9.13.2005

பெண்கள் விடுதலைக்கு “ஆண்மை” அழியவேண்டும்

பெண்கள் விடுதலையின் பேரால் உலகத்தில் அநேக இடங்களில் அநேக சங்கங்களும், முயற்சிகளும் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டு வருவது யாவரும் அறிந்ததே. இம்முயற்சிகளில் ஆண்களும் மிகக் கவலையுள்ளவர்கள்போலக் காட்டிக்கொண்டு மிகப் பாசாங்கு செய்து வருகின்றார்கள். ஆண்கள் முயற்சியால் செய்யப்படும் எவ்வித விடுதலை இயக்கமும் எவ்வழியிலும் பெண்களுக்கு உண்மையான விடுதலையை அளிக்க முடியாது. தற்காலம் பெண்கள் விடுதலைக்காகப் பெண்களால் முயற்சிக்கப்படும் இயங்களுக்கும் யாதொரு பலனையும் கொடுக்காமல் போவதெல்லாமல், மேலும் மேலும் அவை பெண்களின் அடிமைத்தனத்திற்கே கட்டுப்பாட்டுகளைப் பலப்படுத்திக்கொண்டே போகும் என்பது நமது அபிப்பிராயம். எதுபோலென்றால், திராவிட மக்கள் விடுதலைக்குப் பார்ப்பனரும், பார்ப்பனர்தான் இந்நாட்டுக்குப் பிரதிநிதித்துவம் வாய்ந்தவர்கள் என்று கருதிக்கொண்டிருக்கும் அந்நிய நாட்டினர்களும் பாடுபடுவதாக ஏற்பாடுகள் நடந்து வருவதன் பலனாக எப்படி நாளுக்கு நாள் திராவிட மக்களுக்கு அடிமைத்தனமும், என்றும் விடுதலை பெற முடியாதபடி கட்டுப்பாடுகளின் பலமும் ஏற்பட்டு வருகிறதோ அதுபோலவும், சமூக சீர்திருத்தம், சமத்துவம் என்பதாக வேஷம் போட்டுக் கொண்டு பார்ப்பனர்களும் ஆரியப் புராணக்காரர்களும் சீர்திருத்தத்தில் பிரவேசித்து வருவதன் பலனாக எப்படிச் சமூகக் கொடுமைகளும், உயர்வு தாழ்வுகளும் சட்டத்தினாலும், மதத்தினாலும் நிலைபெற்றுப் பலப்பட்டு வருகின்றதோ அதுபோலவும் என்று சொல்லலாம்.

அன்றியும், ஆண்கள், பெண்கள் விடுதலைக்குப் பாடுபடுவதால் பெண்களின் அடிமைத்தனம் வளருவதுடன் பெண்கள் என்றும் விடுதலை பெற முடியாத கட்டுப்பாடுகள் பலப்பட்டுக் கொண்டு வருகின்றன. பெண்களுக்கு மதிப்புக் கொடுப்பதாகவும், பெண்கள் விடுதலைக்காகப் பாடுபடுவதாகவும் ஆண்கள் காட்டிக் கொள்வதெல்லாம் பெண்களை ஏமாற்றுவதற்குச் செய்யும் சூழ்ச்சியே ஒழிய வேறல்ல. எங்காவது பூனைகளால் எலிகளுக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது நரிகளால் ஆடு, கோழிகளுக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது வெள்ளைக்காரர்களால் இந்தியர்களுக்கு செல்வம் பெருகுமா? எங்காவது பார்ப்பனர்களால் பார்ப்பனரல்லாதவர்களுக்குச் சமத்துவம் கிடைக்குமா? என்பதை யோசித்தால் இதன் உண்மை விளங்கும். அப்படி ஒருக்கால் ஏதாவது ஒரு சமயம் மேற்படி விஷயங்களில் விடுதலை உண்டாகிவிட்டாலும்கூட ஆண்களால் பெண்களுக்கு விடுதலை கிடைக்கவே கிடைக்காது என்பதை மாத்திரம் உறுதியாய் நம்பலாம். ஏனெனில், ஆண்மை என்னும் பதமே பெண்களை இழிவுபடுத்தும் முறையில் உலக வழக்கில் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது என்பதைப் பெண்கள் மறந்துவிடக்கூடாது. அந்த ‘ஆண்மை’ உலகிலுள்ள வரையிலும் பெண்மைக்கு மதிப்பு இல்லை என்பதை பெண்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும். உலகத்தில் “ஆண்மை” நிற்கும் வரையில் பெண்கள் அடிமையும் வளர்ந்தே வரும். பெண்களால் “ஆண்மை” என்ற தத்துவம் அழிக்கப்படாவல்லது பெண்களுக்கு விடுதலை இல்லை என்பது உறுதி. “ஆண்மை”யால்தான் பெண்கள் அடிமையாக்கப்பட்டிருக்கிறார்கள். சுதந்திரம், வீரம் முதலிய குணங்கள் உலகத்தில் “ஆண்மை” க்குத்தான் அவைகள் உண்டென்று, ஆண் மக்கள் முடிவுகட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

அன்றியும், இந்துமதம் என்பதில் பெண்களுக்கு என்றென்றும் விடுதலையோ, சுதந்திரமோ எத்துறையிலும் அளிக்கப்படவே இல்லை என்பதைப் பெண் மக்கள் நன்றாய் உணரவேண்டும்.

