8.11.2005

கிருஷ்ண லீலை - 2

காளிங்க நர்த்தனம்:
ஒரு முறை கிருஷ்ணர் தன் நண்பர்களுடன் காளிங்க மடுவுக்கு (குளம்) அருகில் பந்து விளையாடிக் கொண்டிருந்தார்.
காளிங்க மடு ஆழமான குளம். அது குடிநீருக்கும், குளிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டு வந்த குளம்.
இந்த குளத்தில் காளிங்கன் என்ற அசுரன் பாம்பு வடிவில் வந்து குளத்திற்கு அடியில் வந்து தங்கிவிட்டான். அங்கு குளிக்க வருபவர்களையும், நீர் எடுக்க வருபவர்களையும் பிடித்து விழுங்கி வந்தான்.
காளிங்கன் வந்து தங்கி இருந்ததால் அந்த மடுவுக்கு காளிங்க மடு என்ற பெயர் வந்துவிட்டது.
அந்த மடுவை உபயோகிப்பதையே மக்கள் நிறுத்திவிட்டனர்.
அந்த மடுவிற்கு அருகில்தான் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார் கிருஷ்ணர்.
திடீரென பந்து பறந்து சென்று காளிங்க மடுவிற்குள் விழுந்து விட்டது. உடனே பந்தை எடுக்க காளிங்க மடுவிற்குள் இறங்கினார் கிருஷ்ணர். பதறிப் போனார்கள் நண்பர்கள்.
உள்ளே அசுரன் இருக்கிறான் 'கிருஷ்ணா கிருஷ்ணா' என்று கதற ஆரம்பித்தனர். அவர்கள் குரல் கேட்டு ஆயர்பாடி முழுவதும் காளிங்க மடுவின் அருகே கூடிவிட்டது.
சற்று நேரம் கழித்து ரத்தம் மேலே வந்து மடுவின் மேற்புறம் நீர் முழுவதும் சிகப்பாக மாறத் தொடங்கியது. எல்லோரும் பயந்து போனார்கள். கிருஷ்ணரைத்தான் காளிங்கன் கொன்றுவிட்டான் என்று வருந்தி அழத் தொடங்கினார்கள்.
ஆனால் அடுத்த சில நொடிகளிலேயே காளிங்க பாம்பின் வாலை தன் ஒரு கையில் பிடித்தபடி அதன் தலை மேல் நர்த்தனமாடியபடியே மடுவிற்கு மேல் வந்தார் கிருஷ்ணர். பாம்பு வடிவில் இருந்த அசுரனும் கொல்லப்பட்டான்.
காளிங்கனை கொன்று அதன் மேலே நர்த்தனமாடி வந்ததால் அதற்கு 'காளிங்க நர்த்தனம்' என்று பெயர்.
காலம் கடந்தது. தன் கடமையை உணர்ந்தார் கிருஷ்ணர். கம்சனை கொல்ல வேண்டிய காலம் வந்தது. மதுரா சென்றார் கிருஷ்ணர். அங்கு கம்சனுடன் நேருக்கு நேர் போரிட்டு அவனை அழித்து தன் தாய் தந்தையை விடுவித்தார்.

நன்றி: தட்ஸ் தமிழ்

No comments: