8.18.2005

காயத்ரீ உபாசனை

காயத்ரீ மந்திரத்தின் மகிமை

மூன்று தலைமுறையாக காயத்ரீயை விட்டுவிட்டவன் பிராமணணாக மாட்டான். அப்பேர்பட்டவர்கள் இருக்கிற தெரு அக்கிரஹாரம் ஆகாது. அது குடியானவர் தெருதான். ஆனால் இன்னும் மூன்று தலைமுறை ஆகவில்லையாகையால் இன்னும் பிராமணர்கள் என்று பெயராவது சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

மூன்று தலைமுறை யக்ஞம் இல்லாவிட்டால் அவன் துர்ப்பிராமணன்; கெட்டுப்போன பிராமணன். கெட்டாலும் 'பிராமணன்' என்ற பேராவது இருக்கிறது!மறுபடியும் பிராமணனாவதற்குப் பிராயச்சித்தம் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் காயத்ரீயை மூன்று தலைமுறையாக விட்டுவிட்டால் பிராமணத்வம் அடியோடு போய்விடுகிறது. அவன் மறுபடியும் பிராமணனாக உறவுக்காரர்களாக உடையவன் அதாவது, பிராமணர்களை உறவுக்காரர்களாக உடையவன் தான்!

ஆகையால் அந்த நெருப்புப் பொறியை ஊதிப் பெரிசு பண்ண வேண்டும். சின்ன நெருப்புப் பொறி எதற்கும் உபயோகப்படாது. ஆனால் உபயோகப்படுமாறு பெரிசாக்கப்படுவதற்கு அதில் ஆதாரம் இருக்கிறது.

ஆகையால் ஞாயிற்றுக்கிழமையாவது பூணூல் உள்ளவர்கள் ஆயிரம் காயத்ரீ பண்ண வேண்டும். கண்ட இடத்தில் கண்ட ஆஹாரத்தை உண்ணலாகாது. இது வரைக்கும் அனாசாரம் செய்ததற்குப் பிராயசித்தம் பண்ணிக்கொள்ளவேண்டும். இனியாவது கண்ட ஆஹாரத்தை உண்ணாமல், மந்திரசக்தி இருப்பதற்கு தேஹத்தைப் பரிசுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும்.

' ஸஹஸ்ர பரமா தேவீ சத மத்யா தசாவரா ' என்ற (தைத்திரீய ஆரண்யக- வாக்குப் ) படி ஆயிரம் ஆவிருத்தி ஜபிப்பது உத்தமம்;நூறு ஜபிப்பது மத்யமம்; அதம பக்ஷம் பத்து.
காலை ஸந்தி, மத்தியான வேளை, மாலை ஸந்தி என்ற ஒவ்வொரு காலத்திலும் பத்து காயத்ரீயாவது எத்தனை ஆபத்துக்காலத்திலும் ஜபம் பண்ணவேண்டும். இந்த மூன்று காலங்களும் சாந்தம் உண்டாகிற காலம். காலையில் பக்ஷி முதலிய பிராணிகளும் மனிதர்களும் எழுந்திருக்கும் காலம். அப்பொழுது மனது சாந்தியாக இருக்கும். ஸாயங்காலம் எல்லோரும் வேலையை முடித்து ஓய்ந்திருக்கும் காலம். அதுவும் சாந்தமான காலம். மத்தியான காலத்தில் ஸ¨ரியன் உச்சியில் இருக்கிறான். அப்பொழுது மனத்துக்கு சாந்தமான காலம். இந்த மூன்று காலங்களிலும் காயத்ரீ, ஸாவித்ரீ, ஸரஸ்வதீ என்று மூன்று பிரகாரமாகத் தியானம் செய்யவேண்டும். காலையில் பிரம்ம ரூபிணியாகவும், மத்யான்னம் சிவ ரூபிணியாகவும், ஸாயங்காலம் விஷ்ணு ரூபிணியாகவும் தியானம் செய்யவேண்டும்.

