ற மாவட்டப் பகுதிகளில் சீறிப் பாயும் காளைகளை அடக்குவது என்ற ஒரு விபரீத நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. மனிதன் விலங்கோடு மோதும் இந்தச் சண்டையில் ஏராள மனித உயிர்கள் கோரமான முறையில் பலியாகின்றன. இளைஞர்கள் கொல்லப்படுகிறார்கள். வேடிக்கை பார்க்கும் பொதுமக்கள் மத்தியிலே காளை புகுந்து விரட்டுவதால் நூற்றுக்கணக்கானோர் பலத்த காயங்களுக்கு ஆளாகி வருகிறார்கள்.
மதுரை மாவட்டம் சத்திரப்பட்டியில் நடை பெற்ற இந்த ஜல்லிக்கட்டில், 120 பேர்கள் காயம் அடைந்ததாகவும், 13 பேர்கள் கவலைக்கிடமாக மதுரை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. சேலம் அருகிலும் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. தொடர்ந்து இது மாதிரியான கோரங்கள் நடந்துகொண்டும் இருக்கின்றன.
கலாச்சாரம், பாரம்பரியம் என்ற பேரில் மனிதப் படுகொலைகள் நடைபெற்று வருவதை அனுமதிக்கலாமா, அனுமதிக்க வேண்டுமா என்பது அறிவார்ந்த வினாவாகும். ``புலியிடம் சண்டை போட்டு, அதன் பல்லைப் பிடுங்கி வந்துதான் தாலி கட்டினான் தமிழன்’’ என்று சொல்லும் தமிழ்ப் புலவர்கள் நம் நாட்டில் உண்டு (தமிழர் திருமணத்தில் தாலி உண்டா? என்ற வினாவை எழுப்பி அதற்கு நல்ல பதிலைத் தந்துள்ளார் டாக்டர் இராச மாணிக்கனார் என்பது வேறு விடயம்!).
அந்த மரபைக் காக்கவேண்டும் என்பதற்காக இப்பொழுது மணமகனைக் காட்டுக்கு அனுப்பி புலியைக் கொன்று, அதன் பல்லைக் கொண்டு வா என்று கூற முடியுமா? இதனைச் சமூகம்தான் அனுமதிக்குமா? சட்டம்தான் ஏற்றுக்கொள்ளுமா? எந்த மணமகன்தான் ஏற்றுக் கொள்வான்!
கால ஓட்டத்தில் எத்தனையோ பழக்க வழக்கங்கள் குப்பைத் தொட்டிக்குள் போய் விட்டன. இந்த நிலையில் காளையை அடக்குவது என்பது வீரம் என்றும், அதனை மெய்ப்பித்துக் காட்டவே இந்த மஞ்சு விரட்டு விளையாட்டு என்றும் கதைப்பதெல்லாம் காலத்துக்குப் பொருந்தக் கூடியவையல்ல.
மதி பலமும், உடல் பலமும் நிறைந்ததுதான் வீரமாக இருக்க முடியும். முரட்டுத்தனமும், வெறும் சதைப் பலமும் தான் வீரம் என்று நினைப்பது விவேகமாக இருக்க முடியாது. வீரத்தை நிரூபிக்கப் போகிறோம் என்று கூறி, இளைஞர்கள் பலியாவதும், பொது மக்கள் படுகாயம் அடைவதும் சகிக்க முடி யாததாக, மனித நேயமற்றதாக இருக்கிறது. இதனை அரசு எப்படி அனுமதிக்கிறது என்பது (நியாயமான) கேள்வி.
பாரம்பரியப் பிரச்சினையில் எப்படி கை வைப்பது என்று அரசு நினைக்கலாம். பாரம்பரியம் உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் போது, அரசின் கடமை என்று ஒன்று இருக்கிறதே - அதனை நினைத்துப் பார்க்க வேண்டாமா?
இதுகுறித்து பல தரப்பிலும் சர்ச்சைகள், விவாதங்கள் கிளம்புவதுகூட அவசியமாகும். நமக்கு ஏன் வீண் வம்பு என்று பொறுப்புள்ளவர்கள் ஒதுங்கிக் கொள்ளக்கூடாது.
நன்றி: விடுதலை
1.27.2006
1.14.2006
தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்
உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்.
சித்திரை முதல் நாளையே புத்தாண்டின் தொடக்கமாக பெரும்பாலோர் கருதி கொண்டாடி வருகின்றனர். ஆண்டின் பெயர்கள்கூட தமிழில் இல்லை எனும்போது அது எவ்வாறு தமிழர்களின் ஆண்டாகக் கருதப்படும் என்பதை இவர்கள் உணர்வதில்லை. அப்படியென்றால் தமிழனின் புத்தாண்டு - உண்மையான - சரியான- வரலாற்று ரீதியான புத்தாண்டுத் தினம்தான் எது?... தமிழனுக்கு தைத்திங்கள் முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு ஆகும்...‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்ற முதுமொழியை ‘புத்தாண்டு வந்தால் புதுவாழ்வு மலரும்’ -என்ற கருத்தோடு ஒப்பு நோக்கிப் பார்க்க வேண்டும்.”
தையே முதற்றிங்கள்; தை முதலே ஆண்டு முதல்
பத்தன்று; நூறன்று; பன்னூறன்று
பல்லாயிரத் தாண்டாய்த் தமிழர் வாழ்வில்
புத்தாண்டு தைம் முதல் நாள் பொங்கல் நன்னாள்
நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு
அண்டிப் பிழைக்க வந்த ஆரியக் கூட்டம் காட்டியதே
அறிவுக்கு ஒவ்வாத அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழர்க்கு
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு
- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
தமிழ் ஆண்டு குறித்து மேலும் அறிய....
http://www.tamilnation.org/forum/sabesan/050421sabesan.htm
http://semparuthi.com/x/modules/news/article.php?storyid=122
சித்திரை முதல் நாளையே புத்தாண்டின் தொடக்கமாக பெரும்பாலோர் கருதி கொண்டாடி வருகின்றனர். ஆண்டின் பெயர்கள்கூட தமிழில் இல்லை எனும்போது அது எவ்வாறு தமிழர்களின் ஆண்டாகக் கருதப்படும் என்பதை இவர்கள் உணர்வதில்லை. அப்படியென்றால் தமிழனின் புத்தாண்டு - உண்மையான - சரியான- வரலாற்று ரீதியான புத்தாண்டுத் தினம்தான் எது?... தமிழனுக்கு தைத்திங்கள் முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு ஆகும்...‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்ற முதுமொழியை ‘புத்தாண்டு வந்தால் புதுவாழ்வு மலரும்’ -என்ற கருத்தோடு ஒப்பு நோக்கிப் பார்க்க வேண்டும்.”
தையே முதற்றிங்கள்; தை முதலே ஆண்டு முதல்
பத்தன்று; நூறன்று; பன்னூறன்று
பல்லாயிரத் தாண்டாய்த் தமிழர் வாழ்வில்
புத்தாண்டு தைம் முதல் நாள் பொங்கல் நன்னாள்
நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு
அண்டிப் பிழைக்க வந்த ஆரியக் கூட்டம் காட்டியதே
அறிவுக்கு ஒவ்வாத அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழர்க்கு
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு
- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
தமிழ் ஆண்டு குறித்து மேலும் அறிய....
http://www.tamilnation.org/forum/sabesan/050421sabesan.htm
http://semparuthi.com/x/modules/news/article.php?storyid=122
12.23.2005
பா.ஜ.க.வின் நேர்மை
ஒழுக்கம், நேர்மை, தேசப்பற்று இவற்றில் மற்ற கட்சியினரைவிட உயர்ந்த நிலையில் இருப்பதாக பெரும்பாலான (ஆதிக்க சாதியினரின்) பத்திரிக்கைகளும், பல்கலைவித்தகர்களாலும் சொல்லப்பட்டு நம்பவைக்கப்பட்ட பா.ஜ.க.வின் நிலை இப்போது சந்தி சிரிக்கிறது.
மக்கள் பிரச்சனையை மக்கள் மன்றத்தில் பேசுவதற்கு இலஞ்சம் வாங்கியதாக ஆளும் காங்கிரஸ் உறுப்பினர் உட்பட 11பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு, அது நிரூபிக்கப்பட்டுவிட்டது. குற்றவாளிகளின் பதவியை பறிக்க வேண்டும் என்ற பரிந்துரையுடன் விசாரனைக்குழு மக்களவையில் சமர்ப்பித்தது. மக்களவை அவர்களின் பதவியைப் பறித்துள்ளது.
குற்றம் செய்த அரசியல்வாதிகள், முதல் முறையாக குற்றச்சாட்டு எழுந்த மிகக்குறுகிய காலத்தில் தண்டிக்கப்பட்டுள்ளது மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும். இந்நிலை தொடர்ந்தால் வரும் காலங்களில் ஊழல் குறைய வாய்ப்பு உண்டு.
ஆனால், தேசப்பற்றை குத்தகைக்கு எடுத்துக் கொண்டதாக மார்தட்டிக் கொள்ளும் பா.ஜ.க. இதனை எதிர்க்கிறது. காரணம் அதிக ஊழல்வாதிகளை உறுப்பினர்களாகக் கொண்ட கட்சியல்லவா? (ஒருவேளை இலஞ்சம் வாங்குவது தேசப்பற்றின் அடையாளமோ?)
இந்த அயோக்கியர்கள் கூறுகிறார்கள்.... 'குற்றம் செய்தவரை தண்டிக்க வேண்டும்தான். ஆனால் அதற்கு வரைமுறை வேண்டும்...'
குற்றவாளி என்று தெரிந்துவிட்டது. ஆனாலும் அவர்களை தண்டிக்க வரைமுறை வேண்டுமாம். தேசத்தந்தையை கொன்ற கும்பல்களிலிருந்து வந்தவர்கள்தானே... இதற்கு மேலும் பேசுவார்கள். அவர்களுக்கு ஆதரவாக பல்கலைவித்தகர்களும் எழுதுவார்கள்.
இந்திய வரலாற்றில் முதல்முறையாக 11 குற்றவாளி உறுப்பினர்களை உடனடியாக தன்டித்த காங்கிரசு அரசுக்கும் மக்களவையை திறம்பட நடத்திச் செல்லும் சோம்நாத் சட்டர்ஜி அவர்களுக்கும் இந்தியக் குடிமகனாக இருந்து வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவிப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.
மக்கள் பிரச்சனையை மக்கள் மன்றத்தில் பேசுவதற்கு இலஞ்சம் வாங்கியதாக ஆளும் காங்கிரஸ் உறுப்பினர் உட்பட 11பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு, அது நிரூபிக்கப்பட்டுவிட்டது. குற்றவாளிகளின் பதவியை பறிக்க வேண்டும் என்ற பரிந்துரையுடன் விசாரனைக்குழு மக்களவையில் சமர்ப்பித்தது. மக்களவை அவர்களின் பதவியைப் பறித்துள்ளது.
குற்றம் செய்த அரசியல்வாதிகள், முதல் முறையாக குற்றச்சாட்டு எழுந்த மிகக்குறுகிய காலத்தில் தண்டிக்கப்பட்டுள்ளது மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும். இந்நிலை தொடர்ந்தால் வரும் காலங்களில் ஊழல் குறைய வாய்ப்பு உண்டு.
ஆனால், தேசப்பற்றை குத்தகைக்கு எடுத்துக் கொண்டதாக மார்தட்டிக் கொள்ளும் பா.ஜ.க. இதனை எதிர்க்கிறது. காரணம் அதிக ஊழல்வாதிகளை உறுப்பினர்களாகக் கொண்ட கட்சியல்லவா? (ஒருவேளை இலஞ்சம் வாங்குவது தேசப்பற்றின் அடையாளமோ?)
இந்த அயோக்கியர்கள் கூறுகிறார்கள்.... 'குற்றம் செய்தவரை தண்டிக்க வேண்டும்தான். ஆனால் அதற்கு வரைமுறை வேண்டும்...'
குற்றவாளி என்று தெரிந்துவிட்டது. ஆனாலும் அவர்களை தண்டிக்க வரைமுறை வேண்டுமாம். தேசத்தந்தையை கொன்ற கும்பல்களிலிருந்து வந்தவர்கள்தானே... இதற்கு மேலும் பேசுவார்கள். அவர்களுக்கு ஆதரவாக பல்கலைவித்தகர்களும் எழுதுவார்கள்.
இந்திய வரலாற்றில் முதல்முறையாக 11 குற்றவாளி உறுப்பினர்களை உடனடியாக தன்டித்த காங்கிரசு அரசுக்கும் மக்களவையை திறம்பட நடத்திச் செல்லும் சோம்நாத் சட்டர்ஜி அவர்களுக்கும் இந்தியக் குடிமகனாக இருந்து வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவிப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.
12.06.2005
அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளில்...
டிசம்பர் 6 - ஒரு வரலாற்றுக் குறிப்பு நாள் - அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாள். ஆனால் அந்த நாளைக் கொச்சைப்படுத்தியவர்கள் சங்பரிவார்க் கும்பலும், பாரதீய ஜனதாவும் அந்த நாளினைத் தேர்ந்தெடுத்துத்தான் அயோத்தியில் 450 ஆண்டு கால வரலாறு படைத்த பாபர் மசூதியை இடித்துத் தூள் தூளாக்கினர் (1992).
அம்பேத்கர் அவர்கள் இந்து மதத்துக்கு முழுக்குப் போட்டு பல லட்சம் தாழ்த்தப்பட்ட சகோதரர்களுடன் புத்த மார்க்கத்தைத் தழுவினார். அந்த ஆத்திரத்தையும் மனதிற் கொண்டு, மாற்று மதத்தினரின் வழிபாடு இடத்தை வன்முறையால் அடித்து நொறுக்கினர். இந்த யோக்கியதையில் இந்தக் கூட்டம் அம்பேத்கர் ஜெயந்தி கொண்டாடுவதும் - இவர்களின் ரத யாத்திரை வாகனத்தில் அம்பேத்கர் படத்தை மாட்டி வைப்பதும் எத்தனைப் பெரிய பித்தலாட்டமும் வஞ்சகமும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
``மேல் ஜாதிக்காரர்கள் என்று சொல்லிக் கொள்ளுகின்றவர்களிடத்தில் நம்மீது கருணை ஏற்படும்படி நாம் செய்து வந்த முயற்சிகள் எல்லாம் வீணாய்ப் போய்விட்டன. இனி அவர்களிடத்தில் சமத்துவமாயும், ஒற்றுமையாயும் வாழ முயற்சித்து நம் சக்தியையும், உழைப்பையும், பணத்தையும் செலவழிப்பது வீண் வேலையாகும். இனி நாம் செய்ய வேண்டியது என்ன என்கிற விடயத்தில் ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன். அம் முடிவு என்னவென்றால், `நாம் இந்து மதத்தை விட்டு அடியோடு விலகி விடுவது என்பதுதான்!’ நமக்கு யார் சுதந்திரம் கொடுக்க மறுக்கிறார்களோ, அவர்களை இனி நாம் கெஞ்சக் கூடாது. அவர்களின் சம்பந்தத்தை நாம் விலக்கிக் கொள்ள வேண்டும். நாம் வேறு மதத்தைச் சார்ந்தவர்களாய் இருந்தால் நம்மை இப்படிக் கொடுமைப்படுத்த அவர்களுக்குத் துணிவு வந்திருக்குமா? எந்த மதத்தினர் உங்களுக்குச் சம அந்தஸ்துக் கொடுத்து சமத்துவமாய் நடத்துகிறார்களோ, அப்படிப்பட்ட மதம் எதுவாயினும் அதில் சேர்ந்து கொள்ளுங்கள். பிறக்கும் போதோ நான் தீண்டப்படத்தகாதவனாய்ப் பிறந்தேன்; என்றாலும் அது நான் செய்த குற்றமல்ல. ஆனால், இறக்கும்போது தீண்டப்படாதவனாய் இறக்க மாட்டேன். அதற்கு மார்க்கம் என் கையி லேயே இருக்கிறது. அதாவது நான் இந்துவாய் இறக்க மாட்டேன்’’ என்று சூளுரைத்தார் அண்ணல் அம்பேத்கர்
(நாசிக்கில் கூடிய பம்பாய் மாநில ஆதி இந்துக்கள் மாநாட்டில் ஆற்றிய உரையிலிருந்து - `குடிஅரசு’ 20-10-1935).
சம அந்தஸ்து கொடுக்கும் பிற மதத்துக்குச் செல்லுங்கள் என்ற வேண்டுகோளை வைத்தார் அண்ணல். புத்த மார்க்கம் தழுவினர். இஸ்லா முக்கும் சென்றனர் வேறு சிலர்.
அந்த ஆத்திரத்தில் ஒரு கல்லால் இரண்டு காய்களை வீழ்த்தியதுபோல அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளைத் தெரிவு செய்து அந்த நாளில் முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலத்தை அடித்து நொறுக்கினர் என்பதைக் கவனிக்கத் தவறிடக் கூடாது.
பாபர் மசூதி இடிப்பு என்பது ஏதோ இஸ்லாமியர்களின் பிரச்சினை அல்ல. பார்ப்பனர்களைத் தவிர மற்றவர்களைச் சூத்திரர்களாக, பஞ்சமர்களாக, இழி பிறவிகளாக ஆக்கப்பட்டார்களே அவர்கள் அத்தனைப் பேர்களின் பிரச்சினையும் ஆகும். 13 ஆண்டு காலமாக நியாயம் கிடைக்கவில்லை. குற்றவாளிகள் பெரிய மனிதர்களாக ராஜ நடைபோட்டுத் திரிந்து கொண்டு இருக்கிறார்கள்.
இம் மாபெரும் குற்றத்தைச் செய்தவர்கள் சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து தப்பித்துக் கொள்வார்களேயானால், சட்டத்தை மதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்கிற எண்ணம் பாமர மக்களுக்கும் ஏற்பட்டு விடும் - எச்சரிக்கை!!
நன்றி: விடுதலை
அம்பேத்கர் அவர்கள் இந்து மதத்துக்கு முழுக்குப் போட்டு பல லட்சம் தாழ்த்தப்பட்ட சகோதரர்களுடன் புத்த மார்க்கத்தைத் தழுவினார். அந்த ஆத்திரத்தையும் மனதிற் கொண்டு, மாற்று மதத்தினரின் வழிபாடு இடத்தை வன்முறையால் அடித்து நொறுக்கினர். இந்த யோக்கியதையில் இந்தக் கூட்டம் அம்பேத்கர் ஜெயந்தி கொண்டாடுவதும் - இவர்களின் ரத யாத்திரை வாகனத்தில் அம்பேத்கர் படத்தை மாட்டி வைப்பதும் எத்தனைப் பெரிய பித்தலாட்டமும் வஞ்சகமும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
``மேல் ஜாதிக்காரர்கள் என்று சொல்லிக் கொள்ளுகின்றவர்களிடத்தில் நம்மீது கருணை ஏற்படும்படி நாம் செய்து வந்த முயற்சிகள் எல்லாம் வீணாய்ப் போய்விட்டன. இனி அவர்களிடத்தில் சமத்துவமாயும், ஒற்றுமையாயும் வாழ முயற்சித்து நம் சக்தியையும், உழைப்பையும், பணத்தையும் செலவழிப்பது வீண் வேலையாகும். இனி நாம் செய்ய வேண்டியது என்ன என்கிற விடயத்தில் ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன். அம் முடிவு என்னவென்றால், `நாம் இந்து மதத்தை விட்டு அடியோடு விலகி விடுவது என்பதுதான்!’ நமக்கு யார் சுதந்திரம் கொடுக்க மறுக்கிறார்களோ, அவர்களை இனி நாம் கெஞ்சக் கூடாது. அவர்களின் சம்பந்தத்தை நாம் விலக்கிக் கொள்ள வேண்டும். நாம் வேறு மதத்தைச் சார்ந்தவர்களாய் இருந்தால் நம்மை இப்படிக் கொடுமைப்படுத்த அவர்களுக்குத் துணிவு வந்திருக்குமா? எந்த மதத்தினர் உங்களுக்குச் சம அந்தஸ்துக் கொடுத்து சமத்துவமாய் நடத்துகிறார்களோ, அப்படிப்பட்ட மதம் எதுவாயினும் அதில் சேர்ந்து கொள்ளுங்கள். பிறக்கும் போதோ நான் தீண்டப்படத்தகாதவனாய்ப் பிறந்தேன்; என்றாலும் அது நான் செய்த குற்றமல்ல. ஆனால், இறக்கும்போது தீண்டப்படாதவனாய் இறக்க மாட்டேன். அதற்கு மார்க்கம் என் கையி லேயே இருக்கிறது. அதாவது நான் இந்துவாய் இறக்க மாட்டேன்’’ என்று சூளுரைத்தார் அண்ணல் அம்பேத்கர்
(நாசிக்கில் கூடிய பம்பாய் மாநில ஆதி இந்துக்கள் மாநாட்டில் ஆற்றிய உரையிலிருந்து - `குடிஅரசு’ 20-10-1935).
சம அந்தஸ்து கொடுக்கும் பிற மதத்துக்குச் செல்லுங்கள் என்ற வேண்டுகோளை வைத்தார் அண்ணல். புத்த மார்க்கம் தழுவினர். இஸ்லா முக்கும் சென்றனர் வேறு சிலர்.
அந்த ஆத்திரத்தில் ஒரு கல்லால் இரண்டு காய்களை வீழ்த்தியதுபோல அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளைத் தெரிவு செய்து அந்த நாளில் முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலத்தை அடித்து நொறுக்கினர் என்பதைக் கவனிக்கத் தவறிடக் கூடாது.
பாபர் மசூதி இடிப்பு என்பது ஏதோ இஸ்லாமியர்களின் பிரச்சினை அல்ல. பார்ப்பனர்களைத் தவிர மற்றவர்களைச் சூத்திரர்களாக, பஞ்சமர்களாக, இழி பிறவிகளாக ஆக்கப்பட்டார்களே அவர்கள் அத்தனைப் பேர்களின் பிரச்சினையும் ஆகும். 13 ஆண்டு காலமாக நியாயம் கிடைக்கவில்லை. குற்றவாளிகள் பெரிய மனிதர்களாக ராஜ நடைபோட்டுத் திரிந்து கொண்டு இருக்கிறார்கள்.
இம் மாபெரும் குற்றத்தைச் செய்தவர்கள் சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து தப்பித்துக் கொள்வார்களேயானால், சட்டத்தை மதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்கிற எண்ணம் பாமர மக்களுக்கும் ஏற்பட்டு விடும் - எச்சரிக்கை!!
நன்றி: விடுதலை
9.17.2005
பெரியார் 127
தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றியமைத்த ஈரோட்டுக் கிழவனின் 127ஆம் பிறந்த நாள் இன்று. பெரியாரை தமிழர்களின் மனத்திலிருந்து தூக்கியெறிய பார்ப்பனர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் இன்னும் மறக்கடிக்க முடியவில்லை. சமீபத்திய உதாரணம் விஜயகாந்தின் தே.மு.தி.க.
இந்த கட்சி துவங்கப்படுவதற்கு முன்பிருந்தே விஜயகாந்திற்கு ஆதரவாக பார்ப்பன பத்திரிக்கையான தினமலர் எழுதி வந்தது. அவரும் தன்னுடைய அறிவையெல்லாம் அடகு வைத்துவிட்டு, கட்சி தொடக்கவிழா அழைப்பிதழை திருப்பதி உண்டியலில் இட்டு வெங்டாசலபதிக்கு முதல் பத்திரிக்கை வைத்து அழைப்பு விடுத்திருந்தார். (வந்தரா என்பதை மாநாட்டிற்கு சென்றோர் கூறவும்.) மாநட்டு நிகழ்ச்சிக்கு கூடவே சோதிடரையும் அழைத்து அவருக்கு ராசமரியாதையும் கொடுக்கப்பட்டிருக்கிறது. (மாநாட்டு நிகழ்வுகளை எழுதிய தினமலர் தே.மு.தி.க.வினரை தடபுடலாக ஆதரித்து எழுதியிருந்தது. விஜயகாந்த் மாநாட்டு மேடையில் தினமலர் பத்திரிக்கையை படிப்பது போன்ற புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தது.) ஆனாலும் விஜயகாந்த் தன்னுடைய கட்சியின் பெயருடன் 'திராவிட கழகம்' என்று இணைத்திருப்பதை அது விரும்பவில்லை. அதை ஒரு குறையாகக் குறிப்பிட்டிருந்தது. ஆனால் பெரியாரின் செல்வாக்கை அறிந்துள்ள எவரும் தனக்குப் பிடிக்கவில்லையானாலும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தமிழர்களிடமிருந்து பிரிக்க முடியாத சக்தி பெரியார் ஒருவரே. ஆனால் இன்றைய பத்திரிக்கைகள் அவரைப் பற்றிய செய்திகளுக்கு முக்கியத்துவம் தருவதைவிட அவருக்கு மரியாதை தரும் அரசியல்வாதிகளின் செய்திகளுக்கே முக்கியத்துவம் தருகின்றன.
