9.17.2005

மனுவை உயர்த்தும் மனுவாதி!

`துக்ளக்’ இதழில் கேள்வி பதில் பகுதியிலோ, அல்லது கார்ட்டூன் பகுதியிலோ, அநேகமாக தவறாது ஒரு இழையோட்டத்தைப் பார்க்கலாம். வீரமணி, வி.பி. சிங், லாலு, என்று ஒரு பட்டியலை வைத்துள்ளார். இவர்கள் மீது சேற்றை வாரி இறைக்காவிட்டால் அந்தவார `துக்ளக்’ இதழ் முழுமைப் பெற்ற மன நிறைவு அவர்களுக்கு இருக்காது.

ஒருக்கால் இவர்களை அர்ச்சிக்க மறந்தாலும்கூட இன்னொன்று நிச்சயமாக நிரந்தரமானது; அதுதான் பெண்கள்மீது சேற்றை மட்டுமல்ல - கல்லால் அடித்துக் `கொல்லுவது’ அந்த அளவுக்குப் பெண் என்று சொன்னாலே அவர்களின் பற்கள் நரநரக்கின்றன. எடுத்துக்காட்டுக்குச் சில வார கேள்வி - பதில் பகுதிகள் இதோ:

கேள்வி: பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா இந்த ஆட்சி யிலாவது நிறைவேறுமா?


பதில்: நடந்தாலும் நடக்கலாம். இப்போது நல்லது நடக்காது என்பதைத்தான் உறுதியாகச் சொல்ல முடியும். இம் மாதிரி விஷயங்கள் நடக்காது என்பதை அவ்வளவு நிச்சயமாகச் சொல்ல முடியாது.
(`துக்ளக்’ 25-5-2005)
கேள்வி: வழக்கம் போலவே இந்த வருடமும் +2 தேர்வில் பெண்களே அதிக சாதனை புரிந்திருக்கிறார்களே... என்ன சொல்கிறீர்கள்?

பதில்: என்ன மார்க் வாங்கி என்ன, என்ன சாதனை புரிந்து என்ன? ஆண்கள் பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களே! இதிலிருந்தே ஆண்களின் உயர்வு புரியவில்லையா? பிரம்ம ரிஷி ஆனது விசுவாமித்திரரின் சாதனைதான். ஆனால் அதை வசிஷ்டர் ஏற்றால்தான் திருப்தி என்று விசுவாமித்திரர் நினைத்த போதே, வசிஷ்டரின் உயர்வு புரியவில்லையா? ஆண்கள் வசிஷ்டர்கள்.
(`துக்ளக்’ 8-6-2005)


கேள்வி: முதல்வர் ஜெயலலிதா, பெண்களுக்கும் இலவச ஆட்டோக்கள் வழங்கியிருப்பது பற்றி?


பதில்: வீட்டில் சமையல் செய்து பழக்கம் உள்ளவர்கள் என்பதால், எந்தப் பொருளுக்கு, எந்த அளவிற்கு சூடேற்ற வேண்டும் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது. அப்படிப்பட்டவர்களுக்கு மீட்டரில் சூடேற்றுவது ஒரு பெரிய காரியமா? அதனால்,
பெண்களின் ஆட்டோக்கள் லாபகரமாக ஓடும்.
(`துக்ளக்’ 29-6-2005)

கேள்வி: கொலம்பியாவில் `வீட்டு வேலைகளை ஆண்கள் பகிந்து கொள்ளாவிடில், அதைக் காரணம் காட்டி விவாகரத்துக் கோரலாம்’ - என்று சட்டம் கொண்டு வரப் போகி றார்களாமே?

