8.28.2005

திருவாசகம் - இளையராஜா - சோ

கேள்வி: இளையராஜாவின் `திருவாசகம்’ சிம்ஃபொனி கேட்டீர்களா? (கேட்டவர்கள் எல்லோரும் `ஆஹா’ என்று பாராட்டுகிறார்களே)

பதில்: இந்த மாதிரி விஷயங்களில் (குறிப்பாக), நான் பழைமைவாதி, விஷ்ணு சஹஸ்ர நாமத்தையும், ஸ்ரீ ருத்ரத்தையும்கூட, மேலை நாட்டு சங்கீத பாஷையில் கொண்டு வரலாம்; அது அந்த சங்கீதத்தின் மேன்மையை உணர்ந்த வர்களுக்கு, ரசிக்கக் கூடியதாக இருக்கலாம். இந்த திருவாசக ஸிம்ஃபொனியும் அப்படித்தான். கோவிலில் கேட்கக் கூடியதாக இல்லை; சர்ச்சிற்கு உகந்ததாக இருக்கலாம். துதி, தமாஷாகி விடுவது ஏற்கக் கூடியது அல்ல என்பது என் கருத்து.
(`துக்ளக்’ 24-8-2005 பக்கம் 24-25)

துக்ளக் `சோ’ ராமசாமி தான் ஒரு பழமைவாதி என்பதைப் பட்டாங்கமாக ஒப்புக் கொண் டுள்ளார். இதன் மூலம்தான் ஒரு நியாயவாதி என்றோ நடுநிலைவாதி என்றோ என்றைக்கும் சொல்ல முடியாத நிலைக்குத் தன்னைத் தள்ளிக் கொண்டு விட்டார்; ஒரு வகையில் இது நல்லதுதான். வீராதி வீரராக அரசியலிலும், மற்றவற்றிலும் வாலை முறுக்கிக் கொண்டு பேனா வைத் தூக்கிக் கொண்டு கிளம்பும் போதெல்லாம் நறுக்கென்று மண்டையில் குட்ட இது பயன்படக் கூடும்.

பழைமை மீதில் நாட்டம் கொள்வதற்குக் காரணமும்கூட, பார்ப்பனப் பற்றும், வெறியும் தான் பழைமையான வருணாசிரமம்தானே அவர்களைத் தூக்கி உயர் ஜாதி என்கிற யானைமீது உட்கார வைக்கிறது.

புதுமை என்றால் பழைமையான இராமாயணத்தையும், பாரத்தையும், சாஸ்திர இதிகாச வேதங்களை எல்லாம் குப்பைக் குழியில்தானே கூட்டித் தள்ள வேண்டியிருக்கும். அதனால்தான் மிகவும் விழிப்பாகவும், வினயமாகவும் பழைமைவாதி என்று தனக்குத் தானே முத்திரை குத்திக் கொள்கிறார்.

இளையராஜா போன்றவர்கள் என்னதான் பக்தியில் உருகி, சிம்பொனி இசைத் தேனில் திருவாசகத்தைக் குழைத்துக் கொடுத்தாலும், பார்ப்பனர்களின் பார்வையில் பத்துக்கு ஒன்று என்கிற மதிப்பெண்ணைக் கூடப் பெறப் போவதில்லை.

இன்னொன்றையும் இதில் கவனிக்கத் தவறி விடக் கூடாது. திருவாசகத்துக்கு இளையராஜா அமைத்திருக்கும் இசை சர்ச்சுக்குத்தான் உகந்ததாம்.
இன்னும் புரியவில்லையா? இளையராஜா இந்த திருவாசக சிம்பொனியை உருவாக்கிட நிதி உதவி செய்தது கிருத்தவ அமைப்பு; அதற்குத்தான் இந்த இந்து முன்னணி - ஆர்.எஸ்.எஸ். மொத்து.

இனிமேலாவது இளையராஜாக்களின் கண்கள் திறக்குமா? சர்ச்சுகளின் மண்டையில் தான் உறைக்குமா?

நன்றி: விடுதலை

3 comments:

Anonymous said...

காரணம் இளையராஜா ஒரு சூத்திரன். அவருக்கு உதவிய கிறிஸ்தவ பாதிரியார் சூத்திரனுக்கு சூத்திரன்.

பார்ப்பனர்கள் குடுமியிலிருந்தாலும் மொட்டையிலிருந்தாலும் 'பார்ப்பான் பார்ப்பான்' தானு கீ.வீரமணி சொன்னது உண்மைதான்.

சிம்பொனியை கூட ஸிம்பொனி என்று விளிக்கும் "ஸோ" ராமா ஸாமியை மொட்டயில் ஆணியால் அடித்து கிருமி பொஜனம் செய்ய வேண்டும்.

புதிய பதிவு பின்னூட்டம் ஏற்கவில்லை.

Anonymous said...

இந்தப் பார்ப்பனர்கள் 'கடல் தாண்டி' வந்தாலும் பூணூல் போட்டுக்கிட்டுத்தான் NASA-வுக்குக் கூட வேலைக்குப் போவானுக.

ஏன் அக்கிரகாரத்திலியே இருந்து 'உஞ்சவ்ருத்தி' செய்ய வேண்டியதுதானே? 'பழமையை' போற்றிக்கிட்டு?

வெள்ளைக்காரன் ஊரிலே கோயில் கட்டலாமோ? அதுல இவனுக ஆச்சாரம் போகலியா?

அமேரிக்காவிலே, 'கிறிஸ்தவன்' காலை நக்கி சம்பாரிச்ச டாலரத்தான இவனுக IDRF மூலமா RSSக்கு அனுப்பி வக்கிறானுவ??

இந்தப் பார்ப்பனக் கும்பல் என்றைக்கும் தமிழ் விரோத - தமிழர் விரோதக் கும்பலே.

சோ-வுக்கு நாடி நரம்பெல்லாம் பூணூல்தான்னு நமக்குத் தெரியாதா? ;)

Anonymous said...

poonul pottu chovukku jaalra adikkum paapara maama(maamikalae) pathil sollungal