பெரியாரின் வாழ்க்கையின் முக்கிய விதயங்கள் குறித்து அறிய இங்கே அழுத்தவும்.
இந்த கட்சி துவங்கப்படுவதற்கு முன்பிருந்தே விஜயகாந்திற்கு ஆதரவாக பார்ப்பன பத்திரிக்கையான தினமலர் எழுதி வந்தது. அவரும் தன்னுடைய அறிவையெல்லாம் அடகு வைத்துவிட்டு, கட்சி தொடக்கவிழா அழைப்பிதழை திருப்பதி உண்டியலில் இட்டு வெங்டாசலபதிக்கு முதல் பத்திரிக்கை வைத்து அழைப்பு விடுத்திருந்தார். (வந்தரா என்பதை மாநாட்டிற்கு சென்றோர் கூறவும்.) மாநட்டு நிகழ்ச்சிக்கு கூடவே சோதிடரையும் அழைத்து அவருக்கு ராசமரியாதையும் கொடுக்கப்பட்டிருக்கிறது. (மாநாட்டு நிகழ்வுகளை எழுதிய தினமலர் தே.மு.தி.க.வினரை தடபுடலாக ஆதரித்து எழுதியிருந்தது. விஜயகாந்த் மாநாட்டு மேடையில் தினமலர் பத்திரிக்கையை படிப்பது போன்ற புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தது.) ஆனாலும் விஜயகாந்த் தன்னுடைய கட்சியின் பெயருடன் 'திராவிட கழகம்' என்று இணைத்திருப்பதை அது விரும்பவில்லை. அதை ஒரு குறையாகக் குறிப்பிட்டிருந்தது. ஆனால் பெரியாரின் செல்வாக்கை அறிந்துள்ள எவரும் தனக்குப் பிடிக்கவில்லையானாலும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தமிழர்களிடமிருந்து பிரிக்க முடியாத சக்தி பெரியார் ஒருவரே. ஆனால் இன்றைய பத்திரிக்கைகள் அவரைப் பற்றிய செய்திகளுக்கு முக்கியத்துவம் தருவதைவிட அவருக்கு மரியாதை தரும் அரசியல்வாதிகளின் செய்திகளுக்கே முக்கியத்துவம் தருகின்றன.
பெரியாரின் வாழ்க்கையின் முக்கிய விதயங்கள் குறித்து அறிய இங்கே அழுத்தவும்.
மனுவை உயர்த்தும் மனுவாதி!
`துக்ளக்’ இதழில் கேள்வி பதில் பகுதியிலோ, அல்லது கார்ட்டூன் பகுதியிலோ, அநேகமாக தவறாது ஒரு இழையோட்டத்தைப் பார்க்கலாம். வீரமணி, வி.பி. சிங், லாலு, என்று ஒரு பட்டியலை வைத்துள்ளார். இவர்கள் மீது சேற்றை வாரி இறைக்காவிட்டால் அந்தவார `துக்ளக்’ இதழ் முழுமைப் பெற்ற மன நிறைவு அவர்களுக்கு இருக்காது.
ஒருக்கால் இவர்களை அர்ச்சிக்க மறந்தாலும்கூட இன்னொன்று நிச்சயமாக நிரந்தரமானது; அதுதான் பெண்கள்மீது சேற்றை மட்டுமல்ல - கல்லால் அடித்துக் `கொல்லுவது’ அந்த அளவுக்குப் பெண் என்று சொன்னாலே அவர்களின் பற்கள் நரநரக்கின்றன. எடுத்துக்காட்டுக்குச் சில வார கேள்வி - பதில் பகுதிகள் இதோ:
கேள்வி: பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா இந்த ஆட்சி யிலாவது நிறைவேறுமா?
பதில்: நடந்தாலும் நடக்கலாம். இப்போது நல்லது நடக்காது என்பதைத்தான் உறுதியாகச் சொல்ல முடியும். இம் மாதிரி விஷயங்கள் நடக்காது என்பதை அவ்வளவு நிச்சயமாகச் சொல்ல முடியாது.
(`துக்ளக்’ 25-5-2005)கேள்வி: வழக்கம் போலவே இந்த வருடமும் +2 தேர்வில் பெண்களே அதிக சாதனை புரிந்திருக்கிறார்களே... என்ன சொல்கிறீர்கள்?
பதில்: என்ன மார்க் வாங்கி என்ன, என்ன சாதனை புரிந்து என்ன? ஆண்கள் பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களே! இதிலிருந்தே ஆண்களின் உயர்வு புரியவில்லையா? பிரம்ம ரிஷி ஆனது விசுவாமித்திரரின் சாதனைதான். ஆனால் அதை வசிஷ்டர் ஏற்றால்தான் திருப்தி என்று விசுவாமித்திரர் நினைத்த போதே, வசிஷ்டரின் உயர்வு புரியவில்லையா? ஆண்கள் வசிஷ்டர்கள்.
(`துக்ளக்’ 8-6-2005)
கேள்வி: முதல்வர் ஜெயலலிதா, பெண்களுக்கும் இலவச ஆட்டோக்கள் வழங்கியிருப்பது பற்றி?
(`துக்ளக்’ 10-8-2005)
கேள்வி: மகளிர் இடஒதுக் கீடு மசோதாவை இடதுசாரி கட்சிகளைத் தவிர வேறு எந்தக் கட்சியும் ஞாபகத்தில் வைத்திருப்பதாகத் தெரியவில்லையே! இப்போது உங்களுக்கு சந்தோஷம் தானே?
பதில்: இது டைம்பாம் மாதிரி. எப்போது வெடிக்கும் என்பது நமக்குத் தெரியாது. ஆனால் வெடிக்கும் என்பது தெரியும். அதனால் சந்தோஷத் திற்கு இடமில்லை. தாமதம் ஆவதில் கொஞ்சம் ஆறுதல் அவ்வளவு தான்.
இந்த வார துக்ளக்கிலும் (14-9-2005) இரண்டு கேள்வி பதில்கள்
கேள்வி: ஆனான பட்ட அரசியல்வாதிகளே பெண்களுக்காக மனம் இரங்கும் போது, உங்கள் மனம் மட்டும் அவர்கள்மீது இரக்கம் கொள்ள மறுப்பது - ஏன்?
பதில்: பெண்ணைப் பார்த்து மனம் இரங்க நான் என்ன அரசியல்வாதியா, பேயா, பிசாசா?
கேள்வி: பெண்களுக்கும் மூதாதையர் சொத்தில் சம உரிமை வழங்கும் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது பற்றி?
பதில்: இது நல்லதே; நியாயமானதே. ஆனால் இது ரொம்பப் பழைய சிந்தனை. மனுஸ்ம்ருதியே `தன் மகன் தன்னிலிருந்து வேறுபட்டவன் அல்ல; மகளோ மகனுக்குச் சமமானவள். ஆகையால் ஒரு வனுடைய மகள் இருக்கும் போது வேறு யார் அவனுடைய சொத்தை கோர முடியும்?’ என்று கூறுகிறது. பின்னர் இந்த சிந்தனை யில் பல வக்ரங்கள் சேர்ந்ததால், சில மாறுதல்கள் தோன்றிவிட்டன. அந்த மாற்றங்கள் இன்று மாற்றப்படுகின்றன. அவ்வளவுதான்.
இந்தப் பதில்களில் இருந்து `சோ’வின் உள்ளத்தில் பெண்கள்பற்றிய மதிப்பீடு என்ன என்பது விளங்கும். பெண்களுக்கு ஆட் டோக்கள் வழங்கப்படுகின்றன என்கிறபோது, அதனை மனந்திறந்து பாராட்ட அகன்ற மனம் இல்லை. சமையல் செய்ய பெண்களுக்குத் தெரிந்ததால் எப்படி ஆட்டோ மீட்டரிலும் சூடு வைப்பது என்பதைப் பெண்கள் அறிவார்களாம். புத்தி எங்கோ மேயப் போகிறது? சமையல் தெரியாத ஆண்களுக்கு மீட்டரில் சூடு வைக்கத் தெரியாதா?
வீட்டு வேலைகளை ஆண்கள் கவனிக்க ஆரம்பித்தால் அதையே காரணம் காட்டி பெண்கள் விவாகரத்து கோரலாம் என்று புதிய சட்டம் வரும் என்கிறார். எத்தனையோ வீடுகளில் ஆண்கள் வீட்டு வேலைகளைச் செய்யத்தான் செய்கிறார்கள் - அக்கிரகாரத்திலும் இது சர்வ சாதாரணம்தான்.
கணவனும், மனைவியும் வேலைக்குப் போவோராக இருந்தால் சமையலில் ஒரு வருக்கொருவர் ஒத்துழைப்புக் கொடுப்பதில்லையா? வெளிநாடுகளில் இது சர்வ சாதாரணம் தானே. அப்படி இருக்கும் போது `சோ’ கூறிய கற்பனைக்கு இடம் ஏது?
அவரின் உள்ளார்ந்த எண்ணம் என்பது பெண்கள் அடுப்பங்கரையில் `சமை’ந்து கிடக்க வேண்டும் என்பதே!
பெண்களுக்கு இட ஒதுக்கீடு மசோதா என்பது `டைம்’ பாமாம்! எந்த நேரத்திலும் வெடிக்குமாம். எதற்கு எதை ஒப்பிடுகிறார் என்பதைக் கவனிக்க வேண்டும். பெண்களுக்கு இடஒதுக்கீடு என்பது சோவின் கண்ணோட்டத்தில் ஆபத்தான போக்கு. இப்போதைக்கு அந்த மசோதா நிறைவேறுவதில் தாமதம் ஆவதால் கொஞ்சம் ஆறுதல் அடையலாமாம் - என்னே அற்ப சந்தோஷம்!
தாயை வாடி என்றும் மகளைப் போடி என்றும் கூறும் கூட்டமாயிற்றே. அவர்களிடத்தில் பெண்ணுக்குரிய மதிப்பையும் உரிமையையும் எப்படி எதிர்பார்க்க முடியும்?
பரவாயில்லையே, `சோ’கூட திருந்திவிட்டாரே பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை வழங்கும் சட்ட மசோதாவை ஆதரித்து விட்டாரே என்று நினைக் கும்போது, அதில் கொண்டு வந்து மனுஸ்ம்ருதியைப் புகுத்தினாரே பார்க்கலாம். அதானே பார்த்தோம் - அவாளாவது திருந்துவதாவது!
பெண்ணுக்குச் சொத்துரிமை வழங்க மனுஸ்ம்ருதி சம்மதித்து இருக்கிறதாம்.
இவர்கள் ஒன்றை ஆதரிக்க வேண்டும் என்றால் அதற்கு மனு சம்மதித்து இருக்க வேண்டும் - ஒப்புதல் அந்த இடத்திலிருந்து கிடைக்க வேண்டும் - அப்பொழுதுதான் எந்த நல்ல காரியத்தையும்கூட இவர்களால் ஏற்றுக் கொள்ள முடியும். மனுஸ்ம்ருதியை எடுத்துக்காட்டும் திருவாளர் `சோ’ எந்த அத்தியாயத்தில் எத்தனையாவது சுலோகத்தில் இப்படி சொல்லப்பட்டு இருக்கிறது என்று கூற வேண்டாமா? அப்படிசொல்லுவது தானே ஆதாரப் பூர்வமானது - அறிவு நாணயமானது - எப்பொழுதுமே அவரிடம் அந்தப் பேச்சுக்கே இடம் கிடையாது.
பெண்களுக்குச் சொத்துரிமை வழங்குமாறு மனுஸ்ம்ருதி சொல்லுகிறது - அப்படியென்றால் அந்த மனுதர்ம சாஸ்திரம் பெண்களில் உரிமைகளை அங்கீகரிக்கிறதா - என்ற கேள்வி எழலாம். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இந்துச் சமூகப் பெண்கள் தங்கள் உரிமைக்காகவும் மரியாதைக்காகவும் எடுத்த எடுப்பிலேயே ஒன்றைச் செய்ய வேண்டும் என்றால் அந்த முதல் காரியம் மனுதர்ம சாஸ்திரத்தைக் கொளுத்துவதாகத் தான் இருக்க முடியும். அந்த அளவுக்குப் பெண்களை மனுதர்மம் இழிவுபடுத்துகிறது. இதோ மனுதர்மம் பேசுகிறது.
படுக்கை ஆசனம், அலங்காரம், காமம், கோபம், பொய், துரோக சிந்தை இவற்றினை மாதர் பொருட்டே மனுவானவர் கற்பித்தார்.
(அத்.9. சு.17)
பிள்ளை இல்லாமல் அந்தக் குலம் நசிக்கிறதாக இருந்தால் அப்போது ஸ்திரீ தன் கணவன், மாமனார் முதலானவர்களின் உத்தரவு பெற்றுக் கொண்டு தன் மைத்துனன் அல்லது தன் கணவனுக்கு ஏழு தலைமுறைக்குட்பட்ட பங்காளி இவர்களோடு மேற்சொல்லுகிறபடி புணர்ந்து குலத்திற்குத் தக்கதான ஒரு பிள்ளையைப் பெற்றுக் கொள்ளலாம்.
(அத்.9. சு.59)
கணவன் துராசாரமுள்ளவனாக இருந்தாலும் அந்நிய ஸ்திரீலோலனாயிருந்தாலும், நற்குணம் இல்லாதவனாக இருந்தாலும் பதிவிரதையான ஸ்திரீயானவள் அவனைத் தெய்வத்தைப் போல பூசிக்க வேண்டியது.
(அத்.5. சு.154)
பால்யத்தில் தகப்பன் ஆக்ஞையிலும், யௌவனத்தில் கணவன் ஆக்ஞையிலும், கணவன் இறந்த பின்பு பிள்ளைகள் ஆக்ஞையிலும் இருக்க வேண்டியதல்லாமல் ஸ்திரீகள் தன் சுவாதீனமாக ஒரு போதும் இருக்கக் கூடாது.
(அத்.5. சு.148)
பெண்களையும், பிராமணரல்லாதாரையும் கொல்லுதல் பாதகமாகாது.
(அத்.11. சு.65)
இதற்கு மேல் பெண்களை இழிவுபடுத்த முடியாது - கேவலப்படுத்தவும் முடியாது. நசுக்கவும் முடியாது என்கிற அளவுக்கு அவர்கள் மீது கீழ்மைகளைச் சுமத்தும் மனுதர்மம் பெண்களுக்கு ஏதோ உயர்வு கொடுப்பது போன்ற ஒரு தோற்றத்தைக் கொடுப்பதற்காக, அதனை இந்த இடத்தில் எடுத்துக் காட்டும் சோவின் நய வஞ்சகத்தைக் கவனிக்கத் தவறக் கூடாது.
பார்ப்பனர்களை வருணாசிரம அடிப்படையில் உயர்த்திப் பிடிப்பதாலும், பெண்களை புழுவினும் இழிவாக படம் பிடிப்பதாலும் இந்த மனுதர்மம் என்னும் குப்பை சோ கூட்டத்திற்குக் கரும்பாக இனிக்கிறது என்பதை மறந்து விடக் கூடாது.
அதனால்தான் மனோன்மணியம் ஆசிரியர் பேராசிரியர் சுந்தரனார் அழகாக படம் பிடித்தார்.
வள்ளுவர் செய் திருக்குறளை
மருவற நன் குணர்ந்தோர்
உள்ளுவரோ மனுவாதி
ஒரு குலத்துக்கொரு நீதி
என்றார்.
ஒரு குலத்துக்கொரு நீதியைத்தலையில் தூக்கி வைத்து ஆடுபவர்களை அடையாளம் காண வேண்டாமா?
பெண்ணுரிமை அமைப்புகள் பல போராட்டங்களை நடத்திக் கொண்டு தான் இருக்கின்றன! பேய்கள்தான் பெண்களுக்கு இரங்க வேண்டும் என்கிற அளவுக்கு இவ்வளவு பச்சையாகப் பெண்களைக் கேவலப்படுத்தும், இழிவுப்படுத்தும் இந்த ஆசாமியை நோக்கி ஏன் அவர்களின் கவனம் திரும்பவில்லை?
குறைந்தபட்சம் தங்கள் எதிர்ப்பைக் காட்டும் வண்ணம் `துக்ளக்’கை வீதியில் போட்டு எரிக்க வேண்டாமா?
நன்றி: விடுதலை
நன்றி: இந்தப் பதிவை பதியத்தூண்டிய மற்றொரு பதிவு
ஒருக்கால் இவர்களை அர்ச்சிக்க மறந்தாலும்கூட இன்னொன்று நிச்சயமாக நிரந்தரமானது; அதுதான் பெண்கள்மீது சேற்றை மட்டுமல்ல - கல்லால் அடித்துக் `கொல்லுவது’ அந்த அளவுக்குப் பெண் என்று சொன்னாலே அவர்களின் பற்கள் நரநரக்கின்றன. எடுத்துக்காட்டுக்குச் சில வார கேள்வி - பதில் பகுதிகள் இதோ:
கேள்வி: பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா இந்த ஆட்சி யிலாவது நிறைவேறுமா?
பதில்: நடந்தாலும் நடக்கலாம். இப்போது நல்லது நடக்காது என்பதைத்தான் உறுதியாகச் சொல்ல முடியும். இம் மாதிரி விஷயங்கள் நடக்காது என்பதை அவ்வளவு நிச்சயமாகச் சொல்ல முடியாது.
(`துக்ளக்’ 25-5-2005)கேள்வி: வழக்கம் போலவே இந்த வருடமும் +2 தேர்வில் பெண்களே அதிக சாதனை புரிந்திருக்கிறார்களே... என்ன சொல்கிறீர்கள்?
பதில்: என்ன மார்க் வாங்கி என்ன, என்ன சாதனை புரிந்து என்ன? ஆண்கள் பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களே! இதிலிருந்தே ஆண்களின் உயர்வு புரியவில்லையா? பிரம்ம ரிஷி ஆனது விசுவாமித்திரரின் சாதனைதான். ஆனால் அதை வசிஷ்டர் ஏற்றால்தான் திருப்தி என்று விசுவாமித்திரர் நினைத்த போதே, வசிஷ்டரின் உயர்வு புரியவில்லையா? ஆண்கள் வசிஷ்டர்கள்.
(`துக்ளக்’ 8-6-2005)
கேள்வி: முதல்வர் ஜெயலலிதா, பெண்களுக்கும் இலவச ஆட்டோக்கள் வழங்கியிருப்பது பற்றி?
பதில்: வீட்டில் சமையல் செய்து பழக்கம் உள்ளவர்கள் என்பதால், எந்தப் பொருளுக்கு, எந்த அளவிற்கு சூடேற்ற வேண்டும் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது. அப்படிப்பட்டவர்களுக்கு மீட்டரில் சூடேற்றுவது ஒரு பெரிய காரியமா? அதனால்,
பெண்களின் ஆட்டோக்கள் லாபகரமாக ஓடும்.
(`துக்ளக்’ 29-6-2005)
கேள்வி: கொலம்பியாவில் `வீட்டு வேலைகளை ஆண்கள் பகிந்து கொள்ளாவிடில், அதைக் காரணம் காட்டி விவாகரத்துக் கோரலாம்’ - என்று சட்டம் கொண்டு வரப் போகி றார்களாமே?
பதில்: வீட்டு வேலைகளை ஆண்கள் கவனிக்க ஆரம்பித்த பிறகுதான் பெண்களுக்குப் புத்தி வரும். `அய்யய்யோ! எல்லாம் இப்படி குளறுபடி ஆகிறதே!’ என்று அலறி, புதிய சட்டம் கோருவார்கள். ``வீட்டு வேலைகளை ஆண்கள் கவனிக்க ஆரம்பித்தால் - அதையே காரணம் காட்டி, பெண்கள் விவாகரத்து கோரலாம்’’ என்று புதிய சட்டம் வரும்.(`துக்ளக்’ 10-8-2005)
கேள்வி: மகளிர் இடஒதுக் கீடு மசோதாவை இடதுசாரி கட்சிகளைத் தவிர வேறு எந்தக் கட்சியும் ஞாபகத்தில் வைத்திருப்பதாகத் தெரியவில்லையே! இப்போது உங்களுக்கு சந்தோஷம் தானே?
பதில்: இது டைம்பாம் மாதிரி. எப்போது வெடிக்கும் என்பது நமக்குத் தெரியாது. ஆனால் வெடிக்கும் என்பது தெரியும். அதனால் சந்தோஷத் திற்கு இடமில்லை. தாமதம் ஆவதில் கொஞ்சம் ஆறுதல் அவ்வளவு தான்.
இந்த வார துக்ளக்கிலும் (14-9-2005) இரண்டு கேள்வி பதில்கள்
கேள்வி: ஆனான பட்ட அரசியல்வாதிகளே பெண்களுக்காக மனம் இரங்கும் போது, உங்கள் மனம் மட்டும் அவர்கள்மீது இரக்கம் கொள்ள மறுப்பது - ஏன்?
பதில்: பெண்ணைப் பார்த்து மனம் இரங்க நான் என்ன அரசியல்வாதியா, பேயா, பிசாசா?
கேள்வி: பெண்களுக்கும் மூதாதையர் சொத்தில் சம உரிமை வழங்கும் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது பற்றி?
பதில்: இது நல்லதே; நியாயமானதே. ஆனால் இது ரொம்பப் பழைய சிந்தனை. மனுஸ்ம்ருதியே `தன் மகன் தன்னிலிருந்து வேறுபட்டவன் அல்ல; மகளோ மகனுக்குச் சமமானவள். ஆகையால் ஒரு வனுடைய மகள் இருக்கும் போது வேறு யார் அவனுடைய சொத்தை கோர முடியும்?’ என்று கூறுகிறது. பின்னர் இந்த சிந்தனை யில் பல வக்ரங்கள் சேர்ந்ததால், சில மாறுதல்கள் தோன்றிவிட்டன. அந்த மாற்றங்கள் இன்று மாற்றப்படுகின்றன. அவ்வளவுதான்.
இந்தப் பதில்களில் இருந்து `சோ’வின் உள்ளத்தில் பெண்கள்பற்றிய மதிப்பீடு என்ன என்பது விளங்கும். பெண்களுக்கு ஆட் டோக்கள் வழங்கப்படுகின்றன என்கிறபோது, அதனை மனந்திறந்து பாராட்ட அகன்ற மனம் இல்லை. சமையல் செய்ய பெண்களுக்குத் தெரிந்ததால் எப்படி ஆட்டோ மீட்டரிலும் சூடு வைப்பது என்பதைப் பெண்கள் அறிவார்களாம். புத்தி எங்கோ மேயப் போகிறது? சமையல் தெரியாத ஆண்களுக்கு மீட்டரில் சூடு வைக்கத் தெரியாதா?
வீட்டு வேலைகளை ஆண்கள் கவனிக்க ஆரம்பித்தால் அதையே காரணம் காட்டி பெண்கள் விவாகரத்து கோரலாம் என்று புதிய சட்டம் வரும் என்கிறார். எத்தனையோ வீடுகளில் ஆண்கள் வீட்டு வேலைகளைச் செய்யத்தான் செய்கிறார்கள் - அக்கிரகாரத்திலும் இது சர்வ சாதாரணம்தான்.
கணவனும், மனைவியும் வேலைக்குப் போவோராக இருந்தால் சமையலில் ஒரு வருக்கொருவர் ஒத்துழைப்புக் கொடுப்பதில்லையா? வெளிநாடுகளில் இது சர்வ சாதாரணம் தானே. அப்படி இருக்கும் போது `சோ’ கூறிய கற்பனைக்கு இடம் ஏது?