பதில்: வீட்டு வேலைகளை ஆண்கள் கவனிக்க ஆரம்பித்த பிறகுதான் பெண்களுக்குப் புத்தி வரும். `அய்யய்யோ! எல்லாம் இப்படி குளறுபடி ஆகிறதே!’ என்று அலறி, புதிய சட்டம் கோருவார்கள். ``வீட்டு வேலைகளை ஆண்கள் கவனிக்க ஆரம்பித்தால் - அதையே காரணம் காட்டி, பெண்கள் விவாகரத்து கோரலாம்’’ என்று புதிய சட்டம் வரும்.
(`துக்ளக்’ 10-8-2005)


கேள்வி: மகளிர் இடஒதுக் கீடு மசோதாவை இடதுசாரி கட்சிகளைத் தவிர வேறு எந்தக் கட்சியும் ஞாபகத்தில் வைத்திருப்பதாகத் தெரியவில்லையே! இப்போது உங்களுக்கு சந்தோஷம் தானே?

பதில்: இது டைம்பாம் மாதிரி. எப்போது வெடிக்கும் என்பது நமக்குத் தெரியாது. ஆனால் வெடிக்கும் என்பது தெரியும். அதனால் சந்தோஷத் திற்கு இடமில்லை. தாமதம் ஆவதில் கொஞ்சம் ஆறுதல் அவ்வளவு தான்.

இந்த வார துக்ளக்கிலும் (14-9-2005) இரண்டு கேள்வி பதில்கள்

கேள்வி: ஆனான பட்ட அரசியல்வாதிகளே பெண்களுக்காக மனம் இரங்கும் போது, உங்கள் மனம் மட்டும் அவர்கள்மீது இரக்கம் கொள்ள மறுப்பது - ஏன்?

பதில்: பெண்ணைப் பார்த்து மனம் இரங்க நான் என்ன அரசியல்வாதியா, பேயா, பிசாசா?

கேள்வி: பெண்களுக்கும் மூதாதையர் சொத்தில் சம உரிமை வழங்கும் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது பற்றி?

பதில்: இது நல்லதே; நியாயமானதே. ஆனால் இது ரொம்பப் பழைய சிந்தனை. மனுஸ்ம்ருதியே `தன் மகன் தன்னிலிருந்து வேறுபட்டவன் அல்ல; மகளோ மகனுக்குச் சமமானவள். ஆகையால் ஒரு வனுடைய மகள் இருக்கும் போது வேறு யார் அவனுடைய சொத்தை கோர முடியும்?’ என்று கூறுகிறது. பின்னர் இந்த சிந்தனை யில் பல வக்ரங்கள் சேர்ந்ததால், சில மாறுதல்கள் தோன்றிவிட்டன. அந்த மாற்றங்கள் இன்று மாற்றப்படுகின்றன. அவ்வளவுதான்.

இந்தப் பதில்களில் இருந்து `சோ’வின் உள்ளத்தில் பெண்கள்பற்றிய மதிப்பீடு என்ன என்பது விளங்கும். பெண்களுக்கு ஆட் டோக்கள் வழங்கப்படுகின்றன என்கிறபோது, அதனை மனந்திறந்து பாராட்ட அகன்ற மனம் இல்லை. சமையல் செய்ய பெண்களுக்குத் தெரிந்ததால் எப்படி ஆட்டோ மீட்டரிலும் சூடு வைப்பது என்பதைப் பெண்கள் அறிவார்களாம். புத்தி எங்கோ மேயப் போகிறது? சமையல் தெரியாத ஆண்களுக்கு மீட்டரில் சூடு வைக்கத் தெரியாதா?

வீட்டு வேலைகளை ஆண்கள் கவனிக்க ஆரம்பித்தால் அதையே காரணம் காட்டி பெண்கள் விவாகரத்து கோரலாம் என்று புதிய சட்டம் வரும் என்கிறார். எத்தனையோ வீடுகளில் ஆண்கள் வீட்டு வேலைகளைச் செய்யத்தான் செய்கிறார்கள் - அக்கிரகாரத்திலும் இது சர்வ சாதாரணம்தான்.

கணவனும், மனைவியும் வேலைக்குப் போவோராக இருந்தால் சமையலில் ஒரு வருக்கொருவர் ஒத்துழைப்புக் கொடுப்பதில்லையா? வெளிநாடுகளில் இது சர்வ சாதாரணம் தானே. அப்படி இருக்கும் போது `சோ’ கூறிய கற்பனைக்கு இடம் ஏது?
அவரின் உள்ளார்ந்த எண்ணம் என்பது பெண்கள் அடுப்பங்கரையில் `சமை’ந்து கிடக்க வேண்டும் என்பதே!