காயத்ரீயில் ஸகல வேத மந்திர சக்தியும் அடங்கியிருக்கிறது. மற்ற எல்லா மந்திரங்களுக்கும் சக்தியைக் கொடுப்பது அதுதான். அதை ஜபிக்காவிட்டால் வேறு மந்திர ஜபத்திற்குச் சக்தி இல்லை. ஹிப்னாடிஸம் என்பதால் பல காரியங்களைச் செய்கிறார்கள். மோக்ஷத்துக்குப் போக உதவும் ஹிப்னாடிஸம் காயத்ரீ மந்திரம்!ஆசையையடக்கி ஜன்மம் எடுத்ததன் பலனை அடையச் செய்கிற ஹிப்னாடிஸம் காயத்ரீ மந்திரம்! லோகக்காரியங்களைக் குறைத்துக்கொண்டு இந்தப் பொறியை ஊதுவதை அதிகமாகச் செய்யவேண்டும். அனாசாரத்தில் போகாமல் தேகத்தைச் சுத்தமாக வைத்துக்கொண்டால்தான் இந்த ஒரு பொறியாவது அணையாமலிருக்கும்!

ஸந்தியாவந்தனத்தில் அர்க்கியமும் காயத்ரீயும் முக்கியமானவை. மற்றவையெல்லாம் அதற்கு அங்கமானவை. அசக்தர்களாயிருப்பவர்கள் அர்க்கியத்தைக் கொடுத்துவிட்டுப் பத்து காயத்ரீயாவது ஜபிக்கவேண்டும். 'அந்த இரண்டுதானே முக்கியம்? அவற்றை மட்டும் செய்து விடலாம்' என்றால் வரவர அவற்றுக்கும் லோபம் வந்துவிடும். ஆபத்திலும் அசக்தியிலும் பத்து காயத்ரீ போதும் என்பதால் எப்போதும் இப்படிப் பத்தே பண்ணினால், அப்படிப் பண்ணுகிறவர்களுக்கு எப்போதும் ஆபத்தும் அசக்தியுகமாகத்தான் இருக்கும் என்று ஒரு பண்டிதர் வேடிக்கையாகச் சொன்னார். ஆகையால் அங்கபுஷ்களத்தோடு எதுவும் குறைவின்றிச் செய்து வந்தால்தான் முக்கியமானது நன்றாக நிற்கும். ஆபத்துக்காலத்திலுங்கூட அவற்றைச் செய்து வர வேண்டும். காலம் தப்பாமல் செய்யவேண்டும். பாரத யுத்தத்தின்போது ஜலம் அகப்படாதபோது கூட தூளியை (புழுதியை) வைத்துக் கொண்டு காலம் தவறாமல் ஸேனாவீரர்கள் அர்க்கியம் கொடுத்தார்களென்று சொல்லப்பட்டிருக்கிறது!