அவரின் உள்ளார்ந்த எண்ணம் என்பது பெண்கள் அடுப்பங்கரையில் `சமை’ந்து கிடக்க வேண்டும் என்பதே!
பெண்களுக்கு இட ஒதுக்கீடு மசோதா என்பது `டைம்’ பாமாம்! எந்த நேரத்திலும் வெடிக்குமாம். எதற்கு எதை ஒப்பிடுகிறார் என்பதைக் கவனிக்க வேண்டும். பெண்களுக்கு இடஒதுக்கீடு என்பது சோவின் கண்ணோட்டத்தில் ஆபத்தான போக்கு. இப்போதைக்கு அந்த மசோதா நிறைவேறுவதில் தாமதம் ஆவதால் கொஞ்சம் ஆறுதல் அடையலாமாம் - என்னே அற்ப சந்தோஷம்!
தாயை வாடி என்றும் மகளைப் போடி என்றும் கூறும் கூட்டமாயிற்றே. அவர்களிடத்தில் பெண்ணுக்குரிய மதிப்பையும் உரிமையையும் எப்படி எதிர்பார்க்க முடியும்?
பரவாயில்லையே, `சோ’கூட திருந்திவிட்டாரே பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை வழங்கும் சட்ட மசோதாவை ஆதரித்து விட்டாரே என்று நினைக் கும்போது, அதில் கொண்டு வந்து மனுஸ்ம்ருதியைப் புகுத்தினாரே பார்க்கலாம். அதானே பார்த்தோம் - அவாளாவது திருந்துவதாவது!
பெண்ணுக்குச் சொத்துரிமை வழங்க மனுஸ்ம்ருதி சம்மதித்து இருக்கிறதாம்.
இவர்கள் ஒன்றை ஆதரிக்க வேண்டும் என்றால் அதற்கு மனு சம்மதித்து இருக்க வேண்டும் - ஒப்புதல் அந்த இடத்திலிருந்து கிடைக்க வேண்டும் - அப்பொழுதுதான் எந்த நல்ல காரியத்தையும்கூட இவர்களால் ஏற்றுக் கொள்ள முடியும். மனுஸ்ம்ருதியை எடுத்துக்காட்டும் திருவாளர் `சோ’ எந்த அத்தியாயத்தில் எத்தனையாவது சுலோகத்தில் இப்படி சொல்லப்பட்டு இருக்கிறது என்று கூற வேண்டாமா? அப்படிசொல்லுவது தானே ஆதாரப் பூர்வமானது - அறிவு நாணயமானது - எப்பொழுதுமே அவரிடம் அந்தப் பேச்சுக்கே இடம் கிடையாது.
பெண்களுக்குச் சொத்துரிமை வழங்குமாறு மனுஸ்ம்ருதி சொல்லுகிறது - அப்படியென்றால் அந்த மனுதர்ம சாஸ்திரம் பெண்களில் உரிமைகளை அங்கீகரிக்கிறதா - என்ற கேள்வி எழலாம். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இந்துச் சமூகப் பெண்கள் தங்கள் உரிமைக்காகவும் மரியாதைக்காகவும் எடுத்த எடுப்பிலேயே ஒன்றைச் செய்ய வேண்டும் என்றால் அந்த முதல் காரியம் மனுதர்ம சாஸ்திரத்தைக் கொளுத்துவதாகத் தான் இருக்க முடியும். அந்த அளவுக்குப் பெண்களை மனுதர்மம் இழிவுபடுத்துகிறது. இதோ மனுதர்மம் பேசுகிறது.
படுக்கை ஆசனம், அலங்காரம், காமம், கோபம், பொய், துரோக சிந்தை இவற்றினை மாதர் பொருட்டே மனுவானவர் கற்பித்தார்.
(அத்.9. சு.17)
பிள்ளை இல்லாமல் அந்தக் குலம் நசிக்கிறதாக இருந்தால் அப்போது ஸ்திரீ தன் கணவன், மாமனார் முதலானவர்களின் உத்தரவு பெற்றுக் கொண்டு தன் மைத்துனன் அல்லது தன் கணவனுக்கு ஏழு தலைமுறைக்குட்பட்ட பங்காளி இவர்களோடு மேற்சொல்லுகிறபடி புணர்ந்து குலத்திற்குத் தக்கதான ஒரு பிள்ளையைப் பெற்றுக் கொள்ளலாம்.
(அத்.9. சு.59)
கணவன் துராசாரமுள்ளவனாக இருந்தாலும் அந்நிய ஸ்திரீலோலனாயிருந்தாலும், நற்குணம் இல்லாதவனாக இருந்தாலும் பதிவிரதையான ஸ்திரீயானவள் அவனைத் தெய்வத்தைப் போல பூசிக்க வேண்டியது.
(அத்.5. சு.154)
பால்யத்தில் தகப்பன் ஆக்ஞையிலும், யௌவனத்தில் கணவன் ஆக்ஞையிலும், கணவன் இறந்த பின்பு பிள்ளைகள் ஆக்ஞையிலும் இருக்க வேண்டியதல்லாமல் ஸ்திரீகள் தன் சுவாதீனமாக ஒரு போதும் இருக்கக் கூடாது.
(அத்.5. சு.148)
பெண்களையும், பிராமணரல்லாதாரையும் கொல்லுதல் பாதகமாகாது.
(அத்.11. சு.65)
இதற்கு மேல் பெண்களை இழிவுபடுத்த முடியாது - கேவலப்படுத்தவும் முடியாது. நசுக்கவும் முடியாது என்கிற அளவுக்கு அவர்கள் மீது கீழ்மைகளைச் சுமத்தும் மனுதர்மம் பெண்களுக்கு ஏதோ உயர்வு கொடுப்பது போன்ற ஒரு தோற்றத்தைக் கொடுப்பதற்காக, அதனை இந்த இடத்தில் எடுத்துக் காட்டும் சோவின் நய வஞ்சகத்தைக் கவனிக்கத் தவறக் கூடாது.
பார்ப்பனர்களை வருணாசிரம அடிப்படையில் உயர்த்திப் பிடிப்பதாலும், பெண்களை புழுவினும் இழிவாக படம் பிடிப்பதாலும் இந்த மனுதர்மம் என்னும் குப்பை சோ கூட்டத்திற்குக் கரும்பாக இனிக்கிறது என்பதை மறந்து விடக் கூடாது.
அதனால்தான் மனோன்மணியம் ஆசிரியர் பேராசிரியர் சுந்தரனார் அழகாக படம் பிடித்தார்.
வள்ளுவர் செய் திருக்குறளை
மருவற நன் குணர்ந்தோர்
உள்ளுவரோ மனுவாதி
ஒரு குலத்துக்கொரு நீதி
என்றார்.
ஒரு குலத்துக்கொரு நீதியைத்தலையில் தூக்கி வைத்து ஆடுபவர்களை அடையாளம் காண வேண்டாமா?
பெண்ணுரிமை அமைப்புகள் பல போராட்டங்களை நடத்திக் கொண்டு தான் இருக்கின்றன! பேய்கள்தான் பெண்களுக்கு இரங்க வேண்டும் என்கிற அளவுக்கு இவ்வளவு பச்சையாகப் பெண்களைக் கேவலப்படுத்தும், இழிவுப்படுத்தும் இந்த ஆசாமியை நோக்கி ஏன் அவர்களின் கவனம் திரும்பவில்லை?
குறைந்தபட்சம் தங்கள் எதிர்ப்பைக் காட்டும் வண்ணம் `துக்ளக்’கை வீதியில் போட்டு எரிக்க வேண்டாமா?
நன்றி: விடுதலை
நன்றி: இந்தப் பதிவை பதியத்தூண்டிய மற்றொரு பதிவு
9.13.2005
பெண்கள் விடுதலைக்கு “ஆண்மை” அழியவேண்டும்
பெண்கள் விடுதலையின் பேரால் உலகத்தில் அநேக இடங்களில் அநேக சங்கங்களும், முயற்சிகளும் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டு வருவது யாவரும் அறிந்ததே. இம்முயற்சிகளில் ஆண்களும் மிகக் கவலையுள்ளவர்கள்போலக் காட்டிக்கொண்டு மிகப் பாசாங்கு செய்து வருகின்றார்கள். ஆண்கள் முயற்சியால் செய்யப்படும் எவ்வித விடுதலை இயக்கமும் எவ்வழியிலும் பெண்களுக்கு உண்மையான விடுதலையை அளிக்க முடியாது. தற்காலம் பெண்கள் விடுதலைக்காகப் பெண்களால் முயற்சிக்கப்படும் இயங்களுக்கும் யாதொரு பலனையும் கொடுக்காமல் போவதெல்லாமல், மேலும் மேலும் அவை பெண்களின் அடிமைத்தனத்திற்கே கட்டுப்பாட்டுகளைப் பலப்படுத்திக்கொண்டே போகும் என்பது நமது அபிப்பிராயம். எதுபோலென்றால், திராவிட மக்கள் விடுதலைக்குப் பார்ப்பனரும், பார்ப்பனர்தான் இந்நாட்டுக்குப் பிரதிநிதித்துவம் வாய்ந்தவர்கள் என்று கருதிக்கொண்டிருக்கும் அந்நிய நாட்டினர்களும் பாடுபடுவதாக ஏற்பாடுகள் நடந்து வருவதன் பலனாக எப்படி நாளுக்கு நாள் திராவிட மக்களுக்கு அடிமைத்தனமும், என்றும் விடுதலை பெற முடியாதபடி கட்டுப்பாடுகளின் பலமும் ஏற்பட்டு வருகிறதோ அதுபோலவும், சமூக சீர்திருத்தம், சமத்துவம் என்பதாக வேஷம் போட்டுக் கொண்டு பார்ப்பனர்களும் ஆரியப் புராணக்காரர்களும் சீர்திருத்தத்தில் பிரவேசித்து வருவதன் பலனாக எப்படிச் சமூகக் கொடுமைகளும், உயர்வு தாழ்வுகளும் சட்டத்தினாலும், மதத்தினாலும் நிலைபெற்றுப் பலப்பட்டு வருகின்றதோ அதுபோலவும் என்று சொல்லலாம்.
அன்றியும், ஆண்கள், பெண்கள் விடுதலைக்குப் பாடுபடுவதால் பெண்களின் அடிமைத்தனம் வளருவதுடன் பெண்கள் என்றும் விடுதலை பெற முடியாத கட்டுப்பாடுகள் பலப்பட்டுக் கொண்டு வருகின்றன. பெண்களுக்கு மதிப்புக் கொடுப்பதாகவும், பெண்கள் விடுதலைக்காகப் பாடுபடுவதாகவும் ஆண்கள் காட்டிக் கொள்வதெல்லாம் பெண்களை ஏமாற்றுவதற்குச் செய்யும் சூழ்ச்சியே ஒழிய வேறல்ல. எங்காவது பூனைகளால் எலிகளுக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது நரிகளால் ஆடு, கோழிகளுக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது வெள்ளைக்காரர்களால் இந்தியர்களுக்கு செல்வம் பெருகுமா? எங்காவது பார்ப்பனர்களால் பார்ப்பனரல்லாதவர்களுக்குச் சமத்துவம் கிடைக்குமா? என்பதை யோசித்தால் இதன் உண்மை விளங்கும். அப்படி ஒருக்கால் ஏதாவது ஒரு சமயம் மேற்படி விஷயங்களில் விடுதலை உண்டாகிவிட்டாலும்கூட ஆண்களால் பெண்களுக்கு விடுதலை கிடைக்கவே கிடைக்காது என்பதை மாத்திரம் உறுதியாய் நம்பலாம். ஏனெனில், ஆண்மை என்னும் பதமே பெண்களை இழிவுபடுத்தும் முறையில் உலக வழக்கில் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது என்பதைப் பெண்கள் மறந்துவிடக்கூடாது. அந்த ‘ஆண்மை’ உலகிலுள்ள வரையிலும் பெண்மைக்கு மதிப்பு இல்லை என்பதை பெண்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும். உலகத்தில் “ஆண்மை” நிற்கும் வரையில் பெண்கள் அடிமையும் வளர்ந்தே வரும். பெண்களால் “ஆண்மை” என்ற தத்துவம் அழிக்கப்படாவல்லது பெண்களுக்கு விடுதலை இல்லை என்பது உறுதி. “ஆண்மை”யால்தான் பெண்கள் அடிமையாக்கப்பட்டிருக்கிறார்கள். சுதந்திரம், வீரம் முதலிய குணங்கள் உலகத்தில் “ஆண்மை” க்குத்தான் அவைகள் உண்டென்று, ஆண் மக்கள் முடிவுகட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
அன்றியும், இந்துமதம் என்பதில் பெண்களுக்கு என்றென்றும் விடுதலையோ, சுதந்திரமோ எத்துறையிலும் அளிக்கப்படவே இல்லை என்பதைப் பெண் மக்கள் நன்றாய் உணரவேண்டும்.
பெண்கள் விஷயமாய் இந்து மதம் சொல்லுவ தென்னவென்றால், கடவுள் பெண்களைப் பிறவியிலேயே விபச்சாரிகளாய்ப் படைத்துவிட்டார் என்பது ஆகச் சொல்லுகிறதுடன், அதனாலேயே பெண்களை எந்தச் சமயத்திலும் சுதந்திரமாய் இருக்கவிடக்கூடாது என்றும், குழந்தை பருவத்தில் தகப்பனுக்குக் கீழும், வயோதிகப் பருவத்தில் (தாம் பெற்ற) பிள்ளைகளுக்குக் கீழும் பெண்கள் கட்டுப் படுத்தப்படவேண்டும் என்றும் சொல்லுகிறது. “பெண்கள், ஆண்களும்-மறைவான இடமும்-இருளும் இல்லாவிட்டால் தான் பதிவிரதைகளாக இருக்கமுடியும்” என்று அருந்ததியும் துரோபதையும் சொல்லி, தெய்வீகத்தன்மையில் மெய்ப்பித்துக் காட்டியதாகவும் இந்துமத சாஸ்திரங்களும், புராணங்களும் சொல்லுகின்றன.
இன்னும் பலவிதமாகவும், மத சாஸ்திர ஆதாரங்களில் இருக்கின்றன. இவற்றின் கருத்து ஆண்களுக்குப் பெண்ணை அடிமையாக்க வேண்டு மென்பதல்லாமல் வேறில்லை.
எனவே, பெண் மக்கள் அடிமையானது ஆண் மக்களாலேதான் ஏற்பட்டது என்பதும், அதுவும் “ஆண்மை”யும் பெண் அடிமையும் கடவுளாலேயே ஏற்படுத்தப்பட்டதாக எல்லா ஆண்களும் கருதிக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் அதோடு பெண் மக்களும் இதை உண்மை என்றே நினைத்துக் கொண்டு வந்த பரம்பரை வழக்கத்தால் பெண் அடிமைக்குப் பலம் அதிகம் ஏற்பட்டிருக் கிறதென்பதும் நடுநிலைமைப் பெண்களுக்கும், ஆண்களுக்கும் யோசித்துப் பார்த்தால் விளங்காமற் போகாது. பொதுமக்கள் பிறவியில் உயர்வு தாழ்வு அழியவேண்டுமானால், எப்படிக் கற்பிக்கப் பட்டிருக்கின்றது என்ற இந்து மதக் கொள்கையைச் சுட்டுப் பொசுக்கவேண்டியது அவசியமோ, அதுபோலவே, பெண் மக்கள் உண்மைச் சுதந்திரம் பெறவேண்டுமானால், ‘ஆண்மையும்’, ‘பெண்மையும்’ கடவுளால் உண்டாக்கப்பட்டவை என்பதற்குப் பொறுப்பாயுள்ள கடவுள் தன்மையும் ஒழிந்தாக வேண்டும்.
`பெண் ஏன் அடிமையானாள்?’ என்ற நூலில் தந்தை பெரியார்
நன்றி: விடுதலை
அன்றியும், ஆண்கள், பெண்கள் விடுதலைக்குப் பாடுபடுவதால் பெண்களின் அடிமைத்தனம் வளருவதுடன் பெண்கள் என்றும் விடுதலை பெற முடியாத கட்டுப்பாடுகள் பலப்பட்டுக் கொண்டு வருகின்றன. பெண்களுக்கு மதிப்புக் கொடுப்பதாகவும், பெண்கள் விடுதலைக்காகப் பாடுபடுவதாகவும் ஆண்கள் காட்டிக் கொள்வதெல்லாம் பெண்களை ஏமாற்றுவதற்குச் செய்யும் சூழ்ச்சியே ஒழிய வேறல்ல. எங்காவது பூனைகளால் எலிகளுக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது நரிகளால் ஆடு, கோழிகளுக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது வெள்ளைக்காரர்களால் இந்தியர்களுக்கு செல்வம் பெருகுமா? எங்காவது பார்ப்பனர்களால் பார்ப்பனரல்லாதவர்களுக்குச் சமத்துவம் கிடைக்குமா? என்பதை யோசித்தால் இதன் உண்மை விளங்கும். அப்படி ஒருக்கால் ஏதாவது ஒரு சமயம் மேற்படி விஷயங்களில் விடுதலை உண்டாகிவிட்டாலும்கூட ஆண்களால் பெண்களுக்கு விடுதலை கிடைக்கவே கிடைக்காது என்பதை மாத்திரம் உறுதியாய் நம்பலாம். ஏனெனில், ஆண்மை என்னும் பதமே பெண்களை இழிவுபடுத்தும் முறையில் உலக வழக்கில் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது என்பதைப் பெண்கள் மறந்துவிடக்கூடாது. அந்த ‘ஆண்மை’ உலகிலுள்ள வரையிலும் பெண்மைக்கு மதிப்பு இல்லை என்பதை பெண்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும். உலகத்தில் “ஆண்மை” நிற்கும் வரையில் பெண்கள் அடிமையும் வளர்ந்தே வரும். பெண்களால் “ஆண்மை” என்ற தத்துவம் அழிக்கப்படாவல்லது பெண்களுக்கு விடுதலை இல்லை என்பது உறுதி. “ஆண்மை”யால்தான் பெண்கள் அடிமையாக்கப்பட்டிருக்கிறார்கள். சுதந்திரம், வீரம் முதலிய குணங்கள் உலகத்தில் “ஆண்மை” க்குத்தான் அவைகள் உண்டென்று, ஆண் மக்கள் முடிவுகட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
அன்றியும், இந்துமதம் என்பதில் பெண்களுக்கு என்றென்றும் விடுதலையோ, சுதந்திரமோ எத்துறையிலும் அளிக்கப்படவே இல்லை என்பதைப் பெண் மக்கள் நன்றாய் உணரவேண்டும்.
பெண்கள் விஷயமாய் இந்து மதம் சொல்லுவ தென்னவென்றால், கடவுள் பெண்களைப் பிறவியிலேயே விபச்சாரிகளாய்ப் படைத்துவிட்டார் என்பது ஆகச் சொல்லுகிறதுடன், அதனாலேயே பெண்களை எந்தச் சமயத்திலும் சுதந்திரமாய் இருக்கவிடக்கூடாது என்றும், குழந்தை பருவத்தில் தகப்பனுக்குக் கீழும், வயோதிகப் பருவத்தில் (தாம் பெற்ற) பிள்ளைகளுக்குக் கீழும் பெண்கள் கட்டுப் படுத்தப்படவேண்டும் என்றும் சொல்லுகிறது. “பெண்கள், ஆண்களும்-மறைவான இடமும்-இருளும் இல்லாவிட்டால் தான் பதிவிரதைகளாக இருக்கமுடியும்” என்று அருந்ததியும் துரோபதையும் சொல்லி, தெய்வீகத்தன்மையில் மெய்ப்பித்துக் காட்டியதாகவும் இந்துமத சாஸ்திரங்களும், புராணங்களும் சொல்லுகின்றன.
இன்னும் பலவிதமாகவும், மத சாஸ்திர ஆதாரங்களில் இருக்கின்றன. இவற்றின் கருத்து ஆண்களுக்குப் பெண்ணை அடிமையாக்க வேண்டு மென்பதல்லாமல் வேறில்லை.
எனவே, பெண் மக்கள் அடிமையானது ஆண் மக்களாலேதான் ஏற்பட்டது என்பதும், அதுவும் “ஆண்மை”யும் பெண் அடிமையும் கடவுளாலேயே ஏற்படுத்தப்பட்டதாக எல்லா ஆண்களும் கருதிக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் அதோடு பெண் மக்களும் இதை உண்மை என்றே நினைத்துக் கொண்டு வந்த பரம்பரை வழக்கத்தால் பெண் அடிமைக்குப் பலம் அதிகம் ஏற்பட்டிருக் கிறதென்பதும் நடுநிலைமைப் பெண்களுக்கும், ஆண்களுக்கும் யோசித்துப் பார்த்தால் விளங்காமற் போகாது. பொதுமக்கள் பிறவியில் உயர்வு தாழ்வு அழியவேண்டுமானால், எப்படிக் கற்பிக்கப் பட்டிருக்கின்றது என்ற இந்து மதக் கொள்கையைச் சுட்டுப் பொசுக்கவேண்டியது அவசியமோ, அதுபோலவே, பெண் மக்கள் உண்மைச் சுதந்திரம் பெறவேண்டுமானால், ‘ஆண்மையும்’, ‘பெண்மையும்’ கடவுளால் உண்டாக்கப்பட்டவை என்பதற்குப் பொறுப்பாயுள்ள கடவுள் தன்மையும் ஒழிந்தாக வேண்டும்.
`பெண் ஏன் அடிமையானாள்?’ என்ற நூலில் தந்தை பெரியார்
நன்றி: விடுதலை
9.11.2005
சீனாவும் அமெரிக்காவும்...
9.07.2005
விநாயகர் சதுர்த்தி சிந்தனை
1. ஒருநாள் சிவனின் பெண்சாதியான பார்வதி தேவி, தான் குளிக்கப் போகையில் குளிக்குமிடத்திற்கு வேறு ஒருவரும் வராமல் இருக்கும்படியான ஒரு காவல் ஏற்படுத்துவதற்காக தனது சரீரத்தில் உள்ள அழுக்குகளைத் திரட்டி உருட்டி அதை ஒரு ஆண் பிள்ளையாகும்படி கீழே போட்டதாகவும், அது உடனே ஒரு ஆண் குழந்தை ஆகிவிட்டதாகவும், அந்த ஆண் குழந்தையைப் பார்த்து - “நான் குளித்துவிட்டு வெளியில் வரும் வரை வேறு யாரையும் உள்ளே விடாதே!” என்று சொல்லி அதை வீட்டு வாயிற்படியில் உட்கார வைத்திருந்ததாகவும், அந்த சமயத்தில் பார்வதியின் புருஷனான பரம சிவன் வீட்டிற்குள் புகுந்ததாகவும், அழுக்குருண்டையான வாயில் காக்கும் பிள்ளையார் அந்த பரம சிவனைப் பார்த்து, “பார்வதி குளித்துக் கொண்டிருப்பதால், உள்ளே போகக் கூடாது” என்று தடுத்ததாகவும், அதனால், பரம சிவக் கடவுளுக்கு கோபம் ஏற்பட்டு தன் கையிலிருந்த வாளாயுதத்தால் ஒரே வீச்சாக அந்தப் பிள்ளையார் தலையை வெட்டிக் கீழே தள்ளிவிட்டு குளிக்குமிடத்திற்குள் போனதாகவும், பார்வதி சிவனைப் பார்த்து, “காவல் வைத்திருந்தும் எப்படி உள்ளே வந்தாய்?” என்று கேட்டதாகவும், அதற்கு சிவன், “காவற்காரன் தலையை வெட்டி உருட்டிவிட்டு வந்தேன்?” என்று சொன்னதாகவும், இது கேட்ட பார்வதி, தான் உண்டாக்கின குழந்தை வெட்டுண்டதற்காகப் புரண்டு புரண்டு அழுததாகவும், சிவன் பார்வதியின் துக்கத்தைத் தணிக்கவேண்டி, வெட்டுண்டு கீழே விழுந்த தலையை எடுத்து மறுபடியும் ஒட்டவைத்து உயிர் கொடுக்கலாம் எனக் கருதி உடனே வெளியில் வந்து பார்க்க, வெட்டுண்ட தலை காணாமல் போனதால் அருகிலிருந்த ஒரு யானையின் தலையை வெட்டி, முண்டமாகக் கிடந்த குழந்தையின் கழுத்தில் ஒட்டவைத்து, அதற்கு உயிரைக் கொடுத்து, பார்வதியைத் திருப்தி செய்ததாகவும் கதை சொல்லப்படுகின்றது. இக் கதைக்கு சிவ புராணத்திலும், கந்தபுராணத்திலும் ஆதாரங்களும் இருக்கின்றனவாம்.