பெண்களுக்கு இட ஒதுக்கீடு மசோதா என்பது `டைம்’ பாமாம்! எந்த நேரத்திலும் வெடிக்குமாம். எதற்கு எதை ஒப்பிடுகிறார் என்பதைக் கவனிக்க வேண்டும். பெண்களுக்கு இடஒதுக்கீடு என்பது சோவின் கண்ணோட்டத்தில் ஆபத்தான போக்கு. இப்போதைக்கு அந்த மசோதா நிறைவேறுவதில் தாமதம் ஆவதால் கொஞ்சம் ஆறுதல் அடையலாமாம் - என்னே அற்ப சந்தோஷம்!

தாயை வாடி என்றும் மகளைப் போடி என்றும் கூறும் கூட்டமாயிற்றே. அவர்களிடத்தில் பெண்ணுக்குரிய மதிப்பையும் உரிமையையும் எப்படி எதிர்பார்க்க முடியும்?
பரவாயில்லையே, `சோ’கூட திருந்திவிட்டாரே பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை வழங்கும் சட்ட மசோதாவை ஆதரித்து விட்டாரே என்று நினைக் கும்போது, அதில் கொண்டு வந்து மனுஸ்ம்ருதியைப் புகுத்தினாரே பார்க்கலாம். அதானே பார்த்தோம் - அவாளாவது திருந்துவதாவது!

பெண்ணுக்குச் சொத்துரிமை வழங்க மனுஸ்ம்ருதி சம்மதித்து இருக்கிறதாம்.
இவர்கள் ஒன்றை ஆதரிக்க வேண்டும் என்றால் அதற்கு மனு சம்மதித்து இருக்க வேண்டும் - ஒப்புதல் அந்த இடத்திலிருந்து கிடைக்க வேண்டும் - அப்பொழுதுதான் எந்த நல்ல காரியத்தையும்கூட இவர்களால் ஏற்றுக் கொள்ள முடியும். மனுஸ்ம்ருதியை எடுத்துக்காட்டும் திருவாளர் `சோ’ எந்த அத்தியாயத்தில் எத்தனையாவது சுலோகத்தில் இப்படி சொல்லப்பட்டு இருக்கிறது என்று கூற வேண்டாமா? அப்படிசொல்லுவது தானே ஆதாரப் பூர்வமானது - அறிவு நாணயமானது - எப்பொழுதுமே அவரிடம் அந்தப் பேச்சுக்கே இடம் கிடையாது.

பெண்களுக்குச் சொத்துரிமை வழங்குமாறு மனுஸ்ம்ருதி சொல்லுகிறது - அப்படியென்றால் அந்த மனுதர்ம சாஸ்திரம் பெண்களில் உரிமைகளை அங்கீகரிக்கிறதா - என்ற கேள்வி எழலாம். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இந்துச் சமூகப் பெண்கள் தங்கள் உரிமைக்காகவும் மரியாதைக்காகவும் எடுத்த எடுப்பிலேயே ஒன்றைச் செய்ய வேண்டும் என்றால் அந்த முதல் காரியம் மனுதர்ம சாஸ்திரத்தைக் கொளுத்துவதாகத் தான் இருக்க முடியும். அந்த அளவுக்குப் பெண்களை மனுதர்மம் இழிவுபடுத்துகிறது. இதோ மனுதர்மம் பேசுகிறது.

