8.21.2005

`ஜன்னல்’

`தினமணி’ ஏடு ஞாயிறுதோறும் `ஜன்னல்’ என்ற ஒரு பகுதியை வெளியிட்டு வருகிறது. குறிப்பிட்ட ஒரு பிரச்சினை வெடிக்கும் பொழுது, அது தொடர்பான பழைய தகவல்களைச் சேகரித்து வெளியிடுவது நல்ல முயற்சிதான் - புதிய தலைமுறையினர் தெரிந்து கொள்ளவும், பழைய தலைமுறையினர் மறந்தவற்றை நினைவூட்டிக் கொள்வதற்கும் இது பயன்படும்.

அப்படித் தகவல்களைச் சொல்லும்போது எதையும் மறைக்காமல் - ஒளிக்காமல் சொன்னால் தான், சரியான தகவல் களைச் சொன்னதாகப் பொருள்படும்.
இவ்வார `ஜன்னலில்’ இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட முதல் திருத்தம் பற்றி சொல்ல `தினமணி’ முயற் சித்துள்ளது.

செண்பகம் துரை ராஜன் என்பவர் உச்சநீதி மன்றத்தில் வழக்குப் போட்டதாகவும், அரசியல் சட்டப்படி பிற்படுத்தப்பட்டவர்களுக்கு (பிற்பட்டவ ருக்கு என்று `தினமணி’ கூறியிருப்பது தவறு) இட ஒதுக்கீடு செய்ய வழி இல்லை என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு அளித்ததாகவும், அப்பொழுது பிரதமராக இருந்த நேருவை அன்றைய முதல்வர் காமராஜர் வலியுறுத்தி, இட ஒதுக்கீடு கிடைக்க அரசியல் சட்டத்தில் உள்ள திருத்தத்தைச் செய்ய வைத்தார் என்றும் `தினமணி’ எழுதுகிறது.

1950,51-இல் காமராஜர் முதல்வராக இருந்தாரா இதுகூட தெரியாமல் `தினமணி’ எழுதுகிறதே!

உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தந்தை பெரி யாரும் திராவிடர் கழகமும், மாநாடு நடத்தியும், போராட்டம் பல நடத்தியும், மக்களிடத்திலே பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். தமிழகத் தலைவர்களும் அவரவர் பங்குக்குப் பாடுபட்டது என்பதை யெல்லாம் `தினமணி’ மறைக்கிறதே!

சென்னை மாகாணத்தில் நடக்கும் போராட்டங் களை பிரதமர் நேரு அவர்களே நாடாளுமன்றத்தில் சுட்டிக் காட்டியது; அதன் அடிப்படையில் சட்டத் திருத்தம் செய்வதாக பிரதமர் நேரு சொன்னது போன்ற தகவல்கள் எல்லாம் `தினமணி’க்குத் தெரியாதா? அல்லது தெரிந்தும் இருட்டடிக்கும் குசும்பா?

நன்றி: விடுதலை

காமராசர் 1954ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் நாள் தமிழ் புத்தாண்டு தினத்தில்தான் முதல் அமைச்சராக பதவி ஏற்றார்.

3 comments:

Boston Bala said...

நன்றி!!

Anonymous said...

தகவலுக்கு நன்றி ஐயா... தினமனியும் தினமலத்தின் வழியில் செல்கின்றது போலும்.

Anonymous said...

ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.