2. ஒரு காட்டில் ஆண் - பெண் யானைகள் கலவி செய்யும்போது சிவனும் - பார்வதியும் கண்டு, கலவி ஞாபகம் ஏற்பட்டுக் கலந்ததால், யானை முகத்துடன் குழந்தை பிறந்தது என்றும் பிள்ளையார் கதையில் கூறுகின்றதாம்.
3. பார்வதி கர்ப்பத்தில் ஒரு கருவுற்றிருக்கையில் ஒரு அசுரன் அக்கருப் பைக்குள் காற்று வடிவமாகச் சென்று அக் கருச்சிசுவின் தலையை வெட்டிவிட்டு வந்ததாகவும், அதற்குப் பரிகாரமாக பார்வதி யானையின் தலையை வைத்து உயிர் உண்டாக்கி குழந்தையாகப் பெற்றுக் கொண்டதாகவும் விநாயகர் புராணம் கூறுகின்றதாம்.
4.தக்கனுடைய யாகத்தை அழிப்பதற்காக சிவன் தனது மூத்த குமாரனாகிய கணபதியை அனுப்பியதாகவும், தக்கன் அக்கணபதி தலையை வெட்டிவிட்டதாகவும், சிவன் தனது இரண்டாவது பிள்ளையாகிய சுப்பிரமணியனை அனுப்பினதாகவும், அவன் போய்ப் பார்த்தததில் தலை காணப்படாமல் வெறும் முண்டமாய்க் கிடந்ததாகவும், உடனே ஒரு யானையின் தலையை வெட்டி வைத்து உயிர்ப்பித்ததாகவும் மற்றொரு கதை சொல்லப்படுகின்றது. இது தக்க யாக பரணி என்னும் புத்தகத்தில் இருக்கின்றதாம்!
எனவே, பிள்ளையார் என்னும் கடவுள் சிவனுக்கோ, பார்வதிக்கோ மகனாகப் பாவிக்கப்பட்டவர் என்பதும், அந்தப் பிள்ளையாருக்கு யானைத் தலை செயற்கையால் ஏற்பட்டதென்பதும் ஒப்புக் கொள்ள வேண்டிய விஷயமாகும்.
கடவுள் கூட்டத்தில் முதல்வரான பிள்ளையார் சங்கதியே இப்படிப் பல விதமாகச் சொல்லப்படுவதும், அவை களிலும் எல்லாவிதத்திலும் அவர் பிறரால் உண்டாக்கப்பட் டதாகவும், பிறப்பு, வளர்ப்பு உடையவராகவும் ஏற்படுவதுமானதாயிருந்தால், மற்றக் கடவுள்கள் சங்கதியைப் பற்றி யோசிக்கவும் வேண்டுமா? நிற்க; ஒரு கடவுளுக்குத் தாய் - தகப்பன் ஏற்பட்டால், அந்தத் தாய் தகப்பன்களான கடவுள்களுக்கும் தாய் - தகப்பன்கள் ஏற்பட்டுத்தானே தீரும்? (இவைகளைப் பார்க்கும் போது, கடவுள்கள் தாமாக ஏற்பட்டவர்கள் என்றால் எப்படி ஒப்புக் கொள்ள முடியும்? ஆகவே, இந்தக் கடவுள்களும், உலகமும் ஏற்பட்டதற்கு வேறு ஆதாரங்களைக் கண்டு பிடிக்க வேண்டியதாயிருக்கிறது).
கடவுளைப்பற்றிய விவகாரங்களோ, சந்தேகங்களோ ஏற்படும்போது மாத்திரம் “கடவுள் ஒருவர் தான்; அவர் நாம, ரூப, குணமற்றவர்; ஆதி அந்தமற்றவர்; பிறப்பு இறப்பு அற்றவர்; தானாயுண்டானவர்” என்று சொல்லுவதும், மற்றும் “அது ஒரு சக்தி” என்றும், “ஒரு தன்மை அல்லது குணம்” என்றும் பேசி அந்தச் சமயத்தில் மாத்திரம் தப்பித்துக்கொண்டு பிறகு இம் மாதிரி கடவுள்களைக் கோடி கோடியாய் உண்டாக்கி அவைகளுக்கு இது போன்ற பல ஆபாசக் கதைகளை வண்டி வண்டியாய்க் கற்பித்து, அவற்றையெல்லாம் மக்களை நம்பவும், வணங்கவும், பூசை செய்யவும், உற்சவம் முதலியன செய்யவும் செய்வதில் எவ்வளவு அறியாமையும், புரட்டும், கஷ்டமும், நஷ்டமும் இருக்கின்றது என்பதை வாசகர்கள்தான் உணரவேண்டும்.
உதாரணமாக, ஒரு விஷயத்தைக் குறிப்பிடுகின்றோம்; சிதம்பரக் கோயிலில் யானை முகங் கொண்ட ஒரு பிள்ளையார் சிலை செய்து, அதன் தும்பிக்கையை மற்றொரு பெண் சிலையின் பெண் குறிக்குள் புகவிட்டு, இக் காட்சியை யாவருக்கும் தெரியும்படியாகச் செய்திருப்பதுடன், இந்தக் காட்சிக்குத் தினமும் முறைப்படி பூஜையும் நடந்து வருகிறது. பல ஆண் - பெண் பக்தர்கள் அதைத் தரிசித்து கும்பிட்டும் வருகின்றார்கள்.
சில தேர்களிலும், ஒரு பிள்ளையார் உருவம் தனது துதிக்கையை ஒரு பெண் உருவத்தின் பெண் குறியில் புகுத்தி அப்பெண்ணைத் தூக்கிக் கொண்டிருப்பது போலவும், அந்தப் பெண் இரண்டு காலையும் அகட்டிக் கொண்டு அந்தரத்தில் நிற்பது போலவும் செதுக் கப்பட்டிருக்கின்றது.
இவைகளைப் பார்த்து யாராவது இது என்ன ஆபாசம் என்று கேட்டால், இவைகளுக்கு ஒரு கதையும் புராணமும் இருப்பதாகவும் சொல்லப்படுகின்றது.
அதாவது, ஏதோ ஒரு அசுரனுடன் மற்றொரு கடவுள் யுத்தம் செய்ததாகவும், அந்த யுத்தத்தில் தோன்றிய அசுரர்களையெல்லாம் அந்தக் கடவுள் கொன்றுகொண்டே வந்ததும், தன்னால் முடியாத அளவு சூரர்கள் ஒரு அசுர ஸ்திரீயின் பெண் குறியிலிருந்து, எவனோ ஒருவன் ஒரு காலத்தில் இப்படி எழுதி விட்டான்” என்று பொறுப்பில்லாமல் சொல்லிவிட்டால் போதுமா? இன்றைய தினமும் அவ்வெழுத்துக் கொண்ட ஆதாரங்கள் போற்றப்படவில்லையா? அன்றியும், பல கோயில்களில் உருவாரங்களாகத் தோன்றவில்லையா? இதை “எவனோ ஒருவன் செய்து விட்டான்” என்று சொல்வதானால், இவைகளுக்குத் தினமும் பெண் பிள்ளை வாகனம் முதலியவைகளுடன் பூஜைகள் நடக்க வில்லையா? என்பது போன்றவைகளைச் சற்று யோசித்துப் பார்க்கும்படி வாசகர்களை வேண்டிக் கொள்ளுகின்றோம்.
2. ஒரு காட்டில் ஆண் - பெண் யானைகள் கலவி செய்யும்போது சிவனும் - பார்வதியும் கண்டு, கலவி ஞாபகம் ஏற்பட்டுக் கலந்ததால், யானை முகத்துடன் குழந்தை பிறந்தது என்றும் பிள்ளையார் கதையில் கூறுகின்றதாம்.
3. பார்வதி கர்ப்பத்தில் ஒரு கருவுற்றிருக்கையில் ஒரு அசுரன் அக்கருப் பைக்குள் காற்று வடிவமாகச் சென்று அக் கருச்சிசுவின் தலையை வெட்டிவிட்டு வந்ததாகவும், அதற்குப் பரிகாரமாக பார்வதி யானையின் தலையை வைத்து உயிர் உண்டாக்கி குழந்தையாகப் பெற்றுக் கொண்டதாகவும் விநாயகர் புராணம் கூறுகின்றதாம்.
4.தக்கனுடைய யாகத்தை அழிப்பதற்காக சிவன் தனது மூத்த குமாரனாகிய கணபதியை அனுப்பியதாகவும், தக்கன் அக்கணபதி தலையை வெட்டிவிட்டதாகவும், சிவன் தனது இரண்டாவது பிள்ளையாகிய சுப்பிரமணியனை அனுப்பினதாகவும், அவன் போய்ப் பார்த்தததில் தலை காணப்படாமல் வெறும் முண்டமாய்க் கிடந்ததாகவும், உடனே ஒரு யானையின் தலையை வெட்டி வைத்து உயிர்ப்பித்ததாகவும் மற்றொரு கதை சொல்லப்படுகின்றது. இது தக்க யாக பரணி என்னும் புத்தகத்தில் இருக்கின்றதாம்!
எனவே, பிள்ளையார் என்னும் கடவுள் சிவனுக்கோ, பார்வதிக்கோ மகனாகப் பாவிக்கப்பட்டவர் என்பதும், அந்தப் பிள்ளையாருக்கு யானைத் தலை செயற்கையால் ஏற்பட்டதென்பதும் ஒப்புக் கொள்ள வேண்டிய விஷயமாகும்.
கடவுள் கூட்டத்தில் முதல்வரான பிள்ளையார் சங்கதியே இப்படிப் பல விதமாகச் சொல்லப்படுவதும், அவை களிலும் எல்லாவிதத்திலும் அவர் பிறரால் உண்டாக்கப்பட் டதாகவும், பிறப்பு, வளர்ப்பு உடையவராகவும் ஏற்படுவதுமானதாயிருந்தால், மற்றக் கடவுள்கள் சங்கதியைப் பற்றி யோசிக்கவும் வேண்டுமா? நிற்க; ஒரு கடவுளுக்குத் தாய் - தகப்பன் ஏற்பட்டால், அந்தத் தாய் தகப்பன்களான கடவுள்களுக்கும் தாய் - தகப்பன்கள் ஏற்பட்டுத்தானே தீரும்? (இவைகளைப் பார்க்கும் போது, கடவுள்கள் தாமாக ஏற்பட்டவர்கள் என்றால் எப்படி ஒப்புக் கொள்ள முடியும்? ஆகவே, இந்தக் கடவுள்களும், உலகமும் ஏற்பட்டதற்கு வேறு ஆதாரங்களைக் கண்டு பிடிக்க வேண்டியதாயிருக்கிறது).
கடவுளைப்பற்றிய விவகாரங்களோ, சந்தேகங்களோ ஏற்படும்போது மாத்திரம் “கடவுள் ஒருவர் தான்; அவர் நாம, ரூப, குணமற்றவர்; ஆதி அந்தமற்றவர்; பிறப்பு இறப்பு அற்றவர்; தானாயுண்டானவர்” என்று சொல்லுவதும், மற்றும் “அது ஒரு சக்தி” என்றும், “ஒரு தன்மை அல்லது குணம்” என்றும் பேசி அந்தச் சமயத்தில் மாத்திரம் தப்பித்துக்கொண்டு பிறகு இம் மாதிரி கடவுள்களைக் கோடி கோடியாய் உண்டாக்கி அவைகளுக்கு இது போன்ற பல ஆபாசக் கதைகளை வண்டி வண்டியாய்க் கற்பித்து, அவற்றையெல்லாம் மக்களை நம்பவும், வணங்கவும், பூசை செய்யவும், உற்சவம் முதலியன செய்யவும் செய்வதில் எவ்வளவு அறியாமையும், புரட்டும், கஷ்டமும், நஷ்டமும் இருக்கின்றது என்பதை வாசகர்கள்தான் உணரவேண்டும்.
உதாரணமாக, ஒரு விஷயத்தைக் குறிப்பிடுகின்றோம்; சிதம்பரக் கோயிலில் யானை முகங் கொண்ட ஒரு பிள்ளையார் சிலை செய்து, அதன் தும்பிக்கையை மற்றொரு பெண் சிலையின் பெண் குறிக்குள் புகவிட்டு, இக் காட்சியை யாவருக்கும் தெரியும்படியாகச் செய்திருப்பதுடன், இந்தக் காட்சிக்குத் தினமும் முறைப்படி பூஜையும் நடந்து வருகிறது. பல ஆண் - பெண் பக்தர்கள் அதைத் தரிசித்து கும்பிட்டும் வருகின்றார்கள்.
சில தேர்களிலும், ஒரு பிள்ளையார் உருவம் தனது துதிக்கையை ஒரு பெண் உருவத்தின் பெண் குறியில் புகுத்தி அப்பெண்ணைத் தூக்கிக் கொண்டிருப்பது போலவும், அந்தப் பெண் இரண்டு காலையும் அகட்டிக் கொண்டு அந்தரத்தில் நிற்பது போலவும் செதுக் கப்பட்டிருக்கின்றது.
இவைகளைப் பார்த்து யாராவது இது என்ன ஆபாசம் என்று கேட்டால், இவைகளுக்கு ஒரு கதையும் புராணமும் இருப்பதாகவும் சொல்லப்படுகின்றது.
அதாவது, ஏதோ ஒரு அசுரனுடன் மற்றொரு கடவுள் யுத்தம் செய்ததாகவும், அந்த யுத்தத்தில் தோன்றிய அசுரர்களையெல்லாம் அந்தக் கடவுள் கொன்றுகொண்டே வந்ததும், தன்னால் முடியாத அளவு சூரர்கள் ஒரு அசுர ஸ்திரீயின் பெண் குறியிலிருந்து, எவனோ ஒருவன் ஒரு காலத்தில் இப்படி எழுதி விட்டான்” என்று பொறுப்பில்லாமல் சொல்லிவிட்டால் போதுமா? இன்றைய தினமும் அவ்வெழுத்துக் கொண்ட ஆதாரங்கள் போற்றப்படவில்லையா? அன்றியும், பல கோயில்களில் உருவாரங்களாகத் தோன்றவில்லையா? இதை “எவனோ ஒருவன் செய்து விட்டான்” என்று சொல்வதானால், இவைகளுக்குத் தினமும் பெண் பிள்ளை வாகனம் முதலியவைகளுடன் பூஜைகள் நடக்க வில்லையா? என்பது போன்றவைகளைச் சற்று யோசித்துப் பார்க்கும்படி வாசகர்களை வேண்டிக் கொள்ளுகின்றோம்.
`குடிஅரசு’ - 26-8-1928
நன்றி: விடுதலை
9.06.2005
சாமி விளையாட்டோ!
கடவுளுக்கு இலக்கணமாக மதத் தலைவர்கள் என்ன சொல்லுகிறார்கள்?
பிறப்பு - இறப்பு அற்றவன் என்றுதானே சொல்லுகிறார்கள். அது உண்மையானால் சிவன் எங்கிருந்து வந்தான், பிரம்மா எங்கிருந்து வந்தான், விஷ்ணு எங்கிருந்து குதித்தான்?
விநாயகன் எப்படிப் பிறக்க முடியும். அவனுக்கு விநாயக சதுர்த்தி எப்படிச் கொண்டாட முடியும்? ராமநவமியும், கோகுலாஷ்டமியும் எங்கிருந்து வந்தன?
சரஸ்வதி எங்கிருந்து வந்தாள்? லட்சுமி உருவம் வந்தது எப்படி? கடவுள்களுக்குக் குடும்பங்களும், கூத்தியாள்களும், குழந்தைக் குட்டிகளும் எப்படி இருக்க முடியும்?
அறிவு நாணயத்தோடு சங்கராச்சாரியார்கள் சொல்லட்டும். கடவுளுக்கு வக்காலத்து வாங்கும் இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., தலைவர்களும்தான் சொல்ல முன்வரட்டுமே!
இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லாமல் கடவுள், மதத்தின் பெயரால் எதை நடத்தி னாலும் அது கடைந்தெடுத்த பித்தலாட்டத்திற்குப் பிறந்த பித்தலாட்டமாகத்தானிருக்க முடியும்.
இந்த அடிப்படைக்கு அர்த்தம் காணாமல், கோயில், குளம், திருவிழாக்கள், பண்டிகைகளில் ஈடுபடும் எந்தப் பெரிய மனிதனும், மேதாவியும் பெரும் பதவிக்காரர்களும், பெருந்தனக்காரர்களும் யோக்கியமானவர்களாக, அறிவு நாணயம் உள்ளவர்களாக, பொது நிலையிலும், நடு நிலையிலும் சிந்தனை உள்ளவர்களாக இருக்க முடியுமா என்று கேட்க விரும்புகிறோம்.
மக்களின் அச்சத்தையும், ஆசைகளையும் பயன்படுத்தி, அவர்களைச் சுரண்டுவதற்குக் கற்பிக்கப்பட்ட கடவுளுக்காக, மதத்துக்காக வக்காலத்து வாங்குவதைவிட மோசடி ஒன்று இருக்க முடியுமா?
இந்த மோசடிக்கு ஏடுகளும், இதழ்களும், தொலைக்காட்சிகளும் துணைபோகின்றன என்றால், இது கொலைக் குற்றத்தைவிட மோசமானது அல்லவா?
அதுவும் விநாயக சதுர்த்தி என்கிற பெயரால் விழாக் கொண்டாடி நாட்டையே கலவரப்படுத்துகிறார்கள். பார்வதியின் உடல் அழுக்கிலிருந்து அவன் பிறந்தான் என்று சொல்லுவதற்கு இந்த நாட்டு அறிஞர்கள், படித்தவர்கள் அசூயைப் படுவதில்லையே - அவமானம்! அவமானம்!! வெட்கக்கேடு! படுவெட்கக்கேடு!!
இந்த அழுக்குருண்டைப் பிள்ளையாரு வீதிக்கு வீதி தந்தை பெரியார் தலைமையில் திராவிடர் கழகத் தொண்டர்கள் உடைத்துக் காட்டியும் கூட புத்தி வரவில்லையே!
கற்பித்தது தான் கற்பித்தார்கள், யோக்கியமான, ஒழுக்கமான, ஆபாசமற்ற, அருவருப் பில்லாத ஒன்றைக் கற்பிக்கக் கூடாதா? அந்தக்கால மனிதனுக்கு அவ்வளவுதான் அறிவு இருந்தது என்பதை விவாதத்துக்காக ஒப்புக்கொண்டாலும் இந்தக் காலத்திலும் அதனைக் கொண்டாட, நம்பிக் கூத்தாட புத்தி எங்கே போயிற்று என்றுதானே கேட்க வேண்டும்.
நடை, உடை, பாவனைகளில் மாற்றம் காணும் மனிதன், பிள்ளையார் பார்வதியின் அழுக் குருண்டையில் பிறந்தான் என்பதை நம்புவதில் மாத்திரம் பழங்காலத்துக் காட்டுமிராண்டியாய் இருக்கிறானே! இவனைக் காட்டுமிராண்டி என்று பெரியார் சொன்னால் குற்றமாகுமா? இதைவிட வேறு வார்த்தை கிடைக்கவில்லையே, என்ன செய்ய என்று தந்தை பெரியார் வருத்தப்பட்டதைத் தவறு என்று கூறிட எந்த அறிவாளிகள் இருக்கிறார்கள்?
கடவுளுக்குப் படையல் போடுகிறான். எந்தக் கடவுள் தின்றது? சொல்லுங்கள் பார்க்கலாம். ஆண் கடவுளையும், பெண் கடவுளையும் இரவில் ஓர் அறையில் கொண்டு போய் விடுகிறான்? அந்தப் பெண் கடவுள் கருவுற்று பிரசவம் பார்த்தவன் எவன்? விரலை மடக்க முடியுமா? இந்தச் சிறு பிள்ளை விளையாட்டு இந்தக் காலத்திலுமா?
சின்ன வயது விளையாட்டு பெரியவர்கள் ஆகியும் போகவில்லை என்பதால்தான் இந்தச் சாமி விளையாட்டோ!
நன்றி: விடுதலை
பிறப்பு - இறப்பு அற்றவன் என்றுதானே சொல்லுகிறார்கள். அது உண்மையானால் சிவன் எங்கிருந்து வந்தான், பிரம்மா எங்கிருந்து வந்தான், விஷ்ணு எங்கிருந்து குதித்தான்?
விநாயகன் எப்படிப் பிறக்க முடியும். அவனுக்கு விநாயக சதுர்த்தி எப்படிச் கொண்டாட முடியும்? ராமநவமியும், கோகுலாஷ்டமியும் எங்கிருந்து வந்தன?
சரஸ்வதி எங்கிருந்து வந்தாள்? லட்சுமி உருவம் வந்தது எப்படி? கடவுள்களுக்குக் குடும்பங்களும், கூத்தியாள்களும், குழந்தைக் குட்டிகளும் எப்படி இருக்க முடியும்?
அறிவு நாணயத்தோடு சங்கராச்சாரியார்கள் சொல்லட்டும். கடவுளுக்கு வக்காலத்து வாங்கும் இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., தலைவர்களும்தான் சொல்ல முன்வரட்டுமே!
இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லாமல் கடவுள், மதத்தின் பெயரால் எதை நடத்தி னாலும் அது கடைந்தெடுத்த பித்தலாட்டத்திற்குப் பிறந்த பித்தலாட்டமாகத்தானிருக்க முடியும்.
இந்த அடிப்படைக்கு அர்த்தம் காணாமல், கோயில், குளம், திருவிழாக்கள், பண்டிகைகளில் ஈடுபடும் எந்தப் பெரிய மனிதனும், மேதாவியும் பெரும் பதவிக்காரர்களும், பெருந்தனக்காரர்களும் யோக்கியமானவர்களாக, அறிவு நாணயம் உள்ளவர்களாக, பொது நிலையிலும், நடு நிலையிலும் சிந்தனை உள்ளவர்களாக இருக்க முடியுமா என்று கேட்க விரும்புகிறோம்.
மக்களின் அச்சத்தையும், ஆசைகளையும் பயன்படுத்தி, அவர்களைச் சுரண்டுவதற்குக் கற்பிக்கப்பட்ட கடவுளுக்காக, மதத்துக்காக வக்காலத்து வாங்குவதைவிட மோசடி ஒன்று இருக்க முடியுமா?
இந்த மோசடிக்கு ஏடுகளும், இதழ்களும், தொலைக்காட்சிகளும் துணைபோகின்றன என்றால், இது கொலைக் குற்றத்தைவிட மோசமானது அல்லவா?
அதுவும் விநாயக சதுர்த்தி என்கிற பெயரால் விழாக் கொண்டாடி நாட்டையே கலவரப்படுத்துகிறார்கள். பார்வதியின் உடல் அழுக்கிலிருந்து அவன் பிறந்தான் என்று சொல்லுவதற்கு இந்த நாட்டு அறிஞர்கள், படித்தவர்கள் அசூயைப் படுவதில்லையே - அவமானம்! அவமானம்!! வெட்கக்கேடு! படுவெட்கக்கேடு!!
இந்த அழுக்குருண்டைப் பிள்ளையாரு வீதிக்கு வீதி தந்தை பெரியார் தலைமையில் திராவிடர் கழகத் தொண்டர்கள் உடைத்துக் காட்டியும் கூட புத்தி வரவில்லையே!
கற்பித்தது தான் கற்பித்தார்கள், யோக்கியமான, ஒழுக்கமான, ஆபாசமற்ற, அருவருப் பில்லாத ஒன்றைக் கற்பிக்கக் கூடாதா? அந்தக்கால மனிதனுக்கு அவ்வளவுதான் அறிவு இருந்தது என்பதை விவாதத்துக்காக ஒப்புக்கொண்டாலும் இந்தக் காலத்திலும் அதனைக் கொண்டாட, நம்பிக் கூத்தாட புத்தி எங்கே போயிற்று என்றுதானே கேட்க வேண்டும்.