படுக்கை ஆசனம், அலங்காரம், காமம், கோபம், பொய், துரோக சிந்தை இவற்றினை மாதர் பொருட்டே மனுவானவர் கற்பித்தார்.
(அத்.9. சு.17)

பிள்ளை இல்லாமல் அந்தக் குலம் நசிக்கிறதாக இருந்தால் அப்போது ஸ்திரீ தன் கணவன், மாமனார் முதலானவர்களின் உத்தரவு பெற்றுக் கொண்டு தன் மைத்துனன் அல்லது தன் கணவனுக்கு ஏழு தலைமுறைக்குட்பட்ட பங்காளி இவர்களோடு மேற்சொல்லுகிறபடி புணர்ந்து குலத்திற்குத் தக்கதான ஒரு பிள்ளையைப் பெற்றுக் கொள்ளலாம்.
(அத்.9. சு.59)

கணவன் துராசாரமுள்ளவனாக இருந்தாலும் அந்நிய ஸ்திரீலோலனாயிருந்தாலும், நற்குணம் இல்லாதவனாக இருந்தாலும் பதிவிரதையான ஸ்திரீயானவள் அவனைத் தெய்வத்தைப் போல பூசிக்க வேண்டியது.
(அத்.5. சு.154)

பால்யத்தில் தகப்பன் ஆக்ஞையிலும், யௌவனத்தில் கணவன் ஆக்ஞையிலும், கணவன் இறந்த பின்பு பிள்ளைகள் ஆக்ஞையிலும் இருக்க வேண்டியதல்லாமல் ஸ்திரீகள் தன் சுவாதீனமாக ஒரு போதும் இருக்கக் கூடாது.
(அத்.5. சு.148)

பெண்களையும், பிராமணரல்லாதாரையும் கொல்லுதல் பாதகமாகாது.
(அத்.11. சு.65)

இதற்கு மேல் பெண்களை இழிவுபடுத்த முடியாது - கேவலப்படுத்தவும் முடியாது. நசுக்கவும் முடியாது என்கிற அளவுக்கு அவர்கள் மீது கீழ்மைகளைச் சுமத்தும் மனுதர்மம் பெண்களுக்கு ஏதோ உயர்வு கொடுப்பது போன்ற ஒரு தோற்றத்தைக் கொடுப்பதற்காக, அதனை இந்த இடத்தில் எடுத்துக் காட்டும் சோவின் நய வஞ்சகத்தைக் கவனிக்கத் தவறக் கூடாது.

பார்ப்பனர்களை வருணாசிரம அடிப்படையில் உயர்த்திப் பிடிப்பதாலும், பெண்களை புழுவினும் இழிவாக படம் பிடிப்பதாலும் இந்த மனுதர்மம் என்னும் குப்பை சோ கூட்டத்திற்குக் கரும்பாக இனிக்கிறது என்பதை மறந்து விடக் கூடாது.
அதனால்தான் மனோன்மணியம் ஆசிரியர் பேராசிரியர் சுந்தரனார் அழகாக படம் பிடித்தார்.

வள்ளுவர் செய் திருக்குறளை
மருவற நன் குணர்ந்தோர்
உள்ளுவரோ மனுவாதி
ஒரு குலத்துக்கொரு நீதி
என்றார்.

ஒரு குலத்துக்கொரு நீதியைத்தலையில் தூக்கி வைத்து ஆடுபவர்களை அடையாளம் காண வேண்டாமா?

பெண்ணுரிமை அமைப்புகள் பல போராட்டங்களை நடத்திக் கொண்டு தான் இருக்கின்றன! பேய்கள்தான் பெண்களுக்கு இரங்க வேண்டும் என்கிற அளவுக்கு இவ்வளவு பச்சையாகப் பெண்களைக் கேவலப்படுத்தும், இழிவுப்படுத்தும் இந்த ஆசாமியை நோக்கி ஏன் அவர்களின் கவனம் திரும்பவில்லை?

குறைந்தபட்சம் தங்கள் எதிர்ப்பைக் காட்டும் வண்ணம் `துக்ளக்’கை வீதியில் போட்டு எரிக்க வேண்டாமா?

நன்றி: விடுதலை

நன்றி: இந்தப் பதிவை பதியத்தூண்டிய மற்றொரு பதிவு

23 comments:

தமிழரங்கம் said...

