8.07.2005

சவுந்தர்ய லஹரி (96) - அறிவு விருத்திக்கு

கலத்ரம் வைதாத்ரம் கதிகதி பஜந்தே நகவய:
ச்ரியோ தேவ்யா: கோ வா ந
பவதி பதி: கைரபி தநை:
மஹாதேவம் ஹித்வா தவ
ஸதி ஸதினா மசரமே
குசாப்யா மாஸங்க: குரவக
தரோ ரப்யஸூலப:

பொருள்: பார்வதி அன்னையே! பிரம்மனின் மனைவியும், கல்விக்கரசியுமான சரஸ்வதியின் அருள் பெற்று இப்பூமியில் எத்தனையோ பேர் உள்ளனர். அவளை வசப்படுத்தி பெற்ற கல்வியால், செல்வமும் பெற்றனர். சரஸ்வதியையும், லட்சுமியையும் வசப்படுத்திய அவர்கள், உன்னை மட்டும் வசப்படுத்த இயலவில்லை. ஆனால், ஈசனாகிய சிவன் உன்னை மார்போடு அணைத்து வசப்படுத்திக் கொண்டார். இந்த ஸ்பரிசம் உன் அருகில் காலம் காலமாய் இருக்கும் மருதாணி மரத்திற்கு கூட கிட்டவில்லை.

(இந்த ஸ்லோகத்தைச் சொன்னால் அறிவு விருத்தியாகும்.)

நன்றி: தினமலர்

2 comments:

Anonymous said...

சூப்பர்

aathirai said...

siriththu vayiru punnagiyadhaal marundhu anuppi vaikkavum.