நடை, உடை, பாவனைகளில் மாற்றம் காணும் மனிதன், பிள்ளையார் பார்வதியின் அழுக் குருண்டையில் பிறந்தான் என்பதை நம்புவதில் மாத்திரம் பழங்காலத்துக் காட்டுமிராண்டியாய் இருக்கிறானே! இவனைக் காட்டுமிராண்டி என்று பெரியார் சொன்னால் குற்றமாகுமா? இதைவிட வேறு வார்த்தை கிடைக்கவில்லையே, என்ன செய்ய என்று தந்தை பெரியார் வருத்தப்பட்டதைத் தவறு என்று கூறிட எந்த அறிவாளிகள் இருக்கிறார்கள்?
கடவுளுக்குப் படையல் போடுகிறான். எந்தக் கடவுள் தின்றது? சொல்லுங்கள் பார்க்கலாம். ஆண் கடவுளையும், பெண் கடவுளையும் இரவில் ஓர் அறையில் கொண்டு போய் விடுகிறான்? அந்தப் பெண் கடவுள் கருவுற்று பிரசவம் பார்த்தவன் எவன்? விரலை மடக்க முடியுமா? இந்தச் சிறு பிள்ளை விளையாட்டு இந்தக் காலத்திலுமா?
சின்ன வயது விளையாட்டு பெரியவர்கள் ஆகியும் போகவில்லை என்பதால்தான் இந்தச் சாமி விளையாட்டோ!
நன்றி: விடுதலை
9.05.2005
விநாயக லீலை: புராணகதை
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்
மாமலராள் நோக்குண்டாம் - மேனிநுடங்காது
பூக்கொண்டு துப்பார்த்துறைமேனி தும்பிக்கையான் பாதம்
தப்பாமற் சார்வார் தமக்கு.
தேவர்கள் துயர் துடைக்க விநாயகர் கஜமுகன் என்ற அரக்கனை அழித்ததால் அவர் கஜானன கணபதி என்று அழைக்கப்படுகிறார். இது குறித்த புராணக்கதை கந்தபுராணத்தில் இடம் பெற்றுள்ளது.
யானைத்தலையை கொண்ட கஜமுகன் என்ற அரக்கன் தேவர்களை துன்புறுத்தி வந்தான். அவனை அழிக்க வேண்டும் என்று தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர்.
சிவபெருமான் விநாயகரை அழைத்து கஜமுகனை அழிக்குமாறு பணித்தார். சிவபெருமான் அளித்த பூதகணங்களுடன் சென்று கஜமுகனுடன் கடும் போரிட்டு அவனை அழித்தார் விநாயகர்.
விநாயகர் கஜமுகனை அழித்ததற்கு பிரதிபலனாக சித்தி, புத்தி என்ற தேவ கன்னியரை அவருக்கு மணம் செய்வித்து தேவர்கள் விநாயகரை வணங்கினர்.
நினைத்த காரியம் நிறைவேறுவதுதான் சித்தி . புத்தி என்றால் அறிவு. விநாயகரை வழிபடுவோருக்கு நினைத்த காரியம் கைகூடும். அறிவும், ஞானமும் பெருகும். இதனால் விநாயகருக்கு பாலச்சந்திரன் என்ற பெயரும் உண்டு.
புகை வடிவில் தோன்றிய அரக்கனை கொன்றதால் விநாயகருக்கு தூமகேது என்ற பெயர் ஏற்பட்டது.
நன்றி: தட்ஸ் தமிழ்
மாமலராள் நோக்குண்டாம் - மேனிநுடங்காது
பூக்கொண்டு துப்பார்த்துறைமேனி தும்பிக்கையான் பாதம்
தப்பாமற் சார்வார் தமக்கு.
- விநாயகர் ஸ்லோகம்
தேவர்கள் துயர் துடைக்க விநாயகர் கஜமுகன் என்ற அரக்கனை அழித்ததால் அவர் கஜானன கணபதி என்று அழைக்கப்படுகிறார். இது குறித்த புராணக்கதை கந்தபுராணத்தில் இடம் பெற்றுள்ளது.
யானைத்தலையை கொண்ட கஜமுகன் என்ற அரக்கன் தேவர்களை துன்புறுத்தி வந்தான். அவனை அழிக்க வேண்டும் என்று தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர்.
சிவபெருமான் விநாயகரை அழைத்து கஜமுகனை அழிக்குமாறு பணித்தார். சிவபெருமான் அளித்த பூதகணங்களுடன் சென்று கஜமுகனுடன் கடும் போரிட்டு அவனை அழித்தார் விநாயகர்.
விநாயகர் கஜமுகனை அழித்ததற்கு பிரதிபலனாக சித்தி, புத்தி என்ற தேவ கன்னியரை அவருக்கு மணம் செய்வித்து தேவர்கள் விநாயகரை வணங்கினர்.
நினைத்த காரியம் நிறைவேறுவதுதான் சித்தி . புத்தி என்றால் அறிவு. விநாயகரை வழிபடுவோருக்கு நினைத்த காரியம் கைகூடும். அறிவும், ஞானமும் பெருகும். இதனால் விநாயகருக்கு பாலச்சந்திரன் என்ற பெயரும் உண்டு.
புகை வடிவில் தோன்றிய அரக்கனை கொன்றதால் விநாயகருக்கு தூமகேது என்ற பெயர் ஏற்பட்டது.
நன்றி: தட்ஸ் தமிழ்
9.01.2005
இந்து மதத்தில் பெண்ணின் திருமண வயது 7 - சங்கராச்சாரியார்
விவாஹ வயதும் சட்டமும்
உபநயனம் மாதிரிப் பெண்ணின் ஏழாவது வயசில் கல்யாணம் பண்ண வேண்டும்;அப்போதுதான் சரணாகதி புத்தி வரும் - என்று சொன்னால், 'இது இந்த காலத்தில் ஸாத்தியமா?சட்ட விரோதமல்லவா?என்று கேட்பீர்கள்.
'ராஜாங்கத்தின் சட்டத்தை மீறு'என்று சொல்லக் கூடாதுதான். அப்படிச் சொல்லவில்லை. சட்ட மறுப்பு (civil disobedience) என்று இப்போது ஆட்சி நடத்துகிறவர்களே ஒரு காலத்தில் பண்ணிக் காட்டித்தான் இருக்கிறார்கள். 'சட்டம் என்று யாரோ எழுதினதற்காக எங்கள் ஸ்வாதந்தரியத்தை விட மாட்டோம்'என்று அப்போது சொன்னார்கள். அதே மாதிரி, "ஜெயிலில் போட்டாலும் பரவாயில்லை;பிராணன் போனாலும் பரவாயில்லை;ஆத்ம «க்ஷமத்துக்காக ஏற்பட்ட விவாஹ ஸம்ஸ்காரத்தை வெறும் லௌகிக விஷயமாக்கிச் சட்டம் பண்ணினால் ஏற்கமுடியாது"என்று கிளம்புகிற வேகம் நம் ஜனங்களுக்கு இல்லை. அப்படி இல்லையே என்பது மட்டும் நான் 'சட்டத்தை மீற வேண்டாம்'என்று சொல்வதற்குக் காரணமில்லை. ஒரு விஷயத்தில் மீறினால், மற்றவற்றிலும் மீறுகிற எண்ணம் உண்டாகி, கட்டுப்பாடே போய்விடும். அதனால்தான் (சட்டத்தை மீறும்படிச்) சொல்லவில்லை. ஆனாலும் சட்டத்தை மீறாமலே ராஜாங்கத்துக்கு சாஸ்திரஅபிப்ராயத்தை விடாமல் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். ராஜாங்கத்துக்கு மட்டுமில்லை;ஜனங்களிலும் நூற்றுக்குத் தொண்ணூறு பேருக்கு மேல் சாஸ்திர அபிப்ராயத்தை விட்டு விட்டார்களே!அவர்களுக்கும் பாக்கியிருக்கிற ஸ்வல்ப சாஸ்திரக்ஞர்கள் எடுத்துச் சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டும். சட்டத்தை மீறாமலே, முன்னேற்றம் எத்தனை நிதானமாக ஏற்பட்டாலும் அதனால் மனம் தளராமல் நூறு வருஷம் ஆனாலும் ஆகட்டும்!இன்னம் அதிகமானாலும் ஆகட்டும்! உன்னதமான இந்த தேசாதாரம் மறுபடி பழக்கத்தில் வரப் பண்ணுவதற்கு நம்மாலானதை சாந்தமான வழியிலேயே செய்வோம் என்று செய்ய வேண்டும். பலனை பார்க்க நாம் (உயிரோடு) இருக்க வேண்டும் என்பதில்லை. ஆயிரம் வருஷத்துக்கு அப்புறம்தான் பலன் உண்டாகும் என்றாலும், அதற்கு இப்போதே நம்மாலான விதையைப் போட்டுவிட வேண்டும். யத்தனத்தை இப்போது ஆரம்பித்தால்தான், என்றைக்கோ ஒரு நாளாவது பலன் கிடைக்கும். பிரயத்தனமே இல்லாவிட்டால் என்றைக்கும் பலன் ஏற்பட முடியாதல்லவா? விதையே போடாவிட்டால் எப்படி மரம் உண்டாகும்?
தர்மசாஸ்திரமே பெரிய சட்டம் என்று ராஜாங்கத்தாருக்கும், பொதுஜனங்களுக்கும் புரியும்படியாக, ஹிதமான முறையில் (by persuasion) வற்புறுத்திக் கொண்டேயிருக்க வேண்டும்.
நன்றி: காமகோடி
உபநயனம் மாதிரிப் பெண்ணின் ஏழாவது வயசில் கல்யாணம் பண்ண வேண்டும்;அப்போதுதான் சரணாகதி புத்தி வரும் - என்று சொன்னால், 'இது இந்த காலத்தில் ஸாத்தியமா?சட்ட விரோதமல்லவா?என்று கேட்பீர்கள்.
'ராஜாங்கத்தின் சட்டத்தை மீறு'என்று சொல்லக் கூடாதுதான். அப்படிச் சொல்லவில்லை. சட்ட மறுப்பு (civil disobedience) என்று இப்போது ஆட்சி நடத்துகிறவர்களே ஒரு காலத்தில் பண்ணிக் காட்டித்தான் இருக்கிறார்கள். 'சட்டம் என்று யாரோ எழுதினதற்காக எங்கள் ஸ்வாதந்தரியத்தை விட மாட்டோம்'என்று அப்போது சொன்னார்கள். அதே மாதிரி, "ஜெயிலில் போட்டாலும் பரவாயில்லை;பிராணன் போனாலும் பரவாயில்லை;ஆத்ம «க்ஷமத்துக்காக ஏற்பட்ட விவாஹ ஸம்ஸ்காரத்தை வெறும் லௌகிக விஷயமாக்கிச் சட்டம் பண்ணினால் ஏற்கமுடியாது"என்று கிளம்புகிற வேகம் நம் ஜனங்களுக்கு இல்லை. அப்படி இல்லையே என்பது மட்டும் நான் 'சட்டத்தை மீற வேண்டாம்'என்று சொல்வதற்குக் காரணமில்லை. ஒரு விஷயத்தில் மீறினால், மற்றவற்றிலும் மீறுகிற எண்ணம் உண்டாகி, கட்டுப்பாடே போய்விடும். அதனால்தான் (சட்டத்தை மீறும்படிச்) சொல்லவில்லை. ஆனாலும் சட்டத்தை மீறாமலே ராஜாங்கத்துக்கு சாஸ்திரஅபிப்ராயத்தை விடாமல் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். ராஜாங்கத்துக்கு மட்டுமில்லை;ஜனங்களிலும் நூற்றுக்குத் தொண்ணூறு பேருக்கு மேல் சாஸ்திர அபிப்ராயத்தை விட்டு விட்டார்களே!அவர்களுக்கும் பாக்கியிருக்கிற ஸ்வல்ப சாஸ்திரக்ஞர்கள் எடுத்துச் சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டும். சட்டத்தை மீறாமலே, முன்னேற்றம் எத்தனை நிதானமாக ஏற்பட்டாலும் அதனால் மனம் தளராமல் நூறு வருஷம் ஆனாலும் ஆகட்டும்!இன்னம் அதிகமானாலும் ஆகட்டும்! உன்னதமான இந்த தேசாதாரம் மறுபடி பழக்கத்தில் வரப் பண்ணுவதற்கு நம்மாலானதை சாந்தமான வழியிலேயே செய்வோம் என்று செய்ய வேண்டும். பலனை பார்க்க நாம் (உயிரோடு) இருக்க வேண்டும் என்பதில்லை. ஆயிரம் வருஷத்துக்கு அப்புறம்தான் பலன் உண்டாகும் என்றாலும், அதற்கு இப்போதே நம்மாலான விதையைப் போட்டுவிட வேண்டும். யத்தனத்தை இப்போது ஆரம்பித்தால்தான், என்றைக்கோ ஒரு நாளாவது பலன் கிடைக்கும். பிரயத்தனமே இல்லாவிட்டால் என்றைக்கும் பலன் ஏற்பட முடியாதல்லவா? விதையே போடாவிட்டால் எப்படி மரம் உண்டாகும்?
தர்மசாஸ்திரமே பெரிய சட்டம் என்று ராஜாங்கத்தாருக்கும், பொதுஜனங்களுக்கும் புரியும்படியாக, ஹிதமான முறையில் (by persuasion) வற்புறுத்திக் கொண்டேயிருக்க வேண்டும்.
நன்றி: காமகோடி
8.30.2005
ஸ்ரீத்ரிபுரஸுந்தரி - அஷ்டகம்
1.கதம்ப வந சாரிணீம் முனிகதம்பகாதம்பிநீம்
நிதம்பஜிதபூதராம் ஸ§ரநிதம்பிநீபூஜிதாம் I
நவாம்புருஹலோசநாம் அபிநவாம்புத ச்யாமலாம்
த்ரிலோசன குடும்பிநீம் த்ரிபுரஸ§ந்தரீமாச்ரயே II
கதம்பவனத்தில் வசிப்பவளும், முனிவர்களாகிய தம்ப வனத்திற்கு மலர்ச்சியை அளிக்கும் முகில் கூட்டமெனத்திகழ்பவளும், மலைபோல் திகழும் கடிபாகத்தையுடையவளும், தேவ மங்கையர் வழிபட நிற்பவளும், புதுத்தாமரை யத்த கண்களையுடையவளும், புதிய நீருண்ட மேகம் போன்று கருமேனியுடையவளும், முக்கண்ணர் மனையாளுமான த்ரிபுரசுந்தரியை சரணடைகிறேன்.
2.கதம்பவந வாஸினீம் கனகவல்லகீ தாரிணீம்
மஹார்ஹமணிஹாரிணீம் முகஸமுல்லஸத்வாருணீம்
தயாவிபவ காரிணீம் விசதரோசனாசாரிணீம்
த்ரிலோசன குடும்பினீம் த்ரிபுரஸ§ந்தராமாச்ரயே II
கதம்ப வனத்தில் வசிப்பவளும், தங்க வீணை தாங்கியவளும், மதிப்பு மிக்க மாணிக்க ஹாரம் பூண்டவளும், வாயில் கமழும் வாருணி கொண்டவளும், பக்தர்களுக்கு கருணை பாலிப்பவளும், தெளிவான கோரோசனை திலகம் கொண்டவளும், முக்கணர்மனையாளுமாகிய த்ரிபுர சுந்தரியை சரண்புகுகிறேன்.
3.கதாம்பவனசாலயா குசபரோல்லன்மாலயா
குசேபமிதசைலயா குருக்ருபாலஸத்வேலயா I
மதாருணகபோலயா மதுரகீத வாசாலயா
கயாபி கனலீலயா கவசிதா வயம் லீலயா II
கதம்ப வனத்தில் குடிகொண்டதும், மலையையத்த மார்பகங்களையுடையதும், அம்மார்பகங்களில் துவளும் மாலைகளுடன் அளவில்லாத கருணையின் எல்லையோ எனத்திகழ்வதும், வாருணீ மதத்தால் செவ்வேறிய கன்னங்களையுடையதும், இனிய கீதம் முழுங்குவதும், நீருண்ட மேகமென விளங்குவதுமான ஆச்சார்யமான பேரருளால் நாங்கள் பாதுகாப்பு உடையவர்களானோம்.
4.கதம்பவனமத்யகாம் கனகமண்டலோபஸ்திதாம்
ஷடம்புருஹ வாஸினீம் ஸததஸித்த ஸெளதாமினீம்
விடம்பிதஜபாருசிம் விகர சந்த்ர சூடாமணிம்
த்ரிலோசன குடும்பினீம், த்ரிபுரஸ§ந்தரீமாச்ரயே II
கதம்பவனத்திற்குள் வசிப்பவளும், தங்கமயமன மண்டலத்தினுள் ஆறு தாமரை மலர்களில் வசிப்பவளாய் எப்போதும் ஒளிரும் மின்னலாய் இருப்பவளும், ஜபா புஷ்பம்போல் செந்நிரமானவளும், ஒளிரும் சந்திரக்கலை அணிந்தவளும் ஆன முக்கண்ணரான பரமேச்வரன் மனையாளான த்ரிபுரசுந்தரியை சரணடைகிறேன்.
5.குசாஞ்சித விபஞ்சிகாம் குடிலகுந்தலாலங்க்ருதாம்
குசேசய நிவாஸினீம் குடிலசித்தவித்வேஷிணீம் !
மதாருண விலோசனாம் மனஸிஜாரிஸம்மோஹினீம்
மதங்கமுனிகன்யகாம் மதுரபாஷிணீமாச்ரயே II
மார்பகங்களோடு ஒட்டிய வீணையும், மேடு பள்ளமான குந்தலங்களும் விளங்க, தாமரையில் வீற்றிருந்து, கெட்ட மனதுடையோரை வெறுத்து ஒதுக்கி, மதமேறிய கண்களோடு மன்மதனையடக்கிய பரமனை மயக்குகிற, மதங்கமுனிவர் மகளான, இனிய பேச்சுடைய மகேச்வரியை சரண் அடைகிறேன்.
6.ஸ்மரேத் ப்ரதமபுஷ்பிணீம் ருதிரபிந்து நீலாம்பராம்
க்ருஹீதமது பாத்ரிகாம் மதவிகூர்ணநேத்ராஞ்சலாம் I
கனஸ்தனபரோந்நதாம் கலித சூலிகாம் ச்யாமலாம்
த்ரிலோசன குடும்பினீம் த்ரிபுர ஸ§ந்தரீ மாச்ரயே II
மன்மதனின் முதல் பாணமான தாமரை மலர் கொண்டவளும், ரத்தப்பொட்டுகளடங்கிய நீல வஸ்திரம் தரித்தவளும், கையில் மது பாத்திரமேந்தியவளும், மதமேறிய கண்களும், பருத்த ஸ்தனங்களும், அவிழ்ந்த முடியும் கொண்டு கருத்த மேனியளான முக்கண்ணரின் மனவியை த்ரிபுர சுந்தரியை சரண் அடைகிறேன்.
7.ஸகுங்கும் விலேபனாம் அலகசும்பி கஸ்தூரிகாம்
ஸமந்தஹஸிதேக்ஷணாம் ஸதரசாப பாசாங்குசாம் I
அசேஷஜன மோஹினீம் அருணமால்ய பூஷாம்பராம்
ஜபாகுஸ§ப பாஸ§ராம் ஜபவிதௌ ஸ்மராம்யம்பிகாம் II
ஜபம் செய்யும்போது ஜபாம்புஷ்பம் போல் விளங்கும் அம்பிகையை நான் ஸ்மரிக்கிறேன். அந்த அம்பிகையானவள் குங்குமப் பூச்சுடனும், அலகங்களைத் தொடும் கஸ்தூரி திலகத்தோடும் விளங்குகிறாள். புன்முருவல் பூத்த கண்களுடனும், வில், பானம், பாசம், அங்குசம் ஏந்திய கைகளுடனும் அகில ஜனங்களையும் கவர்ந்து மோஹிக்கச் செய்கிறாள் அம்பிகை. சிவந்த மாலைகளும், ஆபரணங்களும், ஸ்திரமும் தரித்தவள் அவள்.
8.புரந்தர புரந்த்ரகா சிகுரபந்த ஸைரந்த்ரிகாம்
பிதாமஹபதிவ்ரதா படுபாடீரசர்சாரதாம் I
முகுந்த ரமணீமணீ லஸதலங்க்ரியா காரிணீம்
பஜாமி புவம்பிகாம் ஸ§ரவதூடிகா சேடிகாம் II
தேவமங்கயரை வேலைக்காரிகளாகக் கொண்டுள்ள புவன மாதாவான அம்பிகையை ஸேவிக்கிறேன். இந்த்ரன் மனைவி, அம்பிகையின் தலையை வாரிப்பின்னும் ஒப்பனைக்காரியாகவும், ஸரஸ்வதிதேவி, அம்பிகையின் உடலை சந்தனக்குழம்பால் பூசும் தங்கையாகவும், லக்ஷ்மீ தேவி, பல ஆபரணங்களால் அம்பிகையை அழகுபடுத்தும் மாதுவாகவும் பணிபுரிகிறார்கள்.
நன்றி: காமகோடி
நிதம்பஜிதபூதராம் ஸ§ரநிதம்பிநீபூஜிதாம் I
நவாம்புருஹலோசநாம் அபிநவாம்புத ச்யாமலாம்
த்ரிலோசன குடும்பிநீம் த்ரிபுரஸ§ந்தரீமாச்ரயே II
கதம்பவனத்தில் வசிப்பவளும், முனிவர்களாகிய தம்ப வனத்திற்கு மலர்ச்சியை அளிக்கும் முகில் கூட்டமெனத்திகழ்பவளும், மலைபோல் திகழும் கடிபாகத்தையுடையவளும், தேவ மங்கையர் வழிபட நிற்பவளும், புதுத்தாமரை யத்த கண்களையுடையவளும், புதிய நீருண்ட மேகம் போன்று கருமேனியுடையவளும், முக்கண்ணர் மனையாளுமான த்ரிபுரசுந்தரியை சரணடைகிறேன்.
2.கதம்பவந வாஸினீம் கனகவல்லகீ தாரிணீம்
மஹார்ஹமணிஹாரிணீம் முகஸமுல்லஸத்வாருணீம்
தயாவிபவ காரிணீம் விசதரோசனாசாரிணீம்
த்ரிலோசன குடும்பினீம் த்ரிபுரஸ§ந்தராமாச்ரயே II
கதம்ப வனத்தில் வசிப்பவளும், தங்க வீணை தாங்கியவளும், மதிப்பு மிக்க மாணிக்க ஹாரம் பூண்டவளும், வாயில் கமழும் வாருணி கொண்டவளும், பக்தர்களுக்கு கருணை பாலிப்பவளும், தெளிவான கோரோசனை திலகம் கொண்டவளும், முக்கணர்மனையாளுமாகிய த்ரிபுர சுந்தரியை சரண்புகுகிறேன்.
3.கதாம்பவனசாலயா குசபரோல்லன்மாலயா
குசேபமிதசைலயா குருக்ருபாலஸத்வேலயா I
மதாருணகபோலயா மதுரகீத வாசாலயா
கயாபி கனலீலயா கவசிதா வயம் லீலயா II
கதம்ப வனத்தில் குடிகொண்டதும், மலையையத்த மார்பகங்களையுடையதும், அம்மார்பகங்களில் துவளும் மாலைகளுடன் அளவில்லாத கருணையின் எல்லையோ எனத்திகழ்வதும், வாருணீ மதத்தால் செவ்வேறிய கன்னங்களையுடையதும், இனிய கீதம் முழுங்குவதும், நீருண்ட மேகமென விளங்குவதுமான ஆச்சார்யமான பேரருளால் நாங்கள் பாதுகாப்பு உடையவர்களானோம்.
4.கதம்பவனமத்யகாம் கனகமண்டலோபஸ்திதாம்
ஷடம்புருஹ வாஸினீம் ஸததஸித்த ஸெளதாமினீம்
விடம்பிதஜபாருசிம் விகர சந்த்ர சூடாமணிம்
த்ரிலோசன குடும்பினீம், த்ரிபுரஸ§ந்தரீமாச்ரயே II
கதம்பவனத்திற்குள் வசிப்பவளும், தங்கமயமன மண்டலத்தினுள் ஆறு தாமரை மலர்களில் வசிப்பவளாய் எப்போதும் ஒளிரும் மின்னலாய் இருப்பவளும், ஜபா புஷ்பம்போல் செந்நிரமானவளும், ஒளிரும் சந்திரக்கலை அணிந்தவளும் ஆன முக்கண்ணரான பரமேச்வரன் மனையாளான த்ரிபுரசுந்தரியை சரணடைகிறேன்.