நான்கு வகைச் சாதியை இந்து மதத்தின் பெயாரல் சமூகத்தைப் பிளந்த, அதன் மேல் நிலையில் உக்கார்ந்து கொண்டு நக்கி வாழ்பவர்களே இந்த சோ பொன்ற வகையாறுகள். பாசிச பார்பணர்கள் இப்படித்தான் எழுதவாதுகள். பெண்களை எல்லாம் தமது பாலியல் வக்கிரத்துக்கு இரையாக்கி, அதில் இந்து மதத்தையே கட்டமைத்தவர்கள். இவர்களின் சமூக மேலாண்மையை ஒடுக்காத வரை இந்திய மக்களுக்கு சுதந்திரம் என்பது கனவுதான். விடுதலையமில்லை.
பி.இரயாகரன்
17.09.2005
www.tamilcircle.net

Anonymous said...

//குறைந்தபட்சம் தங்கள் எதிர்ப்பைக் காட்டும் வண்ணம் `துக்ளக்’கை வீதியில் போட்டு எரிக்க வேண்டாமா?//

தர்க்கமே என்னான்னு தெரியாத உங்க கும்பலுக்கு. எரிக்கணும் , தூற்றணும் ,அவ்வளவுதானா உங்க ஞானம்.

பொய்ய மறுபடியும் சொல்லி வயிற வளர்க்கத்தான் தெரியுமா?

Anonymous said...

கூட்டிக் கொடுக்கிறது என்கின்ற ஒரு பழக்கத்தை ஏற்படுத்தியது இந்த பார்ப்பனர்கள்தான். கூட்டிக் கொடுக்கின்றது என்றால் தன் மனைவியை மற்றவனுக்கு கூட்டிக் கொடுத்து அதை பார்த்து ரசிப்பவன்தான் இந்த பார்ப்பனர்கள். இப்படிப்பட்டவர்கள் திருந்தவாப் போகின்றார்கள்? இந்தப்பழக்கம் இவனுங்களுக்கு எப்படி ஏற்பட்டது என யாராவது ஆராய்ந்தால் நன்றாக இருக்கும். ஆராய்வீர்களா?

Anonymous said...

//பிள்ளை இல்லாமல் அந்தக் குலம் நசிக்கிறதாக இருந்தால் அப்போது ஸ்திரீ தன் கணவன், மாமனார் முதலானவர்களின் உத்தரவு பெற்றுக் கொண்டு தன் மைத்துனன் அல்லது தன் கணவனுக்கு ஏழு தலைமுறைக்குட்பட்ட பங்காளி இவர்களோடு மேற்சொல்லுகிறபடி புணர்ந்து குலத்திற்குத் தக்கதான ஒரு பிள்ளையைப் பெற்றுக் கொள்ளலாம்.
(அத்.9. சு.59)//


ஆஹா! என்னா தத்துவம்? என்னா தத்துவம்? மனுவை போற்றும் மனுவாதிகள் இதன்படி செய்யத் தயாரா?

Anonymous said...

//பிள்ளை இல்லாமல் அந்தக் குலம் நசிக்கிறதாக இருந்தால் அப்போது ஸ்திரீ தன் கணவன், மாமனார் முதலானவர்களின் உத்தரவு பெற்றுக் கொண்டு தன் மைத்துனன் அல்லது தன் கணவனுக்கு ஏழு தலைமுறைக்குட்பட்ட பங்காளி இவர்களோடு மேற்சொல்லுகிறபடி புணர்ந்து குலத்திற்குத் தக்கதான ஒரு பிள்ளையைப் பெற்றுக் கொள்ளலாம்.
(அத்.9. சு.59)//


ஆஹா! என்னா தத்துவம்? என்னா தத்துவம்? மனுவை போற்றும் மனுவாதிகள் இதன்படி செய்யத் தயாரா?

Have you not heard about sperm donors and surrogate mothers in current medical world?

Anonymous said...

மனுவை போற்றும் மனுவாதிகள் இதன்படி செய்யத் தயாரா?

Have you not heard about sperm donors and surrogate mothers in current medical world?

மேலே சின்னது மணுவை போற்றும் மனுவாதி?

Anonymous said...

மேலே சின்னது மணுவை போற்றும் மனுவாதி?
Ketta kelvikku bathil varalaye?
Now we have sperm donors and surrogate mothers.Athu thappa righta?