அஸ்தமன காலத்திலும், உதயகாலத்துக்கு முன்பும், உச்சிக் காலத்திலும் அர்க்கியம் கொடுக்கவேண்டும். இடைகாட்டுச் சித்தர் என்று ஒருவர் இருந்தார். ஸித்தர்கள் வினோதமான காரியங்கள் பண்ணுவார்கள்;புதிராகப் பேசுவார்கள். இடைக்காட்டுச் சித்தர் ஆடு மேய்த்தார்! அவர், ' காணாமல் கோணாமற் கண்டு கொடு ! ஆடுகாண் போகுது பார் போகுது பார் ! என்று சொல்லி இருக்கிறார். 'காணாமல்'என்றால் காண்பதற்கு முன்பு என்பது அர்த்தம். அதாவது ஸ¨ர்யோதயத்திற்கு முன் காலை அர்க்கியம் கொடுக்கவேண்டும். 'கோணாமல்' என்பதற்கு ஸ¨ரியன் தலைக்கு நேரே இருக்கும் பொழுது என்பது அர்த்தம். அதாவது ஸ¨ரியன் மேற்காகச் சாய்வதற்கு முன் உச்சிக்காலத்தில் மாத்யான்னிக அர்க்கியம் கொடுக்கவேண்டும். 'கண்டு'என்பதற்கு ஸ¨ரியன் இருக்கும்பொழுது என்று அர்த்தம். ஸ¨ரியன் அஸ்தமிப்பதற்கு முன்பு மலைவாயிலில் இருக்கும் பொழுதே ஸாயங்கால அர்க்கியம் கொடுக்கவேண்டும். இந்த விஷயங்களைத்தான் அந்த ஸித்தர் லேசாகச் சொல்லியிருக்கிறார். 'ஆடு' என்றால் 'நீராடு'! அதாவது 'கங்கையில் ஸ்நானம் பண்ணு' என்பது அர்த்தம். 'போகுதுபார்' என்றால் 'த்ரிகால ஸந்த்யா வந்தனத்தாலும் ஸேது தரிசனத்தாலும் நம் பாபம் தொலைந்து போகிறதைப் பார்!'என்று அர்த்தம். காசிக்குப் போய் கங்கையை எடுத்துக்கொண்டு, ஸேதுவான ராமேச்வரத்துக்குப் போய் ராமநாத ஸ்வாமிக்கு கங்காபிஷேகம் பண்ணும் சம்பிரதாயத்தைத்தான் சொல்லியிருக்கிறார்!

காயத்ரீயை ஸரியாகப் பண்ணினால்தான் மற்ற வேத மந்திரங்களிலும் ஸித்தி உண்டாகும். அர்க்கியத்தையும் காயத்ரீயையும் தவறாமல் செய்துகொண்டு வரவேண்டும். ஜன்மத்தில் ஒரு தரமாவது கங்காஸ்நானமும் ஸேது தரிசனமும் பண்ண வேணும்.

ஒருவனுக்கு ரொம்பவும் ஜ்வரம் வந்தால், கூட இருக்கிறவர்கள் அவனுக்காக ஸந்தியா வந்தனம் பண்ணித் தீர்த்தத்தை ஜ்வரம் வந்தவன் வாயில் விட வேண்டும். இப்பொழுது நமக்கு நித்தயப்படி ஜ்வரம் வந்தது போலத்தான் இருக்கிறது! ஜ்வரம் வந்தால் அதற்கு மருந்து அவசியம்;அதுபோல ஆத்மாவுக்கு வந்திருக்கிற பந்தம் என்ற ஜ்வரம் போகக் காயத்ரீ மருந்து அவசியமானது, அதைக் எந்தக் காலத்திலும் விடக்கூடாது. மருந்தைவிட இதுதான் முக்கியமானது. ஒரு நாளாவது ஸந்தியாவந்தனத்தை விட்டுவிட்டோமென்று இருக்கக்கூடாது.

காயத்ரீ ஜபம் பண்ணுவது எல்லாராலும் ஆகின்ற காரியந்தான். இதிலே ஜலத்தைத் தவிர வேறு திரவியம் வேண்டாம். சரீரப் பிரயாசையும் இல்லை. லகுவாகப் பரம சிரேயஸைத் தரும் ஸாதனம். ஆயுள் இருக்கிறவரைக்கும் ஸந்தியா வந்தனத்துக்கு லோபம் வராமல் பண்ணவேண்டும்.