5.குசாஞ்சித விபஞ்சிகாம் குடிலகுந்தலாலங்க்ருதாம்
குசேசய நிவாஸினீம் குடிலசித்தவித்வேஷிணீம் !
மதாருண விலோசனாம் மனஸிஜாரிஸம்மோஹினீம்
மதங்கமுனிகன்யகாம் மதுரபாஷிணீமாச்ரயே II
மார்பகங்களோடு ஒட்டிய வீணையும், மேடு பள்ளமான குந்தலங்களும் விளங்க, தாமரையில் வீற்றிருந்து, கெட்ட மனதுடையோரை வெறுத்து ஒதுக்கி, மதமேறிய கண்களோடு மன்மதனையடக்கிய பரமனை மயக்குகிற, மதங்கமுனிவர் மகளான, இனிய பேச்சுடைய மகேச்வரியை சரண் அடைகிறேன்.
6.ஸ்மரேத் ப்ரதமபுஷ்பிணீம் ருதிரபிந்து நீலாம்பராம்
க்ருஹீதமது பாத்ரிகாம் மதவிகூர்ணநேத்ராஞ்சலாம் I
கனஸ்தனபரோந்நதாம் கலித சூலிகாம் ச்யாமலாம்
த்ரிலோசன குடும்பினீம் த்ரிபுர ஸ§ந்தரீ மாச்ரயே II
மன்மதனின் முதல் பாணமான தாமரை மலர் கொண்டவளும், ரத்தப்பொட்டுகளடங்கிய நீல வஸ்திரம் தரித்தவளும், கையில் மது பாத்திரமேந்தியவளும், மதமேறிய கண்களும், பருத்த ஸ்தனங்களும், அவிழ்ந்த முடியும் கொண்டு கருத்த மேனியளான முக்கண்ணரின் மனவியை த்ரிபுர சுந்தரியை சரண் அடைகிறேன்.
7.ஸகுங்கும் விலேபனாம் அலகசும்பி கஸ்தூரிகாம்
ஸமந்தஹஸிதேக்ஷணாம் ஸதரசாப பாசாங்குசாம் I
அசேஷஜன மோஹினீம் அருணமால்ய பூஷாம்பராம்
ஜபாகுஸ§ப பாஸ§ராம் ஜபவிதௌ ஸ்மராம்யம்பிகாம் II
ஜபம் செய்யும்போது ஜபாம்புஷ்பம் போல் விளங்கும் அம்பிகையை நான் ஸ்மரிக்கிறேன். அந்த அம்பிகையானவள் குங்குமப் பூச்சுடனும், அலகங்களைத் தொடும் கஸ்தூரி திலகத்தோடும் விளங்குகிறாள். புன்முருவல் பூத்த கண்களுடனும், வில், பானம், பாசம், அங்குசம் ஏந்திய கைகளுடனும் அகில ஜனங்களையும் கவர்ந்து மோஹிக்கச் செய்கிறாள் அம்பிகை. சிவந்த மாலைகளும், ஆபரணங்களும், ஸ்திரமும் தரித்தவள் அவள்.
8.புரந்தர புரந்த்ரகா சிகுரபந்த ஸைரந்த்ரிகாம்
பிதாமஹபதிவ்ரதா படுபாடீரசர்சாரதாம் I
முகுந்த ரமணீமணீ லஸதலங்க்ரியா காரிணீம்
பஜாமி புவம்பிகாம் ஸ§ரவதூடிகா சேடிகாம் II
தேவமங்கயரை வேலைக்காரிகளாகக் கொண்டுள்ள புவன மாதாவான அம்பிகையை ஸேவிக்கிறேன். இந்த்ரன் மனைவி, அம்பிகையின் தலையை வாரிப்பின்னும் ஒப்பனைக்காரியாகவும், ஸரஸ்வதிதேவி, அம்பிகையின் உடலை சந்தனக்குழம்பால் பூசும் தங்கையாகவும், லக்ஷ்மீ தேவி, பல ஆபரணங்களால் அம்பிகையை அழகுபடுத்தும் மாதுவாகவும் பணிபுரிகிறார்கள்.
நன்றி: காமகோடி
8.28.2005
திருவாசகம் - இளையராஜா - சோ
கேள்வி: இளையராஜாவின் `திருவாசகம்’ சிம்ஃபொனி கேட்டீர்களா? (கேட்டவர்கள் எல்லோரும் `ஆஹா’ என்று பாராட்டுகிறார்களே)
பதில்: இந்த மாதிரி விஷயங்களில் (குறிப்பாக), நான் பழைமைவாதி, விஷ்ணு சஹஸ்ர நாமத்தையும், ஸ்ரீ ருத்ரத்தையும்கூட, மேலை நாட்டு சங்கீத பாஷையில் கொண்டு வரலாம்; அது அந்த சங்கீதத்தின் மேன்மையை உணர்ந்த வர்களுக்கு, ரசிக்கக் கூடியதாக இருக்கலாம். இந்த திருவாசக ஸிம்ஃபொனியும் அப்படித்தான். கோவிலில் கேட்கக் கூடியதாக இல்லை; சர்ச்சிற்கு உகந்ததாக இருக்கலாம். துதி, தமாஷாகி விடுவது ஏற்கக் கூடியது அல்ல என்பது என் கருத்து.
(`துக்ளக்’ 24-8-2005 பக்கம் 24-25)
துக்ளக் `சோ’ ராமசாமி தான் ஒரு பழமைவாதி என்பதைப் பட்டாங்கமாக ஒப்புக் கொண் டுள்ளார். இதன் மூலம்தான் ஒரு நியாயவாதி என்றோ நடுநிலைவாதி என்றோ என்றைக்கும் சொல்ல முடியாத நிலைக்குத் தன்னைத் தள்ளிக் கொண்டு விட்டார்; ஒரு வகையில் இது நல்லதுதான். வீராதி வீரராக அரசியலிலும், மற்றவற்றிலும் வாலை முறுக்கிக் கொண்டு பேனா வைத் தூக்கிக் கொண்டு கிளம்பும் போதெல்லாம் நறுக்கென்று மண்டையில் குட்ட இது பயன்படக் கூடும்.
பழைமை மீதில் நாட்டம் கொள்வதற்குக் காரணமும்கூட, பார்ப்பனப் பற்றும், வெறியும் தான் பழைமையான வருணாசிரமம்தானே அவர்களைத் தூக்கி உயர் ஜாதி என்கிற யானைமீது உட்கார வைக்கிறது.
புதுமை என்றால் பழைமையான இராமாயணத்தையும், பாரத்தையும், சாஸ்திர இதிகாச வேதங்களை எல்லாம் குப்பைக் குழியில்தானே கூட்டித் தள்ள வேண்டியிருக்கும். அதனால்தான் மிகவும் விழிப்பாகவும், வினயமாகவும் பழைமைவாதி என்று தனக்குத் தானே முத்திரை குத்திக் கொள்கிறார்.
இளையராஜா போன்றவர்கள் என்னதான் பக்தியில் உருகி, சிம்பொனி இசைத் தேனில் திருவாசகத்தைக் குழைத்துக் கொடுத்தாலும், பார்ப்பனர்களின் பார்வையில் பத்துக்கு ஒன்று என்கிற மதிப்பெண்ணைக் கூடப் பெறப் போவதில்லை.
இன்னொன்றையும் இதில் கவனிக்கத் தவறி விடக் கூடாது. திருவாசகத்துக்கு இளையராஜா அமைத்திருக்கும் இசை சர்ச்சுக்குத்தான் உகந்ததாம்.
இன்னும் புரியவில்லையா? இளையராஜா இந்த திருவாசக சிம்பொனியை உருவாக்கிட நிதி உதவி செய்தது கிருத்தவ அமைப்பு; அதற்குத்தான் இந்த இந்து முன்னணி - ஆர்.எஸ்.எஸ். மொத்து.
இனிமேலாவது இளையராஜாக்களின் கண்கள் திறக்குமா? சர்ச்சுகளின் மண்டையில் தான் உறைக்குமா?
நன்றி: விடுதலை
பதில்: இந்த மாதிரி விஷயங்களில் (குறிப்பாக), நான் பழைமைவாதி, விஷ்ணு சஹஸ்ர நாமத்தையும், ஸ்ரீ ருத்ரத்தையும்கூட, மேலை நாட்டு சங்கீத பாஷையில் கொண்டு வரலாம்; அது அந்த சங்கீதத்தின் மேன்மையை உணர்ந்த வர்களுக்கு, ரசிக்கக் கூடியதாக இருக்கலாம். இந்த திருவாசக ஸிம்ஃபொனியும் அப்படித்தான். கோவிலில் கேட்கக் கூடியதாக இல்லை; சர்ச்சிற்கு உகந்ததாக இருக்கலாம். துதி, தமாஷாகி விடுவது ஏற்கக் கூடியது அல்ல என்பது என் கருத்து.
(`துக்ளக்’ 24-8-2005 பக்கம் 24-25)
துக்ளக் `சோ’ ராமசாமி தான் ஒரு பழமைவாதி என்பதைப் பட்டாங்கமாக ஒப்புக் கொண் டுள்ளார். இதன் மூலம்தான் ஒரு நியாயவாதி என்றோ நடுநிலைவாதி என்றோ என்றைக்கும் சொல்ல முடியாத நிலைக்குத் தன்னைத் தள்ளிக் கொண்டு விட்டார்; ஒரு வகையில் இது நல்லதுதான். வீராதி வீரராக அரசியலிலும், மற்றவற்றிலும் வாலை முறுக்கிக் கொண்டு பேனா வைத் தூக்கிக் கொண்டு கிளம்பும் போதெல்லாம் நறுக்கென்று மண்டையில் குட்ட இது பயன்படக் கூடும்.
பழைமை மீதில் நாட்டம் கொள்வதற்குக் காரணமும்கூட, பார்ப்பனப் பற்றும், வெறியும் தான் பழைமையான வருணாசிரமம்தானே அவர்களைத் தூக்கி உயர் ஜாதி என்கிற யானைமீது உட்கார வைக்கிறது.
புதுமை என்றால் பழைமையான இராமாயணத்தையும், பாரத்தையும், சாஸ்திர இதிகாச வேதங்களை எல்லாம் குப்பைக் குழியில்தானே கூட்டித் தள்ள வேண்டியிருக்கும். அதனால்தான் மிகவும் விழிப்பாகவும், வினயமாகவும் பழைமைவாதி என்று தனக்குத் தானே முத்திரை குத்திக் கொள்கிறார்.
இளையராஜா போன்றவர்கள் என்னதான் பக்தியில் உருகி, சிம்பொனி இசைத் தேனில் திருவாசகத்தைக் குழைத்துக் கொடுத்தாலும், பார்ப்பனர்களின் பார்வையில் பத்துக்கு ஒன்று என்கிற மதிப்பெண்ணைக் கூடப் பெறப் போவதில்லை.
இன்னொன்றையும் இதில் கவனிக்கத் தவறி விடக் கூடாது. திருவாசகத்துக்கு இளையராஜா அமைத்திருக்கும் இசை சர்ச்சுக்குத்தான் உகந்ததாம்.
இன்னும் புரியவில்லையா? இளையராஜா இந்த திருவாசக சிம்பொனியை உருவாக்கிட நிதி உதவி செய்தது கிருத்தவ அமைப்பு; அதற்குத்தான் இந்த இந்து முன்னணி - ஆர்.எஸ்.எஸ். மொத்து.
இனிமேலாவது இளையராஜாக்களின் கண்கள் திறக்குமா? சர்ச்சுகளின் மண்டையில் தான் உறைக்குமா?
நன்றி: விடுதலை
8.26.2005
கிருஷ்ண ஜெயந்தியும் இயக்குநர் சூர்யாவும்!
`நியூ’ என்ற திரைப்படம் சூர்யா என்பவரின் இயக்ககத்தில் வெளிவந்தது. அப்பட்டமான ஆபாசக் காட்சிகள் அதில் இடம் பெற்றிருந்தன. திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் வழக்கறிஞர் அ. அருள்மொழி இந்தத் திரைப்படத்தைத் தடை செய்யவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினைத் தொடுத்தார். தீர்ப்பு வருவதற்குள் திரைப்படம் ஓடி மறைந்து விட்டது என்றாலும் தணிக்கைக் குழுமம் அளித்த சான்றிதழை உயர்நீதிமன்றம், ரத்து செய்ததன் மூலம் ஓர் அதிர்ச்சி வைத்தியத்தைத் தந்துள்ளது.
சினிமாவை ஒரு கலை என்று ஒப்புக் கொள் வதற்கே தயங்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சினிமாவும், இதழ்களும் பச்சையாக சமூகச் சீரழிவை வியாபாரமாக செய்து கொண்டு இருக்கின்றனவோ என்று கருதும் அளவுக்குப் புரையோடி, சமுதாயத்தின் மனப்பான்மையையே முற்றிலும் மாசுபடுத்தும் எல்லையைத் தொட்டு விட்டது.
``சுற்றுச்சூழல் மாசு’’ என்பதில் முதலிடம் வகிப்பது இந்த சினிமாக்களே!
யதார்த்தத்தைத்தானே படம் பிடிக்கிறார்கள் என்று சப்பைக் கட்டு கட்டும் சில `மேதா விலாசங்கள்’ நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள்.
குளியலறையில் மனிதனுக்கு இருக்கும் யதார்த்த உரிமையைப் படம் பிடிப்பார்களா? அதற்கு எது தடையாக இருக்கிறதோ, அதனை நாகரிகம் கருதி மற்றவற்றிலும் கடைபிடிப்பதுதான் மனிதன் நாகரிகக் கட்டுக்குள் இருக்கிறான் என்பதற்கு இலக்கணமாகும்.
இந்த ஆபாசம் ஒருபுறம்; மக்களை மடமைச் சாக்கடையில் தள்ளும் வகையில் விஞ்ஞானக் கருவியான சினிமா மூலம் மூட நம்பிக்கை நச்சுக் கிருமிகளைப் பரப்புவது எந்த வகையில் சரியானது?
தணிக்கைக் குழுவில் விஞ்ஞான மனப்பான்மை உள்ள பகுத்தறிவுச் சிந்தனையாளர்களை நியமிக்கவேண்டாமா? இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கடமைகளுள் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்கவேண்டும் என்று கூறப்படவில்லையா?
`பாபா’க்களும், `அண்ணாமலை’களும், `சந்திரமுகி’களும் அறிவியல் கண்ணோட்டத்தில் ஏற்கத் தக்கதுதானா? இந்தக் காலகட்டத்திலும் ஆவி, பேய் என்பதெல்லாம் - நாட்டைக் காட்டு விலங் காண்டித்தனத்துக்கு இழுத்துச் செல்லுவதல்லவா?
மனிதனின் மகத்தான அறிவை நாசப்படுத்துபவர்களைவிட மூட நம்பிக்கை நோய்க்கு ஆட்படுத்துபவர்களைவிட கொலையாளிகள், சமூக விரோதிகள் வேறு யாராக இருக்க முடியும்?
இந்து மனப்பான்மை என்பதே ஒரு வகையான கொடூர - மனிதத் தன்மைக்கு விரோதமான நோய்களைப் பரப்பும் சாக்கடையாகும். அதில் தொட்ட இடமெல்லாம் அசிங்கம்தான், ஆபாசம் தான் - அறிவுக் கண்களைக் குருடாக்கும் மூடத்தனம்தான்.
எடுத்துக்காட்டாக இன்றைக்கு `கிருஷ்ண ஜெயந்தி’ கொண்டாடுகிறார்கள். அந்தக் கிருஷ்ணன் எப்படி பிறந்தான் என்றால், மகாவிஷ்ணுவின் மார்பு மயிரிலிருந்து பிறந்தான் என்கிறார்கள். கேட்பதற்கு எவ்வளவுக் கேவலமாக அறிவுக்கும் பொருத்தமற்றதாக இருக்கிறது.
பெண்களோடு கூடிக் குலவுவது; முத்தமிடுவது, புணர்வது என்பதுதான் இந்தக் கிருஷ்ணக் கடவுளின் வேலை. கிருஷ்ணன் என்கிற இந்த ஆண் கடவுள் நாரதன் என்கிற ஆண் கடவுளோடு புணர்ந்து 60 பிள்ளைகளைப் பெற்றான். அவைதான் பிரபவ, விபவ என்று தொடங்கும் தமிழ் வருடங்களாகும்.
இதையெல்லாம் சொல்லுவதற்கோ, நம்புவதற்கோ கூச்சப்படாதவர்கள் இந்துத்துவாவாதிகள். இந்து மதச் சிந்தனை என்பதே ஆபாசக் குட்டைதான்!
இன்றைய தினம் பெண் கேலிபற்றிக் கவலைப்படுகிறோம். இதில் ஈடுபடும் ஆண்களைத் தண்டிக்கச் சட்டம் கூட வந்துள்ளது.
இதற்கெல்லாம் வழிகாட்டி இந்து மதத்தின் கிருஷ்ணன் என்கிற கடவுள்தானே. இல்லை என்று மறுக்க முடியுமா? பக்தியின் பெயரால் நடந்தாலும், கலையின் பெயரால் நடந்தாலும் ஆபாசம் ஆபாசம்தானே?
கிருஷ்ணனாகிய இந்த ஆண் கேடி - காலி பிறந்த நாள் என்று கூறி மத்திய - மாநில அரசுகள் விடுமுறையும் விடுகின்றனவே - அரசு சார்பில் வாழ்த்துகளையும் தெரிவிக்கிறார்கள். இந்த நாட்டில் பெண் கேலி எப்படி ஒழியும்?
அறிவார்ந்த சிந்தனைகள் எல்லா இடங்களிலும் இடம் பெற்றால்தான் நாடு காடாக மாறாமல் தப்பிக்கும் - எச்சரிக்கை!
நன்றி: விடுதலை
சினிமாவை ஒரு கலை என்று ஒப்புக் கொள் வதற்கே தயங்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சினிமாவும், இதழ்களும் பச்சையாக சமூகச் சீரழிவை வியாபாரமாக செய்து கொண்டு இருக்கின்றனவோ என்று கருதும் அளவுக்குப் புரையோடி, சமுதாயத்தின் மனப்பான்மையையே முற்றிலும் மாசுபடுத்தும் எல்லையைத் தொட்டு விட்டது.
``சுற்றுச்சூழல் மாசு’’ என்பதில் முதலிடம் வகிப்பது இந்த சினிமாக்களே!
யதார்த்தத்தைத்தானே படம் பிடிக்கிறார்கள் என்று சப்பைக் கட்டு கட்டும் சில `மேதா விலாசங்கள்’ நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள்.
குளியலறையில் மனிதனுக்கு இருக்கும் யதார்த்த உரிமையைப் படம் பிடிப்பார்களா? அதற்கு எது தடையாக இருக்கிறதோ, அதனை நாகரிகம் கருதி மற்றவற்றிலும் கடைபிடிப்பதுதான் மனிதன் நாகரிகக் கட்டுக்குள் இருக்கிறான் என்பதற்கு இலக்கணமாகும்.
இந்த ஆபாசம் ஒருபுறம்; மக்களை மடமைச் சாக்கடையில் தள்ளும் வகையில் விஞ்ஞானக் கருவியான சினிமா மூலம் மூட நம்பிக்கை நச்சுக் கிருமிகளைப் பரப்புவது எந்த வகையில் சரியானது?
தணிக்கைக் குழுவில் விஞ்ஞான மனப்பான்மை உள்ள பகுத்தறிவுச் சிந்தனையாளர்களை நியமிக்கவேண்டாமா? இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கடமைகளுள் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்கவேண்டும் என்று கூறப்படவில்லையா?
`பாபா’க்களும், `அண்ணாமலை’களும், `சந்திரமுகி’களும் அறிவியல் கண்ணோட்டத்தில் ஏற்கத் தக்கதுதானா? இந்தக் காலகட்டத்திலும் ஆவி, பேய் என்பதெல்லாம் - நாட்டைக் காட்டு விலங் காண்டித்தனத்துக்கு இழுத்துச் செல்லுவதல்லவா?
மனிதனின் மகத்தான அறிவை நாசப்படுத்துபவர்களைவிட மூட நம்பிக்கை நோய்க்கு ஆட்படுத்துபவர்களைவிட கொலையாளிகள், சமூக விரோதிகள் வேறு யாராக இருக்க முடியும்?
இந்து மனப்பான்மை என்பதே ஒரு வகையான கொடூர - மனிதத் தன்மைக்கு விரோதமான நோய்களைப் பரப்பும் சாக்கடையாகும். அதில் தொட்ட இடமெல்லாம் அசிங்கம்தான், ஆபாசம் தான் - அறிவுக் கண்களைக் குருடாக்கும் மூடத்தனம்தான்.
எடுத்துக்காட்டாக இன்றைக்கு `கிருஷ்ண ஜெயந்தி’ கொண்டாடுகிறார்கள். அந்தக் கிருஷ்ணன் எப்படி பிறந்தான் என்றால், மகாவிஷ்ணுவின் மார்பு மயிரிலிருந்து பிறந்தான் என்கிறார்கள். கேட்பதற்கு எவ்வளவுக் கேவலமாக அறிவுக்கும் பொருத்தமற்றதாக இருக்கிறது.
பெண்களோடு கூடிக் குலவுவது; முத்தமிடுவது, புணர்வது என்பதுதான் இந்தக் கிருஷ்ணக் கடவுளின் வேலை. கிருஷ்ணன் என்கிற இந்த ஆண் கடவுள் நாரதன் என்கிற ஆண் கடவுளோடு புணர்ந்து 60 பிள்ளைகளைப் பெற்றான். அவைதான் பிரபவ, விபவ என்று தொடங்கும் தமிழ் வருடங்களாகும்.
இதையெல்லாம் சொல்லுவதற்கோ, நம்புவதற்கோ கூச்சப்படாதவர்கள் இந்துத்துவாவாதிகள். இந்து மதச் சிந்தனை என்பதே ஆபாசக் குட்டைதான்!
இன்றைய தினம் பெண் கேலிபற்றிக் கவலைப்படுகிறோம். இதில் ஈடுபடும் ஆண்களைத் தண்டிக்கச் சட்டம் கூட வந்துள்ளது.
இதற்கெல்லாம் வழிகாட்டி இந்து மதத்தின் கிருஷ்ணன் என்கிற கடவுள்தானே. இல்லை என்று மறுக்க முடியுமா? பக்தியின் பெயரால் நடந்தாலும், கலையின் பெயரால் நடந்தாலும் ஆபாசம் ஆபாசம்தானே?
கிருஷ்ணனாகிய இந்த ஆண் கேடி - காலி பிறந்த நாள் என்று கூறி மத்திய - மாநில அரசுகள் விடுமுறையும் விடுகின்றனவே - அரசு சார்பில் வாழ்த்துகளையும் தெரிவிக்கிறார்கள். இந்த நாட்டில் பெண் கேலி எப்படி ஒழியும்?
அறிவார்ந்த சிந்தனைகள் எல்லா இடங்களிலும் இடம் பெற்றால்தான் நாடு காடாக மாறாமல் தப்பிக்கும் - எச்சரிக்கை!
நன்றி: விடுதலை
கண்ணன் சொன்னான் கம்பனும் சொன்னான்
ஆத்மாதான் எல்லாவற்றுக்கும் ஆதாரம். ஆனால் அதுவே அவற்றைக் கடந்திருந்திருக்கிறது என்றால், அதெப்படி என்று தோன்றுகிறது. குழப்பமாயிருக்கிறது. ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா கீதையில் இம்மாதிரி பல தினுசாகக் குழப்பிக் குழப்பி, பிறகு ஒரேடியாகத் தெள்ளத் தெளிவாகப் பண்ணிவிடுவார்.