Anonymous said...

Manu smrithi setha pambu.Athai innum ethanai nalukku adichitirupeenga?

Anonymous said...

//* Anonymous said...
மேலே சின்னது மணுவை போற்றும் மனுவாதி?
Ketta kelvikku bathil varalaye?
Now we have sperm donors and surrogate mothers.Athu thappa righta? *//

ஏய் மூத்திரா... 'donor' க்கு உன்னுடைய வியாக்கியானம் புணர்தல்னு அர்த்தமா? புணர்தல்னா என்னன்னு விளக்கட்டுமா? மனுஸ்மிருதி காலத்திலேயே டெஸ்ட் டியுப் பேபி உருவாகிடுச்சா? கேனத்தனமா கேட்டுட்டு கேட்ட கேள்விக்கு பதில் வேற வேண்டுமா?

Anonymous said...

ஏய் மூத்திரா... 'donor' க்கு உன்னுடைய வியாக்கியானம் புணர்தல்னு அர்த்தமா? புணர்தல்னா என்னன்னு விளக்கட்டுமா? மனுஸ்மிருதி காலத்திலேயே டெஸ்ட் டியுப் பேபி உருவாகிடுச்சா? கேனத்தனமா கேட்டுட்டு கேட்ட கேள்விக்கு பதில் வேற வேண்டுமா? //

This is the problem with you guys.You people dont know to debate.When somebody asks a question, you guys know only to abuse with bad words.
Politeness,decency,respect to fellow human being,not getting emotional while debating,countering arguments with arguments all these are needed for debate.For abusing only a vocabulary of bad words are needed.Abusers dont deserve to be in a debating place.

I pity you.Whichever Ideology you follow,it has failed to make you a better human.

Anonymous said...

In old testament Prophet Abraham doesnt have children.So his wife sarah marries him to another woman and the second wife gives birth to a child Ismail.This story is found in quaran also.

When this is acceptable why not women begetting a child from another man is frowned at?males can sleep with as many women as they want,but women have to remain 'pathinis'.

All over the world if men dont have a child through a woman,they marry another woman and get a child.Manu gave this right to women also.This is true feminism.Manu is a real revolutionary.

see in what condition manu gives this permission
"பிள்ளை இல்லாமல் அந்தக் குலம் நசிக்கிறதாக இருந்தால் ..."

manu shattered the male chauvinism and gave women equal rights as that of men in this regard.Great.

Anonymous said...

//see in what condition manu gives this permission
"பிள்ளை இல்லாமல் அந்தக் குலம் நசிக்கிறதாக இருந்தால் ..."

manu shattered the male chauvinism and gave women equal rights as that of men in this regard.Great.//

If manu shattered the male chauvinism, then why this condition..தன் கணவன், மாமனார் முதலானவர்களின் உத்தரவு பெற்றுக் கொண்டு..?

//In old testament Prophet Abraham doesnt have children.So his wife sarah marries him to another woman// this another women was a slave and Prophet Abraham married her. But see what manu prescribes..தன் மைத்துனன் அல்லது தன் கணவனுக்கு ஏழு தலைமுறைக்குட்பட்ட பங்காளி இவர்களோடு மேற்சொல்லுகிறபடி புணர்ந்து..

What a disgrace to women, and yet you people justify manu as the shatterer of male chauvinism!!!

Anonymous said...

If manu shattered the male chauvinism, then why this condition..தன் கணவன், மாமனார் முதலானவர்களின் உத்தரவு பெற்றுக் கொண்டு..?////

To make them aware of women empowerment.

//this another women was a slave and Prophet Abraham married her////

Can a prophet have slaves?Is that ethical?

Anyway if males can have sex with another woman without marrying her, women also can do the same.Men and women are equal.

Bible and quran dont prohibit males from having sex with unmarried women(women slaves)when males can do so,why not women?

/////What a disgrace to women, and yet you people justify manu as the shatterer of male chauvinism!!! ///

when males can marry as many women as they want and can have sex with as many slave women as they want,why should women be left behind?Let them also have fun.

Anonymous said...