பெண்கள் விஷயமாய் இந்து மதம் சொல்லுவ தென்னவென்றால், கடவுள் பெண்களைப் பிறவியிலேயே விபச்சாரிகளாய்ப் படைத்துவிட்டார் என்பது ஆகச் சொல்லுகிறதுடன், அதனாலேயே பெண்களை எந்தச் சமயத்திலும் சுதந்திரமாய் இருக்கவிடக்கூடாது என்றும், குழந்தை பருவத்தில் தகப்பனுக்குக் கீழும், வயோதிகப் பருவத்தில் (தாம் பெற்ற) பிள்ளைகளுக்குக் கீழும் பெண்கள் கட்டுப் படுத்தப்படவேண்டும் என்றும் சொல்லுகிறது. “பெண்கள், ஆண்களும்-மறைவான இடமும்-இருளும் இல்லாவிட்டால் தான் பதிவிரதைகளாக இருக்கமுடியும்” என்று அருந்ததியும் துரோபதையும் சொல்லி, தெய்வீகத்தன்மையில் மெய்ப்பித்துக் காட்டியதாகவும் இந்துமத சாஸ்திரங்களும், புராணங்களும் சொல்லுகின்றன.

இன்னும் பலவிதமாகவும், மத சாஸ்திர ஆதாரங்களில் இருக்கின்றன. இவற்றின் கருத்து ஆண்களுக்குப் பெண்ணை அடிமையாக்க வேண்டு மென்பதல்லாமல் வேறில்லை.
எனவே, பெண் மக்கள் அடிமையானது ஆண் மக்களாலேதான் ஏற்பட்டது என்பதும், அதுவும் “ஆண்மை”யும் பெண் அடிமையும் கடவுளாலேயே ஏற்படுத்தப்பட்டதாக எல்லா ஆண்களும் கருதிக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் அதோடு பெண் மக்களும் இதை உண்மை என்றே நினைத்துக் கொண்டு வந்த பரம்பரை வழக்கத்தால் பெண் அடிமைக்குப் பலம் அதிகம் ஏற்பட்டிருக் கிறதென்பதும் நடுநிலைமைப் பெண்களுக்கும், ஆண்களுக்கும் யோசித்துப் பார்த்தால் விளங்காமற் போகாது. பொதுமக்கள் பிறவியில் உயர்வு தாழ்வு அழியவேண்டுமானால், எப்படிக் கற்பிக்கப் பட்டிருக்கின்றது என்ற இந்து மதக் கொள்கையைச் சுட்டுப் பொசுக்கவேண்டியது அவசியமோ, அதுபோலவே, பெண் மக்கள் உண்மைச் சுதந்திரம் பெறவேண்டுமானால், ‘ஆண்மையும்’, ‘பெண்மையும்’ கடவுளால் உண்டாக்கப்பட்டவை என்பதற்குப் பொறுப்பாயுள்ள கடவுள் தன்மையும் ஒழிந்தாக வேண்டும்.

`பெண் ஏன் அடிமையானாள்?’ என்ற நூலில் தந்தை பெரியார்

நன்றி: விடுதலை

4 comments:

Anonymous said...

Timely posting... Continue...

Anonymous said...

//But thankfully enlightenment in Europe ended all this.//

Mr.P.B,

Western Contries still practising FREE SEX,DATING,BLUE FILM,SEXUAL ABUSE,SEXUAL HARASHMENT,ILLEGAL SEX RELATIONSHIP etc.

Fortunately such evils comparatively less in INDIA and almost zilch in Middle East.

//The grip of religion on women was released in europe//

True. It is the main reason for the above western-style sins against women.

Anonymous said...

//who said free sex and dating are sins?They are individual freedom guranteed to women by constitution.//

It is funny that constitutionally allowing free sex while global fighting against AIDS.Either they should stop anti-Aids compaign or free sex.

//west has strong legal system to punish criminals//

You said western constition allows free sex. Since it is constitutionally allowed, why still sexual abusal and harrashment. Why still need sever laws to punish those criminal.

Please note you contradicts in your views. First you said dating and free sex are not sins, then you justifying punishment for illegal sex.

May be western culture allowed dating and free sex. But Indian culture teachs "Made for Each Other" policy i.e. one for one.

Anonymous said...

Good one. I found same subject this blog.

http://www.domesticatedonion.net/blog/thenthuli/?item=607