நான் எல்லாப் பொருட்களிலும் இருக்கிறேன். எல்லாப் பொருட்களும் என்னிடத்தில் இருக்கின்றன என்று கீதையில் ஒரிடத்தில் ஸ்ரீ கிருஷ்ண பகவான் கூறுகிறார். (யோமாம் பச்யதி ஸர்வத்ர, ஸர்வம் ச மயி பச்யதி) எல்லாப் பொருட்களும் இவரிடம் இருக்கின்றன என்றால் அவைதான் இவருக்கு ஆதாரம் என்று ஆகுமே. இதில் எது சரி என்ற குழப்பம் ஏற்படலாம்.
ஸ்வாமி அல்லது ஆத்மாவே எல்லாவற்றுக்கும் ஆதாரம் என்பதுதான் சரி. அவர் எல்லாவற்றுக்குள்ளும் இருக்கிறார் என்பதால் அவை இல்லை. எனவே, அவை இவருக்கு ஆதாரமில்லை. இவர்தான் சகலத்தையும் ஆட்டிப் படைப்பவர், இதை ஸ்ரீ கிருஷ்ணனே தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.
பொம்மலாட்டப் பொம்மை மாதிரித்தான் சகல பிராணிகளும். உள்ளே இருந்து ஈச்வரனே அவற்றை ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறான். (ஈச்வர, ஸர்வ பூதானாம் ஹருத் தேசே (அ) ர்ஜுன திஷ்டதி ப்ராமயன் ஸர்வ பூதானி யந்த்ரா ரூடானி மாயயா) என்கிறார்.
இப்படிக் குழப்பத்தைத் தெளிவு செய்கிற பகவான் அதே கீதையில் மறுபடியும் குழப்பம் செய்கிறார். எல்லாப் பொருட்களிலும் நான் இருக்கிறேன். எல்லாப் பொருட்களும் என்னிடத்தில் உள்ளன என்று கூறுவபரே, என்னிடத்தில் ஒரு பொருளும் இல்லை. நானும் ஒரு பொருளும் இல்லை என்று கூறுகிறார். ( ந ச மத் ஸ்தானி பூதானி, ந சாஹம் தேஷி அவஸ்தித) இங்கே ஆத்மா எல்லாலற்றையும் கடந்தது என்று தத்துவம் பேசப்படுகிறது.
இது என்ன குழப்புகிறாயே என்றால், நான் எல்லாருக்கும் விளக்குவதில்லை ( ந அஹம் ப்ரகாச: ஸர்வஸ்ய:) அதுதான் என் யோகமாயை (யோக மாயா ஸமாவ்ருத:) என்று ஒரு போடு போடுகிறார்.
இது என்ன உபதேசம் வேண்டிக்கிடக்கிறது. ஒன்றும் புரியவில்லையே என்று தோன்றுகிறதா.
நன்கு ஆலோசித்துப் பார்த்தால் குழப்பத்துக்குத் தெளிவு காணலாம். நான் ஒருவனுக்கும் விளக்க மாட்டேன் என்று பகவான் சொல்லியிருந்தால், ஆயிரம்பேர் இருந்தால் ஆயிரம்பேருக்கும் விளக்க மாட்டேன் என்று அர்த்தமாகும். ஆனால் அப்படியின்றி, நான் எல்லோருக்கும் விளக்க மாட்டேன் என்றால், ஆயிரம் பேரில் 999 பேருக்கும் விளங்காமல் இருந்தாலும் இருக்கலாம் ஒருவனுக்காவது விளக்குவேன் என்றுதான் பொருள். பகவான் எல்லாருக்கும் (ஸர்வஸ்ய) விளங்க மாட்டேன் என்றாரேயன்றி ஒருவனுக்கும் (கஸ்யாபி) விளங்க மாட்டேன் என்று சொல்லவில்லை. அப்படியானால் அவரும் சிலருக்கு விளங்குகிறார் என்றாகிறது.
அந்தச் சிலர் யார். இவர் சொன்ன யோக மாயையால் பாதிக்கப்படாத ஞானிகள். நான் எல்லாப் பொருளிலும் இருக்கிறேன். ஒரு பொருளும் என்னிடம்
இல்லை என்று பகவான் முரண்பாடாகப் பேசியது போலத் தோன்றுவதற்கு இத்தகைய ஞானிகளே விளக்கம் தந்து தெளிவு செய்வார்கள்.
தெருவிலே ஒரு பூமாலை கிடக்கிறது. அரை இருட்டு. எவனோ அந்தப் பக்கம் வந்தவன் அதை மிதித்துவிட்டு ஐயோ, பாம்பு பாம்பு என்று பயத்தால் கத்துகிறான். மாலையாக இருப்பதும் பாம்பாக இருப்பதும் ஒன்றுதான். இது மாலைதான் என்று தெரிந்தவுடன், அவனுக்குப் பாம்பு இல்லை என்று தெரிந்து விடுகிறது. அதனால் முதலில் பாம்புக்கு ஆதாரமாக இருந்தது என்ன. மாலைதான்.
மாலையைப் பாம்பு என எண்ணுவதுபோல், அஞ்ஞானிகள் ஒன்றேயான பிரம்மத்தைப் பலவான பிரபஞ்சமாகப் பார்த்து மயங்குகிறார்கள். இந்தப் பிரபஞ்சத்துக்கு ஆதாரம் பிரம்மம்தான்.
இந்தப் பிரபஞ்சத்துக்குள் நான் இருக்கிறேன். பிரபஞ்சம் என்னிடத்தில் இருக்கிறது என்று சொன்னால் என்ன அர்த்தம். மாலைக்குள் பாம்பு இருக்கிறது. பாம்புக்குள்தான் மாலை இருக்கிறது என்பது எப்படியோ அப்படிதான். இரண்டும் இண்மைதானே.
பாம்பு என்று அலறுபவனுக்குப் பாம்பு மாலையைத் தனக்குள் விழுங்கி விட்டது. அவன் பார்வையில் ஆதாரமாக இருப்பது பாம்பு. அஞ்ஞானம் நீங்கி இது மாலைதான் என்று உணர்ந்து கொண்டவனுக்கு மாலை பாம்பை தன்னுள் மறைத்து விடுகிறது. மாலைதான் ஆதாரமாகத் தெரிகிறது. மாயையினால் முடப்பட்டவன் பிரபஞ்சத்தை சத்தியம் என்று பார்த்தாலும், வாஸ்தவத்தில் பிரபஞ்சத்துக்கு ஆதரமாக இருந்து தாங்குபவன் ஈசுவரன்தான்.
பிரபஞ்சத் தோற்றத்தை ஞானத்தினால் விளக்கியவனுக்கு ஈசுவரனே எல்லாமாய், தானுமாய்த் தோன்றுகிறான். ஈஸ்வரனைத் தவிர வெறும் தோற்றமாகக்கூடப் பிரபஞ்சம் என்று எதுவுமே ஞானியின் நிர்விகல்ப ஸமாதியில் தெரியாது. ப்ரபஞ்சம் என்றே ஒன்று இல்லாதபோது அது ஈசுவரனிடத்தில் இருப்பதாகவோ, அல்லது ஈசுவரன் அதனுள் இருப்பதாகவோ சொல்வதும் அபத்தம்தானே. அஞ்ஞான தசையில் உடம்பு, பிராணன், மனசு, அறிவு என்றெல்லாம் தெரிகின்றன. ஞானம் வந்தால் ஆத்மானந்தம் ஸ்புரிக்கின்றபோது இது எல்லாவற்றையும் கடந்துதான் அந்த நிலை வருகிறது. இதனால்தான் ஸ்ரீ கிருஷ்ண பகவான் முடிந்த முடிவான ஞான நிலையில் நின்று, என்னிடத்திலும் பொருட்கள் இல்லை என்று கூரிவிட்டார். எவனோ அஞ்ஞானி மாலையைப் பாம்பாக நினைத்தான் எனபதால், உண்மையிலேயே ஒரு பாம்பு மாலைக்குள் இருந்ததாகவோ அல்லது பாம்புக்குள் மாலை இருந்ததாகவோ சொல்லலாமா.
கம்பர் சுந்தர காண்டத்தில் இதைத்தான் சொல்லுகிறார்.
அலங்கலில் தோன்றும் பொய்ம்மை
அரவுஎனப் பூதம் ஐந்தும்
விலங்கிய விகாரப் பாட்டின்
வேறு பாடுற்ற வீக்கம்
கலங்குவ தெவரைக் கண்டால்
அவர் என்பர் கைவி லேத்தி
இலங்கையில் பொருதா ரன்றே
மறைகளுக் கிறுதி யாவார்.
அலங்கல் என்றால் மாலை. அரவு என்றால் பாம்பு. அலங்கலில் தோன்றும் பெய்ம்மை அரவு - மாலையில் தோன்றும் பாம்பு என்ற பொய்யான எண்ணம். இதுபோலப் பஞ்ச பூதங்கள் ஒன்று சேர்ந்து பொய்யான பிரபஞ்சம் என்ற வீக்கமாகி மயக்குகிறதே. அது யாரைக் கண்டால் விலகிப்போய் மாலையான பரமாத்மாதான் ராமசந்திர மூர்த்தி என்றார்.
நம்மாழ்வாரைப் பற்றி சடகோபரந்தாதி பாடின பரம வைஷ்ணவரான கம்பர், பரமாத்ம ஸ்வரூபத்தை இப்படி ஸ்வச்சமான அத்வைத பாஷையில் சொல்கிறார்.
நன்றி: காமகோடி
நான் எல்லாப் பொருட்களிலும் இருக்கிறேன். எல்லாப் பொருட்களும் என்னிடத்தில் இருக்கின்றன என்று கீதையில் ஒரிடத்தில் ஸ்ரீ கிருஷ்ண பகவான் கூறுகிறார். (யோமாம் பச்யதி ஸர்வத்ர, ஸர்வம் ச மயி பச்யதி) எல்லாப் பொருட்களும் இவரிடம் இருக்கின்றன என்றால் அவைதான் இவருக்கு ஆதாரம் என்று ஆகுமே. இதில் எது சரி என்ற குழப்பம் ஏற்படலாம்.
ஸ்வாமி அல்லது ஆத்மாவே எல்லாவற்றுக்கும் ஆதாரம் என்பதுதான் சரி. அவர் எல்லாவற்றுக்குள்ளும் இருக்கிறார் என்பதால் அவை இல்லை. எனவே, அவை இவருக்கு ஆதாரமில்லை. இவர்தான் சகலத்தையும் ஆட்டிப் படைப்பவர், இதை ஸ்ரீ கிருஷ்ணனே தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.
பொம்மலாட்டப் பொம்மை மாதிரித்தான் சகல பிராணிகளும். உள்ளே இருந்து ஈச்வரனே அவற்றை ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறான். (ஈச்வர, ஸர்வ பூதானாம் ஹருத் தேசே (அ) ர்ஜுன திஷ்டதி ப்ராமயன் ஸர்வ பூதானி யந்த்ரா ரூடானி மாயயா) என்கிறார்.
இப்படிக் குழப்பத்தைத் தெளிவு செய்கிற பகவான் அதே கீதையில் மறுபடியும் குழப்பம் செய்கிறார். எல்லாப் பொருட்களிலும் நான் இருக்கிறேன். எல்லாப் பொருட்களும் என்னிடத்தில் உள்ளன என்று கூறுவபரே, என்னிடத்தில் ஒரு பொருளும் இல்லை. நானும் ஒரு பொருளும் இல்லை என்று கூறுகிறார். ( ந ச மத் ஸ்தானி பூதானி, ந சாஹம் தேஷி அவஸ்தித) இங்கே ஆத்மா எல்லாலற்றையும் கடந்தது என்று தத்துவம் பேசப்படுகிறது.
இது என்ன குழப்புகிறாயே என்றால், நான் எல்லாருக்கும் விளக்குவதில்லை ( ந அஹம் ப்ரகாச: ஸர்வஸ்ய:) அதுதான் என் யோகமாயை (யோக மாயா ஸமாவ்ருத:) என்று ஒரு போடு போடுகிறார்.
இது என்ன உபதேசம் வேண்டிக்கிடக்கிறது. ஒன்றும் புரியவில்லையே என்று தோன்றுகிறதா.
நன்கு ஆலோசித்துப் பார்த்தால் குழப்பத்துக்குத் தெளிவு காணலாம். நான் ஒருவனுக்கும் விளக்க மாட்டேன் என்று பகவான் சொல்லியிருந்தால், ஆயிரம்பேர் இருந்தால் ஆயிரம்பேருக்கும் விளக்க மாட்டேன் என்று அர்த்தமாகும். ஆனால் அப்படியின்றி, நான் எல்லோருக்கும் விளக்க மாட்டேன் என்றால், ஆயிரம் பேரில் 999 பேருக்கும் விளங்காமல் இருந்தாலும் இருக்கலாம் ஒருவனுக்காவது விளக்குவேன் என்றுதான் பொருள். பகவான் எல்லாருக்கும் (ஸர்வஸ்ய) விளங்க மாட்டேன் என்றாரேயன்றி ஒருவனுக்கும் (கஸ்யாபி) விளங்க மாட்டேன் என்று சொல்லவில்லை. அப்படியானால் அவரும் சிலருக்கு விளங்குகிறார் என்றாகிறது.
அந்தச் சிலர் யார். இவர் சொன்ன யோக மாயையால் பாதிக்கப்படாத ஞானிகள். நான் எல்லாப் பொருளிலும் இருக்கிறேன். ஒரு பொருளும் என்னிடம்
இல்லை என்று பகவான் முரண்பாடாகப் பேசியது போலத் தோன்றுவதற்கு இத்தகைய ஞானிகளே விளக்கம் தந்து தெளிவு செய்வார்கள்.
தெருவிலே ஒரு பூமாலை கிடக்கிறது. அரை இருட்டு. எவனோ அந்தப் பக்கம் வந்தவன் அதை மிதித்துவிட்டு ஐயோ, பாம்பு பாம்பு என்று பயத்தால் கத்துகிறான். மாலையாக இருப்பதும் பாம்பாக இருப்பதும் ஒன்றுதான். இது மாலைதான் என்று தெரிந்தவுடன், அவனுக்குப் பாம்பு இல்லை என்று தெரிந்து விடுகிறது. அதனால் முதலில் பாம்புக்கு ஆதாரமாக இருந்தது என்ன. மாலைதான்.
மாலையைப் பாம்பு என எண்ணுவதுபோல், அஞ்ஞானிகள் ஒன்றேயான பிரம்மத்தைப் பலவான பிரபஞ்சமாகப் பார்த்து மயங்குகிறார்கள். இந்தப் பிரபஞ்சத்துக்கு ஆதாரம் பிரம்மம்தான்.
இந்தப் பிரபஞ்சத்துக்குள் நான் இருக்கிறேன். பிரபஞ்சம் என்னிடத்தில் இருக்கிறது என்று சொன்னால் என்ன அர்த்தம். மாலைக்குள் பாம்பு இருக்கிறது. பாம்புக்குள்தான் மாலை இருக்கிறது என்பது எப்படியோ அப்படிதான். இரண்டும் இண்மைதானே.
பாம்பு என்று அலறுபவனுக்குப் பாம்பு மாலையைத் தனக்குள் விழுங்கி விட்டது. அவன் பார்வையில் ஆதாரமாக இருப்பது பாம்பு. அஞ்ஞானம் நீங்கி இது மாலைதான் என்று உணர்ந்து கொண்டவனுக்கு மாலை பாம்பை தன்னுள் மறைத்து விடுகிறது. மாலைதான் ஆதாரமாகத் தெரிகிறது. மாயையினால் முடப்பட்டவன் பிரபஞ்சத்தை சத்தியம் என்று பார்த்தாலும், வாஸ்தவத்தில் பிரபஞ்சத்துக்கு ஆதரமாக இருந்து தாங்குபவன் ஈசுவரன்தான்.
பிரபஞ்சத் தோற்றத்தை ஞானத்தினால் விளக்கியவனுக்கு ஈசுவரனே எல்லாமாய், தானுமாய்த் தோன்றுகிறான். ஈஸ்வரனைத் தவிர வெறும் தோற்றமாகக்கூடப் பிரபஞ்சம் என்று எதுவுமே ஞானியின் நிர்விகல்ப ஸமாதியில் தெரியாது. ப்ரபஞ்சம் என்றே ஒன்று இல்லாதபோது அது ஈசுவரனிடத்தில் இருப்பதாகவோ, அல்லது ஈசுவரன் அதனுள் இருப்பதாகவோ சொல்வதும் அபத்தம்தானே. அஞ்ஞான தசையில் உடம்பு, பிராணன், மனசு, அறிவு என்றெல்லாம் தெரிகின்றன. ஞானம் வந்தால் ஆத்மானந்தம் ஸ்புரிக்கின்றபோது இது எல்லாவற்றையும் கடந்துதான் அந்த நிலை வருகிறது. இதனால்தான் ஸ்ரீ கிருஷ்ண பகவான் முடிந்த முடிவான ஞான நிலையில் நின்று, என்னிடத்திலும் பொருட்கள் இல்லை என்று கூரிவிட்டார். எவனோ அஞ்ஞானி மாலையைப் பாம்பாக நினைத்தான் எனபதால், உண்மையிலேயே ஒரு பாம்பு மாலைக்குள் இருந்ததாகவோ அல்லது பாம்புக்குள் மாலை இருந்ததாகவோ சொல்லலாமா.
கம்பர் சுந்தர காண்டத்தில் இதைத்தான் சொல்லுகிறார்.
அலங்கலில் தோன்றும் பொய்ம்மை
அரவுஎனப் பூதம் ஐந்தும்
விலங்கிய விகாரப் பாட்டின்
வேறு பாடுற்ற வீக்கம்
கலங்குவ தெவரைக் கண்டால்
அவர் என்பர் கைவி லேத்தி
இலங்கையில் பொருதா ரன்றே
மறைகளுக் கிறுதி யாவார்.
அலங்கல் என்றால் மாலை. அரவு என்றால் பாம்பு. அலங்கலில் தோன்றும் பெய்ம்மை அரவு - மாலையில் தோன்றும் பாம்பு என்ற பொய்யான எண்ணம். இதுபோலப் பஞ்ச பூதங்கள் ஒன்று சேர்ந்து பொய்யான பிரபஞ்சம் என்ற வீக்கமாகி மயக்குகிறதே. அது யாரைக் கண்டால் விலகிப்போய் மாலையான பரமாத்மாதான் ராமசந்திர மூர்த்தி என்றார்.
நம்மாழ்வாரைப் பற்றி சடகோபரந்தாதி பாடின பரம வைஷ்ணவரான கம்பர், பரமாத்ம ஸ்வரூபத்தை இப்படி ஸ்வச்சமான அத்வைத பாஷையில் சொல்கிறார்.
நன்றி: காமகோடி
8.24.2005
சவுந்தர்ய லஹரி ( 98 ) - கல்வியறிவு பெருக
கதா காலே மாத: கதய
கலிதாலக் தகரஸம்
பிபேயம் வித்யார்த்தீ தவ
சரண நிர்ணேஜன ஜலம்!
ப்ரக்ருத்யா மூகானாம்பி
சகவிதா காரணதயா
கதா தத்தே வாணீ முககமல
தாம்பூல ரஸதாம்!!
பொருள்: தாயே! மருதாணி பூசிய உன் திருவடிகளை அபிஷேகித்த தீர்த்தத்தை பருகினால் கல்வியறிவு பெருகும், அனைத்து வித்தைகளிலும் தேறலாம் என அறிவேன். அந்த தீர்த்தத்தை நான் பருகுவது எப்போது? கூறுவாயாக! அந்த தீர்த்தம் சரஸ்வதி தன் வாயில் தரித்த தாம்பூல தீர்த்தத்திற்கு ஒப்பானதாகும். ஊமைகளைக் கூட அத்தீர்த்தம் பேசவைக்கும் தன்மையுடையது. அதை என் வாயில் எப்போது ஊற்றப் போகிறாய்?
(இந்த ஸ்லோகத்தை சொன்னால் கல்வியறிவு பெருகும். மலட்டுத்தன்மை நீங்கும் என்பது நம்பிக்கை)
நன்றி: தினமலர்
கலிதாலக் தகரஸம்
பிபேயம் வித்யார்த்தீ தவ
சரண நிர்ணேஜன ஜலம்!
ப்ரக்ருத்யா மூகானாம்பி
சகவிதா காரணதயா
கதா தத்தே வாணீ முககமல
தாம்பூல ரஸதாம்!!
பொருள்: தாயே! மருதாணி பூசிய உன் திருவடிகளை அபிஷேகித்த தீர்த்தத்தை பருகினால் கல்வியறிவு பெருகும், அனைத்து வித்தைகளிலும் தேறலாம் என அறிவேன். அந்த தீர்த்தத்தை நான் பருகுவது எப்போது? கூறுவாயாக! அந்த தீர்த்தம் சரஸ்வதி தன் வாயில் தரித்த தாம்பூல தீர்த்தத்திற்கு ஒப்பானதாகும். ஊமைகளைக் கூட அத்தீர்த்தம் பேசவைக்கும் தன்மையுடையது. அதை என் வாயில் எப்போது ஊற்றப் போகிறாய்?
(இந்த ஸ்லோகத்தை சொன்னால் கல்வியறிவு பெருகும். மலட்டுத்தன்மை நீங்கும் என்பது நம்பிக்கை)
நன்றி: தினமலர்
8.21.2005
இட ஒதுக்கீடு - பெரியார் பார்வையில்
காங்கிரசின் ஆரம்பகாலம்
....காங்கிரஸ் மாநாடுகளில் முதலாவதாக இராஜ விசுவாசப் பிரமான தீர்மானம் நிறைவேற்றப்படும். வெள்ளையரை இந்நாட்டுக்கு அனுப்பியதற்காக கடவுளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்ளப்படும். அவர்கள் ஆட்சி நீடுழிகாலம் இருக்க வேண்டுமென்று வாழ்த்து செய்யப்படும். சென்னையில் 1915 இல் நடைபெற்ற மாநாட்டில் இம்மாதிரி ராஜவிசுவாசத் தீர்மானம் காலை ஒரு முறையும் மாலை கவர்னர் விஜயத்தின் போது மற்றொரு முறையும் ஆக இரண்டு முறைகள் நிறைவேற்றம் ஆகியது எனக்கு நன்றாக ஞாபகத்தில் இருந்து வருகிறது. ஆகவே வெள்ளையர் வழங்கிய உத்தியோக சலுகைகளில் நம் இனத்தவருக்கும் உரிய பங்கு வேண்டும் என்று கேட்க ஆரம்பித்த பிறகுதான் வெள்ளையர்களும் கொஞ்சம் நமக்குச் சலுகை தர ஆரம்பித்த பிறகு தான் காங்கிரஸ் இயக்கமானது ஒரு தேசிய ஸ்தாபனமாக மாறி வெள்ளையர்கள் வெளியேற வேண்டும் என்று கூறிற்றேயொழிய அதுவரை அது பார்ப்பனர்களுக்குப் பதவி தேடித்தரும் ஸ்தாபனமாகத்தான் இருந்து வந்தது என்பது கண்கூடு.
-----
இன்றைய கட்டத்தில் எழுதப்பட்டதுபோல் தோன்றும் இக்கட்டுரையை முழுமையாக வாசிக்க... இங்கே அழுத்தவும்.
....காங்கிரஸ் மாநாடுகளில் முதலாவதாக இராஜ விசுவாசப் பிரமான தீர்மானம் நிறைவேற்றப்படும். வெள்ளையரை இந்நாட்டுக்கு அனுப்பியதற்காக கடவுளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்ளப்படும். அவர்கள் ஆட்சி நீடுழிகாலம் இருக்க வேண்டுமென்று வாழ்த்து செய்யப்படும். சென்னையில் 1915 இல் நடைபெற்ற மாநாட்டில் இம்மாதிரி ராஜவிசுவாசத் தீர்மானம் காலை ஒரு முறையும் மாலை கவர்னர் விஜயத்தின் போது மற்றொரு முறையும் ஆக இரண்டு முறைகள் நிறைவேற்றம் ஆகியது எனக்கு நன்றாக ஞாபகத்தில் இருந்து வருகிறது. ஆகவே வெள்ளையர் வழங்கிய உத்தியோக சலுகைகளில் நம் இனத்தவருக்கும் உரிய பங்கு வேண்டும் என்று கேட்க ஆரம்பித்த பிறகுதான் வெள்ளையர்களும் கொஞ்சம் நமக்குச் சலுகை தர ஆரம்பித்த பிறகு தான் காங்கிரஸ் இயக்கமானது ஒரு தேசிய ஸ்தாபனமாக மாறி வெள்ளையர்கள் வெளியேற வேண்டும் என்று கூறிற்றேயொழிய அதுவரை அது பார்ப்பனர்களுக்குப் பதவி தேடித்தரும் ஸ்தாபனமாகத்தான் இருந்து வந்தது என்பது கண்கூடு.