{Bible and quran dont prohibit males from having sex with unmarried women(women slaves)when males can do so,why not women?}

Many men died in wars. so women and widows left without husband.To fullfill their sexual need, Quran allowed to having wives upto four. Since participating in wars mandatory to men, they used be killed and their wives & family left to be orphened. what is your suggestion to fulfill the sexual needs of widows?

Anonymous said...

Many men died in wars. so women and widows left without husband.To fullfill their sexual need, Quran allowed to having wives upto four. Since participating in wars mandatory to men, they used be killed and their wives & family left to be orphened. what is your suggestion to fulfill the sexual needs of widows? ////

I did not oppose widow remarriage, did I?I am saying like how men have rights to marry many women, women also should have rights to marry many men.
Bharathi said "karpu enbathai anukkum pennukkum pothuvil vaippom".Let us implement it.

Anonymous said...

//To make them aware of women empowerment.//

//..why should women be left behind? Let them also have fun.//

I thought you are justifying manu. Now I understand you are just being sarcastic! Go ahead!

Anonymous said...

I thought you are justifying manu. Now I understand you are just being sarcastic! Go ahead!//

I never justified manu.Nobody in India follows manu.Now the only people in India who read manu will be DK people.Except them nobody reads manu.
Its funny to read articles accusing old books.After another 300 years every book written today will be criticized.
Every old book has mistakes.Everybody knows it.Whats the point in repeating it again and again?

Anonymous said...

மலர்மன்னா! தாங்கள் நல்ல டாக்டரிடம் விசாரித்துக் கொள்வது உங்களுக்கும் நல்லது உங்களைப் பின்பற்றும் ஒரு சிறு கூட்டத்திற்கும் நல்லது. அதாவது ஒரு ஆண் பல பெண்களிடம் புணர்வதால்(அந்தப் பெண்கள் இவனைத்தவிர யாரிடமும் புணர்தல் இல்லாமல் இருந்து) நோய் ஏற்படுகின்றதா? அல்லது ஒரு பெண் பல ஆண்களிடம் புணர்தலால் நோய் உருவாகின்றதா என விஞ்ஞான விளக்கத்துடன் தெரிந்துக் கொள்வது உங்களுக்கு நலம். (நிச்சயமாக புணர்தலில் சுத்தம் அவசியம்தான்).

இதன்பிறகாவது பல பெண்களிடம் உள்ள தொடர்பை அற்றுக் கொள்ளுங்கள்.

Anonymous said...

அதாவது ஒரு ஆண் பல பெண்களிடம் புணர்வதால்(அந்தப் பெண்கள் இவனைத்தவிர யாரிடமும் புணர்தல் இல்லாமல் இருந்து) நோய் ஏற்படுகின்றதா? அல்லது ஒரு பெண் பல ஆண்களிடம் புணர்தலால் நோய் உருவாகின்றதா என விஞ்ஞான விளக்கத்துடன் தெரிந்துக் கொள்வது உங்களுக்கு நலம். ////

If male uses condoms no female will get any disease.All sexual diseases spread only because males dont use condoms.

Anonymous said...

//Manu is a real revolutionary.//

//manu shattered the male chauvinism and gave women equal rights as that of men in this regard.Great//

//I never justified manu.//

Are you the same Anonymous??

Anonymous said...

//Manu is a real revolutionary.//

//manu shattered the male chauvinism and gave women equal rights as that of men in this regard.Great//

//I never justified manu.//


-------->I am the same anonymous.But the first two postings were sarcastic.

My position on manu is as follows

1.Only vedas are holy book of hindus,not manu smrithi.
2.Manu is the law book of gupta days.It isnt relevant now.
3.We dont know how many insertions took place in due course of time in manu.
4.Thus manu smrithi is rejected now by hindus.
5.But when people use this old book which has been rejected, to criticize hinduism I replied back sarcastically.

thats it

Anonymous said...

//But the first two postings were sarcastic.//

yeah..yeah.. that is what I said..//Now I understand you are just being sarcastic! Go ahead!//

Anonymous said...

அடேய் மூத்திரா

தேவடிய பையா Or மகனே