8.05.2005

"நியூ" படத்திற்கு தடை

சென்ற வருடம் வெளிவந்து தடபுடலாக ஓடிய நியூ படத்திற்கு இன்று சென்னை உயர்நீதி மன்றம் தடை விதித்தது. இந்த உத்தரவை பிறப்பித்த நீதிபதிகள் கற்பக விநாயகம் மற்றும் அசோக் குமார் ஆகியோர் இந்தத் திரைப்படைத்தை பார்வையிட்ட பின்னர் அதற்கு தடை விதித்ததுடன் ஆபாசமாக படம் எடுத்த அதன் இயக்குநர் S.J. சூர்யாவுக்கு கண்டனமும் தெரிவித்தனர்.

படம் வந்து அனைத்து பகுதியிலும் சக்கைபோடு போட்டு, படம் பெட்டிக்குள் போன பிறகு இப்படி ஒரு தீர்ப்பு தேவையா? இந்த படம் வெளிவந்தவுடன் இடைக்கால தடை போட்டு, மிக விரைவாக விசாரித்து தீர்ப்பு வழங்கியிருக்கலாமே? சாட்டிலைட் சேனல்களில் இந்த படத்தைவிட மிக ஆபாசமான காட்சிகள் வருகின்றனவே! விளம்பரங்களில் ஆபாசக் காட்சிகள், இரட்டை அர்த்த வசனங்களுடன் வருகின்றனவே! இவற்றுக்கெல்லாம் பதில்?

“தமதப்படுத்தப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம்” என்று யாரோ சொன்னது இப்பொழுது நினைவுக்கு வந்து தொலைக்கிறது.

குறிப்பு: நான் "நியூ" படத்திற்கு ஆதரவாகவோ அல்லது அதற்கு எதிராகவோ எழுதவில்லை. இந்தியாவில் நீதி தாமதப்படுத்தப்படுகிறது என்பதை சுட்டிக்காட்டவே இந்த பதிவு.

4 comments:

பினாத்தல் சுரேஷ் said...

I was about to write a post on this. It is just a mockery, banning the movie after it has made all the damage..

Anonymous said...

ore tamaasuppaa!! :-D

Anonymous said...

Ofcourse this judgement is going to bring more popularity for the movie. Nothing more will happen.

வெங்காயம் said...

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.

திரைப்படம் மட்டுமின்றி பொதுவாக அனைத்து துறையிலுமே நீதி தாமதப்படுத்தப்படுகிறது. வாய்தா வழங்கும் நடைமுறையை மாற்ற வேண்டும் என்பதே என் அவா.