-----
இன்றைய கட்டத்தில் எழுதப்பட்டதுபோல் தோன்றும் இக்கட்டுரையை முழுமையாக வாசிக்க... இங்கே அழுத்தவும்.
`ஜன்னல்’
`தினமணி’ ஏடு ஞாயிறுதோறும் `ஜன்னல்’ என்ற ஒரு பகுதியை வெளியிட்டு வருகிறது. குறிப்பிட்ட ஒரு பிரச்சினை வெடிக்கும் பொழுது, அது தொடர்பான பழைய தகவல்களைச் சேகரித்து வெளியிடுவது நல்ல முயற்சிதான் - புதிய தலைமுறையினர் தெரிந்து கொள்ளவும், பழைய தலைமுறையினர் மறந்தவற்றை நினைவூட்டிக் கொள்வதற்கும் இது பயன்படும்.
அப்படித் தகவல்களைச் சொல்லும்போது எதையும் மறைக்காமல் - ஒளிக்காமல் சொன்னால் தான், சரியான தகவல் களைச் சொன்னதாகப் பொருள்படும்.
இவ்வார `ஜன்னலில்’ இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட முதல் திருத்தம் பற்றி சொல்ல `தினமணி’ முயற் சித்துள்ளது.
செண்பகம் துரை ராஜன் என்பவர் உச்சநீதி மன்றத்தில் வழக்குப் போட்டதாகவும், அரசியல் சட்டப்படி பிற்படுத்தப்பட்டவர்களுக்கு (பிற்பட்டவ ருக்கு என்று `தினமணி’ கூறியிருப்பது தவறு) இட ஒதுக்கீடு செய்ய வழி இல்லை என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு அளித்ததாகவும், அப்பொழுது பிரதமராக இருந்த நேருவை அன்றைய முதல்வர் காமராஜர் வலியுறுத்தி, இட ஒதுக்கீடு கிடைக்க அரசியல் சட்டத்தில் உள்ள திருத்தத்தைச் செய்ய வைத்தார் என்றும் `தினமணி’ எழுதுகிறது.
1950,51-இல் காமராஜர் முதல்வராக இருந்தாரா இதுகூட தெரியாமல் `தினமணி’ எழுதுகிறதே!
உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தந்தை பெரி யாரும் திராவிடர் கழகமும், மாநாடு நடத்தியும், போராட்டம் பல நடத்தியும், மக்களிடத்திலே பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். தமிழகத் தலைவர்களும் அவரவர் பங்குக்குப் பாடுபட்டது என்பதை யெல்லாம் `தினமணி’ மறைக்கிறதே!
சென்னை மாகாணத்தில் நடக்கும் போராட்டங் களை பிரதமர் நேரு அவர்களே நாடாளுமன்றத்தில் சுட்டிக் காட்டியது; அதன் அடிப்படையில் சட்டத் திருத்தம் செய்வதாக பிரதமர் நேரு சொன்னது போன்ற தகவல்கள் எல்லாம் `தினமணி’க்குத் தெரியாதா? அல்லது தெரிந்தும் இருட்டடிக்கும் குசும்பா?
நன்றி: விடுதலை
காமராசர் 1954ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் நாள் தமிழ் புத்தாண்டு தினத்தில்தான் முதல் அமைச்சராக பதவி ஏற்றார்.
அப்படித் தகவல்களைச் சொல்லும்போது எதையும் மறைக்காமல் - ஒளிக்காமல் சொன்னால் தான், சரியான தகவல் களைச் சொன்னதாகப் பொருள்படும்.
இவ்வார `ஜன்னலில்’ இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட முதல் திருத்தம் பற்றி சொல்ல `தினமணி’ முயற் சித்துள்ளது.
செண்பகம் துரை ராஜன் என்பவர் உச்சநீதி மன்றத்தில் வழக்குப் போட்டதாகவும், அரசியல் சட்டப்படி பிற்படுத்தப்பட்டவர்களுக்கு (பிற்பட்டவ ருக்கு என்று `தினமணி’ கூறியிருப்பது தவறு) இட ஒதுக்கீடு செய்ய வழி இல்லை என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு அளித்ததாகவும், அப்பொழுது பிரதமராக இருந்த நேருவை அன்றைய முதல்வர் காமராஜர் வலியுறுத்தி, இட ஒதுக்கீடு கிடைக்க அரசியல் சட்டத்தில் உள்ள திருத்தத்தைச் செய்ய வைத்தார் என்றும் `தினமணி’ எழுதுகிறது.
1950,51-இல் காமராஜர் முதல்வராக இருந்தாரா இதுகூட தெரியாமல் `தினமணி’ எழுதுகிறதே!
உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தந்தை பெரி யாரும் திராவிடர் கழகமும், மாநாடு நடத்தியும், போராட்டம் பல நடத்தியும், மக்களிடத்திலே பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். தமிழகத் தலைவர்களும் அவரவர் பங்குக்குப் பாடுபட்டது என்பதை யெல்லாம் `தினமணி’ மறைக்கிறதே!
சென்னை மாகாணத்தில் நடக்கும் போராட்டங் களை பிரதமர் நேரு அவர்களே நாடாளுமன்றத்தில் சுட்டிக் காட்டியது; அதன் அடிப்படையில் சட்டத் திருத்தம் செய்வதாக பிரதமர் நேரு சொன்னது போன்ற தகவல்கள் எல்லாம் `தினமணி’க்குத் தெரியாதா? அல்லது தெரிந்தும் இருட்டடிக்கும் குசும்பா?
நன்றி: விடுதலை
காமராசர் 1954ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் நாள் தமிழ் புத்தாண்டு தினத்தில்தான் முதல் அமைச்சராக பதவி ஏற்றார்.
கீதை தந்த கண்ணன்!
ஆக.26 கோகுலாஷ்டமி
கண்ணனின் கதை கேட்டால், அதற்கான காரணம் புரியும்.
சூரசேனம் என்ற நாடு பாரதத்தில் இருந்தது. இந்நாட்டின் மன்னன் நாட்டின் பெயரையே தனக்கு சூட்டிக் கொண்டான். அவனது பெயர் சூரசேனன். இவனுக்கு வசுதேவன், என்ற மகன் பிறந்தான். வசுதேவர், வாலிபன் ஆனதும் மதுராபுரியை ஆண்ட உக்கிரசேனன் என்பவனின் தம்பி மகள் தேவகியை திருமணம் செய்து கொண்டார். உக்கிரசேனனின் மகன் கம்சன். அவன் தன் சித்தப்பா மகள் தேவகி மீது மிகுந்த அன்புடையவன். எனவே, மணமக்களை தன் தேரிலேயே ஏற்றி, மாப்பிள்ளை வீட்டுக்கு அழைத்துச் சென்றான்.
ஊர் எல்லையை அடைந்ததும் வானத்தில் ஒரு ஒலி எழுந்தது.
"கம்சா! நீ எந்த தங்கையின் மீது பாசத்தைக் கொட்டுகிறாயோ, அவள் வயிற்றில் பிறக்கும் எட்டாவது குழந்தை உன்னைக் கொல்லும். நீ பூமியில் வாழும் மக்களுக்கு செய்யும் கொடுமைக்கு பரிசு இது!' என்றது.
கம்சன் ஆடிப் போனான். கண்ணாய் மதித்த தங்கையை காலால் மிதித்து கீழே தள்ளினான். ஓடும் தேரிலிருந்து விழுந்த அவள், ரத்த வெள்ளத்தில் மிதந்தாள். அவள் சாகாததைக் கண்ட கம்சன் வாளை ஓங்கி வெட்டச் சென்ற போது, கணவர் வசுதேவர் தடுத்தார்.
"மைத்துனா! கலங்காதே. எட்டாவது குழந்தையால் தானே உனக்கு சாவு. அக்குழந்தை மட்டுமல்ல, முதல் ஏழு குழந்தைகளையும் கூட உன்னிடமே தந்து விடுகிறேன். அவற்றை என்ன வேண்டுமானாலும் செய். பாசத்துடன் மதித்த தங்கையைக் கொல்லாதே!' என்றார்.
கம்சன் அதை ஒப்புக் கொண்டான். அவர்களை சிறையில் அடைத்து பாதுகாத்தான்.
இந்த எச்சரிக்கைக்கு பிறகும் கம்சன் திருந்தவில்லை. தன் தந்தை உக்கிரசேனனை சிறையில் அடைத்து விட்டு, ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றி, மதுராவின் அரசன் ஆனான்.
மதுராவில் வசித்த யாதவ குல மக்கள், அவனது கொடுமை தாங்காமல், பக்கத்து நாடுகளுக்கு சென்று விட்டனர். தேவகிக்கு ஆறு குழந்தைகள் பிறந்தன. எல்லாக் குழந்தைகளையும் கொன்றான் கம்சன். ஏழாவது கர்ப்பம் தரித்தது. இதே சமயத்தில், கோகுலத்தில் வசித்த நந்தகோபன் என்பவரின் மனைவி ரோகிணி என்பவளும் கர்ப்பிணியானாள்.
அப்போது, ஸ்ரீமன் நாராயணன், தன் சகோதரி பார்வதியின் அம்சமான மாயை எனப்படும் துர்க்கையை அழைத்து, "கோகுலத்தில் கர்ப்பமாக இருக்கும் ரோகிணியின் வயிற்றுக்குள் நீ செல். அவள் வயிற்றில் இருக்கும் கர்ப்பத்தை கலைத்து விடு. அந்த இடத்தில் என் அம்சமாக தேவகியின் வயிற்றில் வளரும் கருவை வைத்து விடு. நந்தகோபருக்கு இன்னொரு மனைவி இருக்கிறாள். அவள் பெயர் யசோதை. அவள் வயிற்றில் நீ கருவாகத் தங்கிவிடு. உலக நன்மைக்காக இக்காரியம் செய்யும் உன்னை உலக மக்கள் காளியாகவும், சண்டியாகவும், துர்க்கையாகவும் வழிபடுவர்!' என்றார்.
துர்க்கையும் அப்படியே செய்தாள்.
ரோகிணியின் வயிற்றுக்குள் சென்ற அந்தக்கரு வளர்ந்தது. அவள் ஒரு ஆண்குழந்தையைப் பெற்றாள். அக்குழந்தையே பலராமன் எனப்பட்டான்.
தேவகிக்கு கர்ப்பம் கலைந்த செய்தியால் கம்சன் நிம்மதியடைந்தான். அடுத்து, அவளுக்கு ஏற்படும் கர்ப்பமே தனக்கு எமன் என்பதை உணர்ந்த அவன், காவலை அதிகப்படுத்தினான். தேவகியும் கர்ப்பமானாள்.
ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமியன்று, தன் அண்ணனின் பெயர் தாங்கிய தாயான ரோகிணிக்கு பெருமை தரும் விதத்தில் அவளது பெயர் கொண்ட நட்சத்திரத்தில், நள்ளிரவு நேரத்தில் நாராயணன் பூவுலகில் அவதாரம் செய்தார். கண்ணுக்கு இமை போல், உலகத்தை பாதுகாக்க வந்ததால், தேவகி தன்னையறியாமல் அவனை "கண்ணா' என அழைத்தாள்.
இதே நாளில், சற்று நேரத்தில் யசோதையின் வயிற்றில் துர்க்கை அவதரித்தாள். கண்ணனும், துர்க்கையும் அண்ணனும், தங்கையுமாய் அவதாரம் செய்த நன்னாளே கோகுலாஷ்டமி எனப்படுகிறது.
கண்ணன் பிறந்த போது சங்கு, சக்கரம், தாமரை, கதாயுதம் ஏந்திய கைகளுடன் காட்சி தந்தான். அவர்கள் அவனை வணங்கி, சாதாரண குழந்தை வடிவாகும்படி கேட்டனர். அவ்வாறே அவன் ஆனான். தன்னை கோகுலத்தில் நந்தகோபர் மனைவி அருகில் படுக்க வைத்து விட்டு, யசோதைக்கு மயக்கம் தெளியும் முன் அவளுக்கு பிறந்த பெண் குழந்தையை சிறைக்கு தூக்கி வர கட்டளையிட்டான். காவலர்களை உறங்க வைத்தான்.
நந்தகோபர் சிறையைத் திறந்து வெளியே சென்றார். யமுனைக் கரையிலுள்ள கோகுலத்திற்கு சென்று, பெண் குழந்தையை தூக்கி வந்தார். தங்கைக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என கேள்விப்பட்ட கம்சன் அதைக் கொல்ல வந்தான்.
காலைப் பிடித்து துõக்கி ஓங்கி அடிக்க முயலும் போது, அது விஸ்வரூபம் எடுத்து பயங்கரமாக காட்சியளித்தது.
"உன்னைக் கொல்பவன் கோகுலம் சென்று விட்டான். நான் துர்க்கை. என் காலைப் பிடித்து துõக்கியதால், என்னை சரணடைந்ததாக கருதி, உன்னை விட்டு விடுகிறேன். என் பாதம் சரணடையும், கெட்டவர்களும் நற்கதியே அடைவர். நீ நாராயணனின் கையால் அழிவாய்!' என்றாள்.
அதன்படியே கம்சனைக் கொன்ற கண்ணன், பெற்றவர்களை விடுவித்தான்.
கம்சனின் மனைவியரான அஸ்தி, பிராஸ்தி ஆகியோர் கண்ணன் மீது கடும் கோபம் கொண்டனர். அவர்கள் மகத நாட்டு மன்னன் ஜராசந்தனின் புத்திரிகள். மகள்கள் கணவனை இழந்து வருந்துவதைக் கண்ட ஜராசந்தன் கண்ணனைக் கொல்ல முடிவெடுத்தான். அவனோடு வந்த வீரர்களில் பெரும்பாலோர் பாவிகள்.
இந்நேரத்தில் பூமாதேவி கண்ணனிடம் வந்து, அந்தப் பாவிகளைக் கொன்று, தன் பாரத்தை தணிக்க வேண்டிக் கொண்டாள். கண்ணனும், பலராமனும் இணைந்து அவனைத் தோற்கடித்தனர்.
பின்னர், பாண்டவர்களுக்கு உதவியாக வந்த கண்ணனை "கிருஷ்ணா' என உலகம் அழைத்தது. அவர் அர்ச்சுனனுக்கு உபதேசித்த நன்மொழிகள் "பகவத்கீதை' என்ற பெயரில் பாரெல்லாம் புகழ்பெற்று விளங்குகிறது.
கண்ணன் இளமையில் செய்த சேஷ்டைகளை நினைவு கூறும் வகையில், கோகுலாஷ்டமியன்று உறியடித் திருவிழா நடக்கும். வீடுகளில் கண்ணனின் பாதம் பதித்த கோலம் போட்டு, நெய் பண்டம், வெண்ணெய் படைத்து வழிபடுவர்.
குழந்தைக் கண்ணனை வரவேற்க நாமும் தயாராவோமே!
நன்றி: தினமலர்
கண்ணனின் கதை கேட்டால், அதற்கான காரணம் புரியும்.
சூரசேனம் என்ற நாடு பாரதத்தில் இருந்தது. இந்நாட்டின் மன்னன் நாட்டின் பெயரையே தனக்கு சூட்டிக் கொண்டான். அவனது பெயர் சூரசேனன். இவனுக்கு வசுதேவன், என்ற மகன் பிறந்தான். வசுதேவர், வாலிபன் ஆனதும் மதுராபுரியை ஆண்ட உக்கிரசேனன் என்பவனின் தம்பி மகள் தேவகியை திருமணம் செய்து கொண்டார். உக்கிரசேனனின் மகன் கம்சன். அவன் தன் சித்தப்பா மகள் தேவகி மீது மிகுந்த அன்புடையவன். எனவே, மணமக்களை தன் தேரிலேயே ஏற்றி, மாப்பிள்ளை வீட்டுக்கு அழைத்துச் சென்றான்.
ஊர் எல்லையை அடைந்ததும் வானத்தில் ஒரு ஒலி எழுந்தது.
"கம்சா! நீ எந்த தங்கையின் மீது பாசத்தைக் கொட்டுகிறாயோ, அவள் வயிற்றில் பிறக்கும் எட்டாவது குழந்தை உன்னைக் கொல்லும். நீ பூமியில் வாழும் மக்களுக்கு செய்யும் கொடுமைக்கு பரிசு இது!' என்றது.
கம்சன் ஆடிப் போனான். கண்ணாய் மதித்த தங்கையை காலால் மிதித்து கீழே தள்ளினான். ஓடும் தேரிலிருந்து விழுந்த அவள், ரத்த வெள்ளத்தில் மிதந்தாள். அவள் சாகாததைக் கண்ட கம்சன் வாளை ஓங்கி வெட்டச் சென்ற போது, கணவர் வசுதேவர் தடுத்தார்.
"மைத்துனா! கலங்காதே. எட்டாவது குழந்தையால் தானே உனக்கு சாவு. அக்குழந்தை மட்டுமல்ல, முதல் ஏழு குழந்தைகளையும் கூட உன்னிடமே தந்து விடுகிறேன். அவற்றை என்ன வேண்டுமானாலும் செய். பாசத்துடன் மதித்த தங்கையைக் கொல்லாதே!' என்றார்.
கம்சன் அதை ஒப்புக் கொண்டான். அவர்களை சிறையில் அடைத்து பாதுகாத்தான்.
இந்த எச்சரிக்கைக்கு பிறகும் கம்சன் திருந்தவில்லை. தன் தந்தை உக்கிரசேனனை சிறையில் அடைத்து விட்டு, ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றி, மதுராவின் அரசன் ஆனான்.
மதுராவில் வசித்த யாதவ குல மக்கள், அவனது கொடுமை தாங்காமல், பக்கத்து நாடுகளுக்கு சென்று விட்டனர். தேவகிக்கு ஆறு குழந்தைகள் பிறந்தன. எல்லாக் குழந்தைகளையும் கொன்றான் கம்சன். ஏழாவது கர்ப்பம் தரித்தது. இதே சமயத்தில், கோகுலத்தில் வசித்த நந்தகோபன் என்பவரின் மனைவி ரோகிணி என்பவளும் கர்ப்பிணியானாள்.
அப்போது, ஸ்ரீமன் நாராயணன், தன் சகோதரி பார்வதியின் அம்சமான மாயை எனப்படும் துர்க்கையை அழைத்து, "கோகுலத்தில் கர்ப்பமாக இருக்கும் ரோகிணியின் வயிற்றுக்குள் நீ செல். அவள் வயிற்றில் இருக்கும் கர்ப்பத்தை கலைத்து விடு. அந்த இடத்தில் என் அம்சமாக தேவகியின் வயிற்றில் வளரும் கருவை வைத்து விடு. நந்தகோபருக்கு இன்னொரு மனைவி இருக்கிறாள். அவள் பெயர் யசோதை. அவள் வயிற்றில் நீ கருவாகத் தங்கிவிடு. உலக நன்மைக்காக இக்காரியம் செய்யும் உன்னை உலக மக்கள் காளியாகவும், சண்டியாகவும், துர்க்கையாகவும் வழிபடுவர்!' என்றார்.
துர்க்கையும் அப்படியே செய்தாள்.
ரோகிணியின் வயிற்றுக்குள் சென்ற அந்தக்கரு வளர்ந்தது. அவள் ஒரு ஆண்குழந்தையைப் பெற்றாள். அக்குழந்தையே பலராமன் எனப்பட்டான்.
தேவகிக்கு கர்ப்பம் கலைந்த செய்தியால் கம்சன் நிம்மதியடைந்தான். அடுத்து, அவளுக்கு ஏற்படும் கர்ப்பமே தனக்கு எமன் என்பதை உணர்ந்த அவன், காவலை அதிகப்படுத்தினான். தேவகியும் கர்ப்பமானாள்.
ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமியன்று, தன் அண்ணனின் பெயர் தாங்கிய தாயான ரோகிணிக்கு பெருமை தரும் விதத்தில் அவளது பெயர் கொண்ட நட்சத்திரத்தில், நள்ளிரவு நேரத்தில் நாராயணன் பூவுலகில் அவதாரம் செய்தார். கண்ணுக்கு இமை போல், உலகத்தை பாதுகாக்க வந்ததால், தேவகி தன்னையறியாமல் அவனை "கண்ணா' என அழைத்தாள்.
இதே நாளில், சற்று நேரத்தில் யசோதையின் வயிற்றில் துர்க்கை அவதரித்தாள். கண்ணனும், துர்க்கையும் அண்ணனும், தங்கையுமாய் அவதாரம் செய்த நன்னாளே கோகுலாஷ்டமி எனப்படுகிறது.
கண்ணன் பிறந்த போது சங்கு, சக்கரம், தாமரை, கதாயுதம் ஏந்திய கைகளுடன் காட்சி தந்தான். அவர்கள் அவனை வணங்கி, சாதாரண குழந்தை வடிவாகும்படி கேட்டனர். அவ்வாறே அவன் ஆனான். தன்னை கோகுலத்தில் நந்தகோபர் மனைவி அருகில் படுக்க வைத்து விட்டு, யசோதைக்கு மயக்கம் தெளியும் முன் அவளுக்கு பிறந்த பெண் குழந்தையை சிறைக்கு தூக்கி வர கட்டளையிட்டான். காவலர்களை உறங்க வைத்தான்.
நந்தகோபர் சிறையைத் திறந்து வெளியே சென்றார். யமுனைக் கரையிலுள்ள கோகுலத்திற்கு சென்று, பெண் குழந்தையை தூக்கி வந்தார். தங்கைக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என கேள்விப்பட்ட கம்சன் அதைக் கொல்ல வந்தான்.
காலைப் பிடித்து துõக்கி ஓங்கி அடிக்க முயலும் போது, அது விஸ்வரூபம் எடுத்து பயங்கரமாக காட்சியளித்தது.
"உன்னைக் கொல்பவன் கோகுலம் சென்று விட்டான். நான் துர்க்கை. என் காலைப் பிடித்து துõக்கியதால், என்னை சரணடைந்ததாக கருதி, உன்னை விட்டு விடுகிறேன். என் பாதம் சரணடையும், கெட்டவர்களும் நற்கதியே அடைவர். நீ நாராயணனின் கையால் அழிவாய்!' என்றாள்.
அதன்படியே கம்சனைக் கொன்ற கண்ணன், பெற்றவர்களை விடுவித்தான்.
கம்சனின் மனைவியரான அஸ்தி, பிராஸ்தி ஆகியோர் கண்ணன் மீது கடும் கோபம் கொண்டனர். அவர்கள் மகத நாட்டு மன்னன் ஜராசந்தனின் புத்திரிகள். மகள்கள் கணவனை இழந்து வருந்துவதைக் கண்ட ஜராசந்தன் கண்ணனைக் கொல்ல முடிவெடுத்தான். அவனோடு வந்த வீரர்களில் பெரும்பாலோர் பாவிகள்.
இந்நேரத்தில் பூமாதேவி கண்ணனிடம் வந்து, அந்தப் பாவிகளைக் கொன்று, தன் பாரத்தை தணிக்க வேண்டிக் கொண்டாள். கண்ணனும், பலராமனும் இணைந்து அவனைத் தோற்கடித்தனர்.
பின்னர், பாண்டவர்களுக்கு உதவியாக வந்த கண்ணனை "கிருஷ்ணா' என உலகம் அழைத்தது. அவர் அர்ச்சுனனுக்கு உபதேசித்த நன்மொழிகள் "பகவத்கீதை' என்ற பெயரில் பாரெல்லாம் புகழ்பெற்று விளங்குகிறது.
கண்ணன் இளமையில் செய்த சேஷ்டைகளை நினைவு கூறும் வகையில், கோகுலாஷ்டமியன்று உறியடித் திருவிழா நடக்கும். வீடுகளில் கண்ணனின் பாதம் பதித்த கோலம் போட்டு, நெய் பண்டம், வெண்ணெய் படைத்து வழிபடுவர்.
குழந்தைக் கண்ணனை வரவேற்க நாமும் தயாராவோமே!
நன்றி: தினமலர்
Subscribe to:
Posts (Atom)