காயத்ரீயை மாத்ரு ரூபமாக (தாய் வடிவமாக) உபாஸிக்கவேண்டும். பகவான் பலவிதமான ரூபங்களில் வந்து பக்தர்களுக்கு கிருபை செய்கிறார். நம்மிடம் எல்லாரையும் விட அன்பாக இருப்பது மாதாதான். தாயாரிடம் எதை வேண்டுமானாலும் பயமில்லாமல் சொல்லலாம். பகவான் எல்லா ரூபமாக இருந்தாலும் மாதா ரூபமாக வந்தால் ரொம்பவும் ஹிதமாக இருக்கிறது. காயத்ரீயை அப்படிப்பட்ட மாதா வென்று வேதம் சொல்லுகிறது.
பலவித மந்திரங்கள் இருக்கின்றன. அவற்றை ஜபம் பண்ணுவதற்கு முன்பு இன்ன இன்ன பலனை உத்தேசித்துப் பண்ணுகிறேன் என்று சொல்லுகிறோம். காயத்ரீ மந்திரத்தினுடைய பலன் சித்த சுத்திதான்;மன மாசு அகலுவதுதான். மற்ற மந்திரங்களால் உண்டாகிற பலன்களெல்லாம் கடைசியில் சித்த சுத்தி உண்டாகத்தான் இருக்கின்றன.அதுவே காயத்ரீக்கு நேரான பலன்; ஒரே பலன்.

இந்தக் காலத்தில் காலையிலும் ஸாயங்காலத்திலும் எல்லாரும் காலந்தவறாமல் ஸந்தியாவந்தனம் செய்யலாம். சீக்கிரம் ஆபீஸ¨க்கு போகவேண்டியவர்கள் மத்யான்ன வேளையில் வீட்டிலிருக்க முடியாதாகையால், பிராதஃ காலம் ஆனபின் அதாவது ஸ¨ர்யோதயத்திலிருந்து ஆறு நாழிகை (2 மணி 24 நிமிஷம்) கழித்து வரும் ஸங்கவ காலத்தில், அதாவது 8.30 மணி சுமாருக்கு மாத்தியான் ஹிக அர்க்கியத்தைக் கொடுத்து ஜபிக்கவேண்டும்.

அதாவது நம்மால் அடியோடு முடியாமற் போனாலன்றி திரிகால ஸந்தியோபாஸனை இல்லாமல் இருக்கவே கூடாது. அடியோடு முடியாமல் ஜ்வரம் வந்தால் மற்றவர்களிடம் 'கஞ்சி கொடு, தீர்த்தம் கொடு' என்று சொல்லுவதைப் போல, 'எனக்காக ஸந்தியாவந்தனம் பண்ணு'என்று சொல்லவேண்டும்.

மந்திர சக்தியானது அணையாமல் விருத்தியாகக் கிருபை செய்யவேண்டுமென்று பகவானை எல்லோரும் பிரார்த்திப் போமாக!

நன்றி: காமகோடி

5 comments:

Anonymous said...

This is very useful post for all,Even non Bramins should learn Gayathri and practise.

Anonymous said...

// சின்ன நெருப்புப் பொறி எதற்கும் உபயோகப்படாது//

பீடி பத்த வெக்கலாமே?

Anonymous said...

///காயத்ரீ ஜபம் பண்ணுவது எல்லாராலும் ஆகின்ற காரியந்தான்///

அர்ச்சனையும் எல்லோராலும் முடியுமே?

வெங்காயம் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!!

அரசுவின் வலைப்பூக்கள் நாளும் சிறந்த முறையில் மலர வாழ்த்துக்கள்.....

Anonymous said...

//கெட்டாலும் 'பிராமணன்' என்ற பேராவது இருக்கிறது!மறுபடியும் பிராமணனாவதற்குப் பிராயச்சித்தம் சொல்லப்பட்டிருக்கிறது.//

சூத்திரன் கெட்டா அவனுக்குப் பிராயசித்தம் இல்லை. அவனுக்கு கருடபுராணம் என்ன தண்டனை சொல்கிறதோ அதுதான். அதைத்தான் நவீன கருடபுராணகர்த்தாக்களான சுஜாதாவும் சங்கரும் அந்நியன் திரைப்படத்தில் சொல்லியிருக்கின்றனர்.